அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, November 30, 2013

ஜனவரி 28 போராட்டம் ஏன்?

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்

முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

எதிர்வரும் ஜனவரி 28ல் (செவ்வாய்) இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி உரிமை முழக்க ஆர்ப்பாட்டத்துடன் சிறை செல்லும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போராட்டக்களத்தில் பங்கேற்பவராக நீங்களும் இருக்க வேண்டும் என்று உங்களை அழைக்கிறோம்.

அன்புள்ள சகோதரா சகோதரிகளே உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றும் இருக்கிறீர்கள். அதுபோன்ற போராட்டமாக ஜனவரி 28 போராட்டத்தை எண்ணிவிடவேண்டாம்.

Sunday, November 24, 2013

பீஜேயின் தன்னிலை விளக்கம் !




அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

தனிப்பட்ட மனிதன் செய்யும் தொழில், வியாபாரம் குறித்து யாரும் கேள்விகேட்க உரிமை இல்லை. ஆனால் பொதுவாழ்வில் உள்ளவர்கள் தனிப்பட்ட முறையில் செய்யும் தொழில் பற்றி மக்களுக்குச் சந்தேகம் ஏற்படும் என்று கருதும் போது விளக்கம் அளிக்கும் கடமை பொதுவாழ்வில் உள்
ளவர்களுக்கு உள்ளது என்று நான் கருதுகிறேன். இதனால் எனது தொழில் விரிவாக்கம் பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.


எனது உடல்நிலை பாதிப்பு அடைந்து வெளியூர் பயணங்கள் செல்ல முடியாமல் போனதால் எனது நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கவும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் நானும் எனது பிள்ளைகளும் சேர்ந்து மூன்மார்ட் - moon mart என்ற பெயரில் 400 சதுர அடியில் மினி சூப்பர் மார்க்கெட் ஒன்றை மண்ணடியில் வாடகைக் கட்டடத்தில் துவக்கினோம். மக்களின் அமோக ஆதரவின் காரணமாக வாடிக்கையாளர் பெருகியதால் பக்கத்தில் உள்ள இடத்தையும் இணைத்து 700 சதுர அடியில் விரிவாக்கம் செய்தோம். இந்த நிறுவனத்துக்கு அதிக முதலீடு இல்லாததாலும் சிறிய கடை என்பதாலும் எந்த பித்னாவும் வரவில்லை.

Wednesday, November 20, 2013

Wednesday, November 13, 2013

முஸ்லீம்களை பாதுகாக்க தவறிய உபி மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

முஸ்லீம்களை பாதுகாக்க தவறிய உபி மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் சார்பாக இன்று 13/11/2013 மாலை 04:00 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

Monday, November 11, 2013

ஆஷுரா நோன்பு புதன் மற்றும் வியாழன்!


தமிழக அரசே!நடவடிக்கை எடு!! தமிழகம் முழுவதும் ஒட்டவேண்டிய நோட்டீஸ் வாசகம் !!!


எது சத்தியம் ?நேதாஜி நகர் பொதுக்கூட்டம்

நேதாஜி நகர் போதுக்கூட்டம்_10.11.2013 தலைப்பு : எது சத்தியம் ? உரை : சகோ : பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் மாநில தலைவர் TNTJ

எது சத்தியம் ? by eliya_maarkam

Sunday, November 10, 2013

பொய் வழக்குகளுக்கு எதிராக டிஎன்டிஜே போராடாதது ஏன்?

?பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயீல் உள்ளிட்ட மூவர் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது என்று தெரிந்தும் தவ்ஹீத் ஜமாஅத் ஏன் அவர்களுக்காகப் போராடவில்லை?
ரஃபீக், மேலப்பாளையம்.



!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை தெளிவான கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படும் இயக்கமாகும். 
எதில் தலையிட்டாலும் அதில் ஒட்டு மொத்த சமுதாய நன்மை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் பணிக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்குமா என்று ஆய்வு செய்துதான் எதிலும் தவ்ஹீத் ஜமாஅத் தலையிடும். இதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

Saturday, November 09, 2013

நேதாஜி நகர் பொதுக் கூட்டம் ஆன்லைன் பி.ஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு....



முஸ்லிம்இன துரோகிகள் ABCD (SDPI)அமைப்பினர்!

abcd அமைபினரின் பொங்கல் வாழ்த்துக்கள்

Tuesday, November 05, 2013

தமிழகத்தில் முஹரம் மாதத்திற்கான பிறை அறிவிப்பு.

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு :
முஹர்ரம் மாதம் ஆரம்பம்

பிறை தேட வேண்டிய நாளான நவம்பர் 4 ஆம் தேதி திங்கட்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் எந்த பகுதியிலும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை.

எனவே மேகமூட்டமாக இருந்தால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற நபி வழியின் அடிப்படையில் துல் ஹஜ் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மஹரிபிலிருந்து முஹர்ரம் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பு : வரக்கூடிய முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய பிறைகளில் ( நவம்பர் 14 வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 15 வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் ) நோன்பு நோற்பது நபி வழியாகும்.

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y