அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label சமூக பிரச்சினை. Show all posts
Showing posts with label சமூக பிரச்சினை. Show all posts

Sunday, January 13, 2013

வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் வெறியாட்டம்! கண்டித்து களமிறங்கிய முஸ்லிம்கள்!!

e
பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்களை அந்தக் கொடுமைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுதந்திர இந்தியாவில் கொண்டு வரப்பட்டதுதான் வன்கொடுமை தடுப்புச் சட்டம். இந்த சட்டத்தின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை ஜாதியைச் சொல்லி யாராவது திட்டினால், இந்த சட்டத்தின் மூலம் அவர்களை சிறைக்கு அனுப்பலாம். அதுமட்டுமல்லமால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான பலதரப்பட்ட கொடுமைகளுக்கு தகுந்தாற்போல இந்த சட்டத்தின் வாயிலாக ஆயுள் தண்டனை அல்லது 10ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனை வழங்கும் வகையிலும் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

Friday, January 04, 2013

மதுரை ஆதினம் கூறிய கருத்து சரியா? – சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் – TNTJ vs மாதர் சங்கம்!

மதுரை ஆதினம் கூறிய கருத்து சரியா?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் VS மாதர் சங்கம்
நேருக்கு நேர் – (மகளிர் விவாதம்)
சன் நியூஸ் தொலைக்காட்சியில்
இன்ஷா அல்லாஹ்…..
05.01.13 – சனிக்கிழமை இரவு 9மணி முதல் 9.30 வரையிலும்,
அதன் மறுஒளிபரப்பு
06.01.13 – ஞாயிறு காலை 8.30 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பாக உள்ளது.
இதனுடைய தொடர்ச்சி இரண்டாம் பாகம் :
அடுத்த 12.01.13 – சனிக்கிழமை இரவு 9மணி முதல் 9.30 வரையிலும்,
இரண்டாம் பாகத்தின் மறுஒளிபரப்பு
13.01.13 – ஞாயிறு காலை 8.30 மணி முதல் 9 மணி வரையிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

காணத்தவறாதீர்கள்!

Print This page

Monday, July 16, 2012

உடனடி தேவை இஸ்லாமிய குற்றவியல் சட்டமே!

செய்தி  : ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற திருடனை காட்டிக்கொடுத்த அப்பாவி ஆட்டோ டிரைவர் ஜாமீனில் வெளிவந்த அந்த திருடனால் நடுரோட்டில் வைத்து கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

செய்தி  : அண்ணியை கற்பழித்து கொடூரமான முறையில் கொலை செய்தவன் பல ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை அவனை தொடர்ந்து சிறையில் வைக்க எந்த முகாந்திரமும் இல்லை மேலும் தொடர்ந்து  சிறையில் வைக்க சட்டத்தில் இடமில்லை என நீதிபதிகள் அறிவிப்பு ஏனென்றால் கற்பழித்த போது  அந்த கயவனுக்கு வயது 17 நான்கு மாதமாம் அதனால் அவன் சிறுவன் என  நீதிபதிகள் தெரிவித்து விடுதலை செய்து தீர்பளித்தனர்.

மேலே குறிப்பிட்ட செய்திகள் இந்தியாவில் அணைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து நிகழ்த்து வருகிறது அவைகள் சில உதாரணங்கள் மட்டுமே இதுபோன்ற அத்துமீறும் செயல் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கு இதற்க்கெல்லாம் ஒரே காரணம் இந்திய குற்றவியல் சட்டம் மிகவும் பலகீனமாக இருப்பதே இந்திய குற்றவியல் சட்டத்தை இயற்றிய அறிவு ஜீவிகள் மனிதர்கள் என்கிற வகையில் தங்களால் முடிந்த அளவு சட்டத்தை இயற்றி உள்ளனர்.

Friday, July 06, 2012

ஆபாச உடைகளால் களவாடப்படும் கற்ப்பு ?

இன்று உலக நாடுகளில் ஏற்ப்பட்டிருக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று பெண்களின் கற்ப்பு குறித்த சர்ச்சை குறிப்பாக ஐரோப்பிய மற்றும்  அமெரிக்கா போன்ற நாடுகளில்  கற்ப்பென்றால் என்ன விலை அது எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்க்கும் அளவிற்கு அவர்களின் கலாச்சாரம் சீரழிந்துவிட்டது  அப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற சுதந்திரம் இன்று கலாசாரத்தை அதிகம் மதிக்கின்றோம் என்று சொல்லக்கூடிய  இந்தியா போன்ற நாடுகளையும் பீடித்துள்ளது தான் வேதனை.

முன்பெல்லாம் தேடிச்சென்று சினிமாவில் மட்டுமே பார்த்த கவர்ச்சி இன்று அணைத்து இடங்களிலும்  நாகரீகம் என்ற போர்வையில் நடமாடுவதை காணலாம் இந்த நாகரீகம் என்னும் ஆபாசம் விளையாட்டுத்துறை அலுவலகம் கடைவீதிகள் தெருக்கள் எல்லாம் கடந்து ஒழுக்கத்தை பயிற்றுவிக்கும் கல்விக்கூடங்களிலும் நவநாகரீகம் என்ற ஆர்ப்பரித்து விட்டதுதான் கொடுமை. 

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y