ஆந்திர மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் தில்சுக் என்ற பகுதி இருக்கிறது.
இங்குள்ள கொனார்க் என்ற சினிமா தியேட்டர் அருகே பிப்ரவரி 21ஆம் தேதி இரவு
7.10மணி அளவில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. பின்பு 5 நிமிடங்கள் கழித்து அதே
பகுதியில் உள்ள ஆனந்த் ஹோட்டலில் இரண்டாவது குண்டு வெடித்தது.
அடுத்த 15நிமிடம் கழித்து வெங்கடாத்திரி என்ற தியேட்டரில் 3-வது வெடிகுண்டு
வெடித்தது. இந்தக்குண்டு வெடிப்புகளில் சிக்கி இதுவரை 16பேர்
இறந்துள்ளனர். சுமார் 116பேர் காயமடைந்துள்ளனர். குண்டு வெடிப்பில்
இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா
ரூ50ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
