அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label மமக. Show all posts
Showing posts with label மமக. Show all posts

Sunday, January 12, 2014

தேர்தல் கூட்டணி முடிவில் மமக அவசரம் காட்டியது ஏன் ?

சென்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் கைகோர்த்து களமிறங்கி இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற மமக தொடர்ந்து அந்த அணியில் சென்ற உள்ளாட்சித் தேர்தல்வரை ஒன்றாகவே இணைந்து செயல்பட்டது இன்னும் சொல்லபோனால் அதிமுகவின் சிறுபான்மைப்பிரிவாகவே மாறிப்போனது என்றே சொல்லலாம்.

டிசம்பர் 25 அன்று தமிழகத்தில் கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தானேபுயல் கடும் சேதத்தை ஏற்ப்படுத்தியது அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அணைத்து அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தங்களாலான உதவியை செய்தனர்.

இதில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து பதிக்கப் பட்ட அந்த மக்களை ஓரளவு மீட்டனர் தொடர்ந்து வந்த ஜனவரி 18ம் தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட்டிர்க்கான விவாதத்தின் போது பேசிய மமக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் கடலூர் மாவட்டம் சுனாமிக்குப் பிறகு மாவட்டம் மிகப்பெரிய அழிவைச் சந்தித்துள்ளது ஆனால் மாநில அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையின் விளைவு அந்த மாவட்ட மக்கள் மணம் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர் எந்த அளவிற்க்கென்றால் அரசின் இந்த நிவாரண உதவியைப் பார்த்து அண்டை மாவட்ட மக்கள் இதுபோல ஒரு புயல் நமது மாவட்டத்திற்கு வராதா அதனால் நமக்கும் இம்மாதிரியான நிவாரண உதவிகள் கிடைக்குமே என்று ஏங்குகிறார்கள் என்று பேசினார்.

Tuesday, August 14, 2012

நபி வழியை அழிக்கத் துடிக்கும் இஸ்லாமிய போராளிகள்(?)‎

முஸ்லிம்களின் நலன் காக்கும் கட்சி என்று தங்களைச் சொல்லிக் கொண்டு ‎இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் அழிப்பதை ஒன்றை மட்டுமே ‎அஜெண்டாவாக வைத்து செயல்படும் ம.ம.கட்சியினரின் அட்டூழியம் வர வர ‎எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது.‎

இஸ்லாமியர்களை கருவறுக்கத்துடிக்கும் பிஜேபி இல.கணேசனுடன் ‎கைகோர்த்து போஸ் கொடுத்ததாகட்டும், கொலைக்கு கொலைதான் தீர்வு ‎என்ற அல்லாஹ்வின் சட்டத்தை அழிக்கத்துடித்து தீர்மானம் ‎நிறைவேற்றியதாகட்டும். இப்படி இவர்களது போக்கு அதளபாதாளத்தை ‎நோக்கியும், நரகப்படுகுழி நோக்கியும் சென்று கொண்டிருக்கும் ‎இதேவேளையில், நபி வழி அடிப்படையில் ஒரு ஜனாஸாவை நல்லடக்கம் ‎செய்யவிடாமல் இவர்கள் தடுத்து, அங்கு கலவரம் செய்து நபி வழி ‎அடிப்படையில் ஜனாஸாவை நல்லடக்கம் செய்த டிஎன்டிஜேவினர் மீது ‎கொலைவெறித் தாக்குதல் நடத்தி தாங்கள் எத்தகைய கொலைவெறியர்கள்; ‎இஸ்லாமிய எதிரிகள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.‎‎ 

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் இவர்களது இந்த ‎கொலைவெறிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.‎

Sunday, July 29, 2012

பதவி வெறி என்றால் என்ன என்று பாடம் ‎நடத்திக்காட்டிய வாத்தியார்!‎

ம.ம.கட்சியின் மூத்த தலைவர் வத்தியாரின் பதவி வெறி ரொம்ப ‎முற்றிப்போய் அந்தப் பதவி வெறி மிக உச்சத்தை எட்டியுள்ளது.‎
‎ 
கடந்த வாரம் பத்திரிக்கைகளில் வெளியான செய்தி அவர் எந்த அளவிற்கு ‎பதவி வெறி பிடித்து அலைகின்றார் என்பதைப் படம் பிடித்துக்காட்டியுள்ளது.‎
‎ 
சமீபத்தில் வக்ஃபு வாரியத்திற்கு உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு ‎உத்தரவு பிறப்பித்தது. அதில் நமது ஜால்ரா மன்னனின் பெயர் இடம் ‎பெறவில்லை. இந்த அளவிற்கு அம்மாவிற்கு சிங்கி அடித்து, ஜிங்சா ‎தட்டியபோதும், அ.தி.மு.க.வினரே ஆச்சர்யப்படக்கூடிய அளவிற்கு அம்மா ‎புகழ் பாடிய போதும் தனக்கு அதில் இடம் வழங்கப்படவில்லையே என்று ‎நொந்து கொண்ட நமது ஜால்ரா மன்னன் சீறி எழுந்தார்.‎
‎ 

Friday, July 27, 2012

சலீமுல்லாகான் குமுதம் ரிப்போர்டருக்கு அளித்த பேட்டி!

