சமுதாய மக்களை கொதிப்படைய வைத்த செய்தி:
ஒரு முஸ்லிமுக்கு ஹஜ்ஜு செய்வது எப்படி கடமையோ அதேபோல திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போடுவது கடமை!
ஒரு முஸ்லிமுக்கு நோன்பு எவ்வாறு ஃபர்ளு கடமையோ அதேபோல திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போடுவது கடமை!
ஒரு முஸ்லிமுக்கு நபி ஸல் அவர்களின் பெயரைக் கேட்டால் அ
வர்கள் மீத ஸலவாத்து சொல்வது கடமையோ அதேபோல திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போடுவது கடமை!
மேலே உதிர்த்த முத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் சாட்சாத் பேராசிரியர் எம்.காதர் மைதீன் அவர்கள்!
அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு விதியாக்கியத்தை போன்று இவரும் திமுக
கூட்டணிக்கு முஸ்லிம்கள் ஓட்டுப் போடுவது கடமையாக்கியுள்ளார்.
நமக்கு ஒரு சந்தேகம் இந்த ஃபத்வா இந்த தேர்தல்வரைதானா அல்லது ஒரு முஸ்லிம் மரணம் வரை கடைபிடிக்க வேண்டுமா?
இவரை என்ன செய்யலாம் ?
நன்றி:முகநூல்நண்பன்
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்காக ஆணையம் அமைத்த
காரணத்தால் அதிமுகவை ஆதரிக்க தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது. ஆனால்
ஜெயலலிதா அவர்களின் பிரச்சார
க் கூட்டங்களில் நமது கொடிகளைக் காணவில்லை. மாநில நிர்வாகிகளின் சூறாவளிப் பிரச்சாரத்தையும் காணவில்லை. இதற்குக் காரணம் என்ன?
பி.ஜே அவர்களின் பதில் :
எந்தக் கட்சியை நாம் ஆதரிப்பதாக இருந்தாலும் தார்மீக ஆதரவு என்றால் அதற்கு
எந்தச் செலவும் இல்லை. ஆனால் தீவிரப் பிரச்சாரம் செய்வதாக இருந்தால்
அதற்கு பெரிய அளவில் பொருட் செலவு தேவைப்படும். நம் ஜமாஅத்தில் இது போன்ற
பணிகளுக்குச் செலவிட எந்த நிதியும் இல்லை.
மார்க்கப் பணிகளுக்காக
மக்கள் தரும் நிதியை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினால், இது, நிதி
அளித்த மக்களை ஏமாற்றுவதாகத்தான் இருக்கும்; மார்க்கத்திலும் இது பாவமாக
ஆகிவிடும்.
எந்த
இயக்கத்தையும் சாராதவர்கள் என்பது ஒரு போர்வை தான். தவ்ஹீத் ஜமாஅத்தின்
பக்கம் மக்கள் நம்பிக்கை வைத்து செல்வதைப் பிடிக்காத சிலர் அவதூறு பரப்பி
மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பார்கள். அதைச் சாதாரண மக்களும் புரிந்து
கொள்வதால் உரிய முறையில் இதை நாம் எதிர்கொள்ள முடியும்.
தவ்ஹீத்
ஜமாஅத் மீது அவதூறு பரப்பினாலும் அதன் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை
என்பதைக் காணும் சிலர் தந்திரமான முறையில் மக்களை தவ்ஹீத் ஜமாஅத்தில்
இருந்து அப்புறப்படுத்தும் வேலையைச் செய்வார்கள்.
”நமக்கு யாரும் வேண்டாம்; நாம் எதிலும் சேராமல் இருப்போம்’’ என்று கூறுவது தான் அந்தத் தந்திரம்.
?
ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸையும், கருணாநிதியையும்
மட்டுமே விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவை இதுவரை விமர்சனம் செய்யாமல்
இருக்கிறார். தேர்தலுக்கு பின்னர் மோடி பிரதமராவதற்கு தனது ஆதரவைத்
தெரிவிப்பாரோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது.
கருணாநிதி அவர்கள், ராகுலும் மோடியும் அல்லாத ஒருவர் பிரதமராவதற்கு ஆதரவு அளிப்போம் என்று கூறியுள்ளார்.
நேற்று காலை 11 மணியளவில் அதிமுக வேட்பாளர் கு.பரசுராமனுக்கு ஆதரவு அளிக்க
வேண்டி அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு மாநில அமைச்சர் வைத்திலிங்கம்
சென்று ஆதரவு திரட்டினார்.
அதிரைக்கு வருகை தந்த அமைச்சர்
மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை
கிளையின் நிர்வாகிகள், கடற்கரைதெரு முக்கியஸ்தர்கள், காந்தி நகர் பஞ்சாயத்தார், கரையூர் தெரு பஞ்சாயத்தார் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
நடைபெறவிருக்கும்
2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை
ஆதரிப்பது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு எந்த ஒரு தனி நபரையோ அல்லது கட்சியையோ
முன்னிறுத்தி அமையாது. சமுதாய நலனை மட்டுமே கருதி முடிவெடுக்கும்.
தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை
அதிகரிப்பதற்கான முயற்சியை அதிமுக அரசு செய்துள்ளதால், இந்தத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பிரச்சாரத்தின்போது சமுதாயத்தின் நலனையும், கண்ணியத்தையும் தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத்தின் கட்டுப்பாட்டையும், நம்பகத்தன்மையையும் பாதுகாக்கும்
வகையில் நம்முடைய பிரச்சார முறைகள் அமையவேண்டும் என்பதற்காக பின் வரும்
வழிமுறைகள் வழங்கப்படுகிறது.
சிவசேனாவிடம் ஆதரவு கேட்ட அதிமுகவிற்கு ஆதரவா?
தேர்தலுக்குப் பிறகு பிஜேபியை ஆதரிக்கமாட்டேன் என்று வாக்குறுதி வழங்காத ஜெயலலிதாவை ஆதரிக்கலாமா?
திமுக ஆதரிக்கும் பிரதமர் - ராகுலும் இல்லை; மோடியும் இல்லை என்று சொல்லிவிட்ட கருணாநிதியை ஆதரிக்க மறுப்பது ஏன்?
பிஜேபியை விமர்சிக்காமல் மௌனம் காக்கும் ஜெயலலிதாவின் திட்டம் என்ன?
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: TNTJவின் நிலைபாடு சரி என நிரூபித்து, கருணாநிதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர்!
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித்தர பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
உடனடியாக பரிந்துரைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக
அரசு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஆணை பிறப்பித்தது லட்சக்கணக்கான
முஸ்லிம்கள் பங்கேற்ற சிறைநிரப்பும் போராட்டத்திற்கு மதிப்பளித்து,
முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த
உத்தரவை பிறப்பித்துள்ளார்.