அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, August 18, 2011

யான்புவில் நடைபெற்ற இஃப்தார் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் யான்பு கிளையில் மார்க்க சொற்பொழிவு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி 17.08.2011 புதன்கிழமை அன்று நடைபெற்றது இதில் ஜித்தாவிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் சகோ.ஸௌகத் உசேன் அவர்கள் ரமலான் தரும் படிப்பினைகள்  என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவு ஆற்றினார்கள் இதில் ஏராளமான சகோதரர்கள் பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்!

Monday, August 15, 2011

யான்புவில் இஃப்தார் மற்றும் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்





ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.
நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.
ஃபித்ராவின் நோக்கம்
இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817
நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.
கொடுக்கும் நேரம்.

Wednesday, August 10, 2011

பயனுள்ள துஃஆக்கள்

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.  (அல்குர்ஆன் 2:153)
ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 2:155-156)

Saturday, August 06, 2011

மதீனா தவ்ஹீத் ஜமாஅத் மாதம் இருமுறை நடத்தும் மெயில் கேள்வி பதில் போட்டி 2


1. ,uz;L kdpjHfs; re;jpj;Jtpl;lhy; rHtrhjuhzkhf kw;wtiug; gw;wp Gwk; NgRfpNwhk;.Mdhy; my;yh`; jd; jpUkiwapy; Gwk; NgRth;fisg; gw;wp $Wk;NghJ fLikahd xU thh;j;ijia nrhy;yptpl;L mij ntWg;gPh;fs; vd;W $Wfpwhd;.my;yh`; jd; jpUkiwapy; $wpa me;j fLikahd thh;j;ij vd;d?


2.xU kdpjh; ,we;Jtpl;lhy; mtUf;F ed;ikia Nrh;j;J itf;fpNwhk; vd;W epidj;Jf; nfhz;L> 3k; ehs; ghj;jp`h> 7k; ehs; ghj;jp`h> 40k; ehs; ghj;jp`h> tUrj;J ghj;jp`h vd;W egpfs; ehafk;(]y;)mtHfs; nrhy;yp juhj gpj;mj;fis rKjhaj;jpy; gyH nra;J tUfpwhh;fs;.Mdhy; egpfs; ehafk;(]y;)miy mtHfs; nrhd;dhh;fs;. xU kdpjh; ,we;jTld; mtdJ nray;fs; midj;Jk; Kbtile;J tpLfpwJ.Mdhy; %d;iwj; jtpu vd;W $wpdhh;fs;.me;j %d;W vd;d?  


3.egpfs; ehafk;(]y;)mtHfs; nrhd;dhh;fs;.ahh; Nrhjpdplk; nrd;W mtd; $Wk; jftiy cd;ik vd;W ek;GfpwhNuh mth; K`k;kJ(]y;)miy mtHfSf;F mUsg;gl;l khh;f;fj;ij epuhfhpj;jtH Mthh; vd;W $wpdhh;fs;.mtuJ ---------------ehl;fspd; njhOiffs; mq;fpfhpf;fg;glkhl;lhJ vd;W $wpdhh;fs;. egpfs; ehafk;(]y;)mtHfs; vj;jid ehl;fspd; njhOiffs; mq;fpfhpf;fg;glkhl;lhJ vd;W $wpdhh;fs; vd $wTk;?

Friday, August 05, 2011

கையேந்திகளின் மாதமா ரமளான்?




அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி உணவு உண்டு சுபஹ் காலையில் இருந்து மாலை வரை இறைவனுக்காக உண்ணாமலும் பருகாமலும் இருந்து இறையச்சத்தை அதிகப் படுத்த வேண்டிய மாதம் இந்த ரமழான் மாதம்.

முஸ்லீம்கள் என்று சொல்லக் கூடிய சிலர் இந்த மாதத்தை கையேந்திகளின் மாதமாக மாற்றியிருப்பதுதான் மிகவும் கவலைக்குறிய விஷயமாகும்.

மகளுக்கு திருமணம் வரதற்சனை (சீதனம்)கொடுக்க வேண்டும்

மகனுக்கு நோய்

தந்தைக்கு முடியவில்லை

தாய் படுத்த படுக்கையில் உள்ளார்

சகோதரனுக்கு பேச முடியாது

சகோதரிக்கு நடக்க முடியாது

Tuesday, August 02, 2011

ஜெயலலிதாவை கண்டித்து போஸ்டர் ஒட்டிய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கைது!!! விடுவிக்கக் கோரி காவல்நிலையம் முற்றுகை!!!

கடையநல்லூரில் 01.08.2011 திங்கள் அதிகாலை 1:00 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை சார்பில் கலவர தடுப்பு மசோதாவை எதிர்க்கும் ஜெயலலிதாவை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அப்பொழுது காவல் துறையினரால் நகர டவுண்கிளை செயலாளர் ஹாஜா மைதீன் மற்றும் மாணவர் அணி செயலாளர் ரமீஸ் ஹஸன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதனை கேள்விப்பட்ட நிர்வாகிகள் நள்ளிரவில் காவல் நிலையத்தை சகோதரர்களுடன் முற்றுகையிட்டனர்.அப்பொழுது கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜ்மீம் அவர்களிடம் ஜனநாயக முறைப்படி தமிழகம் முழுவதும் இது போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.ஆகவே கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை உடனே விடுவிக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட அலுவல் செயலாளர் சகோ.சுலைமான் வலியுறுத்தினார்.அதற்கு அதிகாலை 5:00 மணிக்கு விடுவிப்பதாக கூறிய துணைக் கண்காணிப்பாளர் அவர்களை விடுதலை செய்யாமல் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.இதனைக் கேள்விப்பட்ட கடையநல்லூரைச் சார்ந்த நூற்றுக்கணக்கான சகோதரர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.( நன்றி கடையநல்லூர் TNTJ)

Monday, August 01, 2011

ரமளானில் வெள்வோம் இன்ஷா அல்லாஹ்

வருடத்திற்கு ஒரு ரமளான் வருகிறது. முப்பது நாட்கள் நோன்பு வைக்கிறோம். இறுதியாக ஒரு பெருநாள் தொழுகை. எல்லாம் முடிந்து விட்டது இனி என்ன வேலை? என்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவர்கள் நிறையப் பேர் நம்மிலே உள்ளார்கள். இதற்குக் காரணம் என்னவெனில் ரமழானின் முக்கியத்துவம் தெரியவில்லை, ரமழானை நாம் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை.


ஆம் சகோதரர்களே! ரமழானிடம் நாம் ஜெயிக்க வெண்டாமா?

ஒவ்வொரு வருடமும் நம்மைத் தாண்டி செல்லும் புனித மிக்க ரமழானை நாம் சரியாகப் பயன்படுத்துவதே ரமழானை நாம் ஜெயித்துவிட்டோம் என்பதற்கான சரியான பதிலாக இருக்க முடியும்.

பொதுவாக ரமழானில் நாம் செய்யும் காரியங்களை பட்டியல் போட்டுப் பாருங்கள். என்னெவெல்லாம் செய்கிறீர்கள் என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள முடியும்.

தமிழகத்தில் ரமளான் பிறை ஆரம்பம் – பிறை இன்று (1-8-2011) தென்பட்டது!


தமிழகத்தில் இன்று (1-8-2011) மாலை நாகை , நெல்லை, பெரம்பலூர் , ஈரோடு , திருப்புர் , திருவள்ளுர் , சேலம் , அரக்கோணம் , தஞ்சை , நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று  (1-8-2011) மக்ரிப்லிருந்து ரமளான் பிறை 1 ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
-தலைமையகம்

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y