காலியாகும் மமக கூடாரம்!

கடந்த 15.07.12 அன்று ஞாயிற்றுக்கிழமை இராமநாதபுர மாவட்டத் திலுள்ள மண்டபம் திருப்புலாணி பாம்பன் இராமேஸ்வரம் வேதாளை தங்கச்சிமடம் ஆகிய தமுமுக மற்றும் மமகட்சி கிளைகள் கூண்டோடு கலைக்கப்பட்டு தமுமுக மற்றும் மமக மாநிலச்செயலாளர் சலீமுல்லாகான் (இவர் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் மமக சார்பில் போட்டியிட்டு மமக  வேட்ப்பாளர்களிலேயே அதிக வாக்குப்பெற்றவர் சுமார் 23 ஆயிரம் வாக்குகள்) தலைமையில் மற்றும் மமகவின் மாவட்ட செயலாளர் தஸ்ஃபிக் அலி தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் அஜ்மல் மற்றும் எராளமான மமகவினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!

Tuesday, July 10, 2012

அகில உலக ஜால்ரா மன்னன் புளுகு மன்னனாக மாறிய கதை!

பா.ஜ.கவுடன் கைகோர்த்த ம.ம.கட்சி!‎என்ற தலைப்பில், மானம் கெட்ட வாத்தியார், சங்பரிவாரத் தலைவர் இல.கணேசனுடன் கைகோர்த்து போஸ் கொடுத்து நின்ற செய்தியை  புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தோம்.

சட்டமன்றத்தில் ஜனாஸாவாக வீற்றிருக்கும் ம.ம.கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ், பி.ஜே.பி.யின் மூத்த தலைவர் இல.கணேசனுடன் கை கோர்த்துக் கொண்டு உற்சாகமாக போஸ் கொடுத்து நின்றது ஏன்? என்பதற்கு அற்புதமான(?) விளக்கத்தை அளித்துள்ளார்.
ம.ம.கட்சி தொண்டர்களே இந்த விஷயத்தில் அவரைக் காரித்துப்பி கேள்வி கேட்டவுடன் செய்வதறியாது விழிபிதுங்கிய சட்டமன்ற ஜனாஸா, வேறுவழியின்றி தனது அந்த மானங்கெட்ட செயலை நியாயப்படுத்தி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த மய்யித்து அறிக்கை குறித்து இங்கே அலசுவோம்.
இதுவரைக்கும் இவர், “அகில உலக ஜால்ரா மன்னன்” என்ற பட்டம் பெறுவதற்குத்தான் முயற்சி செய்து வருகின்றார் என்றுதான் நாம் நினைத்திருந்தோம். இவரது இந்த அறிக்கையைப் பார்த்தபிறகுதான், “அகில உலக புளுகு மன்னன்” என்ற பட்டமும் தனக்கே வர வேண்டும் என்று இவர் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளார் என்பது நமக்குத் தெரியவந்துள்ளது.

Wednesday, July 04, 2012

பா.ஜ.கவுடன் கைகோர்த்த ம.ம.கட்சி!‎


அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவாக செயல்படுவதிலிருந்து விலகி, பா.ஜ.கவின் ‎சிறுபான்மைப் பிரிவாக மாறி அவர்களுடன் கூட்டணி வைக்க திட்டமா?‎ – வெளிவராத உண்மைகள்!!‎
மாமல்லபுரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது தலசயன பெருமாள் கோயில். ‎இதை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் முடிவை தொல்லியல் துறை ‎எடுத்துள்ளது. இந்தக் கோவிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக்கூடாது. ‎அவ்வாறு அறிவித்தால் அந்தக் கோவிலில் நடக்கக்கூடிய பூஜைகள் தடைபட்டுவிடும்; ‎அதுமட்டுமல்லாமல் அங்கு பூஜை செய்ய வரக்கூடிய பக்தர்கள் இதனால் ‎பாதிக்கப்படுவார்கள் என்று சங்பரிவாரங்கள் கூப்பாடு போட்டு வருகின்றனர்.‎
ஏற்கனவே 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழைய ‎அலைவாயில் கோவில் மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் பூஜைகள் ‎இன்றி பாழடைந்து கிடக்கும் நிலையில், 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பலமுறை ‎புதுப்பிக்கப்பட்டு பக்தர்களின் அனுதின வழிபாட்டில் உள்ள கீர்த்திக்குரிய தலசயன ‎பெருமாள் கோவிலை மத்திய தொல்பொருள் துறை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் ‎கொண்டுவர கடந்த 20.05.2012 அன்று தேதியிட்ட நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி ‎உள்ளது. இந்தக் கோவிலை மத்திய தொல்பொருள் துறை எடுத்துக் கொள்ள ‎முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது” என்று இந்த கோவிலுக்கு ‎ஆதரவாக கண்டன அறிக்கை விட்டு வருகின்றனர்.‎
பக்தியின் அடிப்படையில் இவ்வாறு அவர்கள் அறிக்கை விடுவது மேலோட்டமாக ‎அணுகக் கூடிய விஷயம் அல்ல, பழமையான ஆலயங்களை பழமையான ‎கட்டடங்களைப் பாதுகாக்க இந்த நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தச் ‎சட்டத்தின்படி இவ்வளவு காலம் கடந்து விட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‎கட்டடங்களை தொல் பொருள் துறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தின் படியே ‎ஏராளமான கோவில்களும் சில பள்ளிவாசல்களும் இன்னும் பல புராதனக் ‎கட்டடங்களும் மத்திய அரசின் தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி ‎வருகின்றன.‎

Friday, May 25, 2012

ஜால்ரா தட்டுவதில் சரித்திர சாதனை! (வீடியோ இனைப்பு


அரசியல் என்று போய்விட்டாலே ,பதவி சுகம் கண்டுவிட்டாலே அந்த பதவிசுகத்திற்காக எப்படிப்பட்ட இழிச்செயளையும் செய்யலாம் என்ற நிலைக்கு ஒருவன் ஆளாகிவிடுவான் என்பதற்கு ம .ம .கட்சி சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றது .எங்களுக்கு சீட்டுகள் யார் கூடுதலாகத் தருகின்றார்களோ அவர்களுடன்தான் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று பச்சோந்தித்தனம் செய்வதில் ஆரம்பித்து ஓட்டுப் பொறுக்குவதற்காக மானமிழந்து .மரியாதை இழந்து ,கடைசியில் வாரியப்பதவி தரமாட்டார்களா?என்று ஒரு சிறு எலும்புத்துண்டுக்காக ஜெயலலிதாவை போற்றி புகழ்ந்து அவரை துதி பாட ஒரு எல்லையே இல்லை என்ற அளவிற்கு செய்துவிட்டனர் ம ம கட்சியினர் .

கூடிய விரைவில் ஜால்ரா தட்டுவதில் இவர்களை மிஞ்ச ஆளில்லை என்று தமிழக கட்சிகளே மூக்கின் மேல் விரல் வைக்கக்கூடிய அளவிற்கு ,சிறந்த ஜால்ரா தட்டி என்ற சிறப்புப் பட்டத்தை இவர்கள் தட்டிச் சென்று விடுவார் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம் .


Friday, November 04, 2011

ஓட்டுபிரிக்கும் ஒற்றுமை வேடதாரிகள்....!

கொள்கையில் பின்வாங்காமல் நிற்கின்றான் என்பதற்காக மட்டுமே ஏகத்துவ சகோதரர்களை முழு மூச்சாய் எதிர்க்கும் பணியை ஒற்றுமையை கையாளும் நம் சகோதர இயக்கங்கள் அரசியல் பதவிகளைப் பிடிப்பதில் மட்டும் ஒன்று சேர மாட்டோம் என தங்களின் செய்கைகளின் மூலம் பல நேரங்களில் வெளிப்படுத்தி விடுகின்றனர்

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஜெயிக்க போவது யாரு இந்துவா முஸ்லிமா என்ற தலைப்பில் நக்கீரன் பத்திர்க்கை போஸ்டரை வெளியிட்டு தன் விசமதனத்தை வெளிப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு போட்டியிட்ட முஸ்லிம் வேட்ப்பாளர்கள் மற்று அணிக்கு அமோக வெற்றியை தேடித் தந்துள்ளார்கள் என்ற செய்தி அந்த பகுதி மக்களிடையே இவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Monday, April 25, 2011

வரிந்து கட்டிய வார இதழ்….வாக்களிக்காத வாத்தியார்...

புரட்சி நடிகர் எம்ஜிஆருக்குப் பிறகு அனைத்துத் தரப்பு மக்களாலும் வாத்தியார்என அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்படுபவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா. தன்னை வாத்தியார் என்று அழைப்பதையே அவரும் விரும்புகிறார். அதன்காரணமாகத்தான் இந்த தேர்தலுக்கு அம்மா!! அம்மா!! என தலைப்பிட்டு அடித்தஅத்தனை நோட்டீஸ்களிலும் எம்ஜிஆருக்குப் பக்கத்தில் தன் படத்தைஇடம்பெறச் செய்தார் இந்த வாத்தியார்
தேர்தலில் போட்டியிடுவது ஹராம் என்ற பலதலைப்புகளில் பல கட்டுரைகள்எழுதியிருக்கும் இந்த பேராசிரியரின் மனதில் புகுந்த பதவி ஆசை அவர்அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தைக் கூட தூக்கி குப்பையில் வீசியெறியும்அளவிற்கு கொண்டு வந்து விட்டதுசரி மார்க்கத்தைத் தான் தூக்கி எறிந்துவிட்டார்கள்ஜனநாயகக் கடமையாவது சரிவர ஆற்றினார்களா என்றால் அதுவும்கிடையாது.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y