அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, June 18, 2011

இரத்த தான சேவையில் தம்மாம் மண்டலம் தொடர்ந்து ஐந்து வருடங்களாக முதல் இடம்















அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்க மற்றும் சமுதாய பணிகள் கடல் கடந்து சிறப்பான முறையில் நடைபெற்றுக் கெண்டுள்ளன.


சமுதாய பணிகளில் முதன்மையாக மருத்துவ உதவி மற்றும் இரத்த தாண முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தம்மாம் மண்டலமும் கிங் ஃபஹத் மருத்துவமனையும் இணைந்து கடந்த ஐந்து வருடங்களாக இரத்த சிறப்பாக நடத்தியுள்ளது.
ஒவ்வெரு வருடமும் ஜீன் 14ம் நாள் உலக இரத்த தான தின நாளில், இரத்த தாண சேவையில் சிறப்பாக பணியாற்றிய நிறுவனம் மற்றும் இயக்கங்களுக்கு பாராட்டி விருது வழங்கி கவுரவிப்பார்கள்.
கடந்த 14.06.2011 அன்று கிங் ஃபஹத் மருத்துவமனையில் உலக இரத்த தாணம் தினைத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
கடந்த 5 வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தம்மாம் மண்டலம் தொடர்ந்து முதலிடம் வகித்து சிறப்பான முறையில் இரத்தான முகாம்களை நடத்தியதற்கு மருத்துவமணையின் தலைவர்; டாக்டா; அப்துல்லாஹ் பின் முஹம்மது அல் ருபைஷ் அவர்கள் பாராட்டி, விருதுகளை வழங்கினார்கள்.
தம்மாம் மண்டலத்திற்க்கு வழங்கப்பட்ட விருதை மண்டல தலைவா; சகோ. அமின் மற்றும் துனை தலைவா; சகோ. உமா; பாருக் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள். விருதுகள் வழங்கி கௌரவித்த மருத்துவமனைக்கும் சிறப்பான முறையில் பங்கெடுத்த சகோதரர்களுக்கும் நன்றி தெரிவித்து, இன்ஷா அல்லாஹ் வரும் 08-07-2011 அன்று அல்-கோபார் 1 மற்றும அல்-கோபார் 2 இனைந்து 13வது இரத்த தாண முகாம் நடத்துவது என்ற முடிவு அறிவிக்கபட்டது. எல்லாப் புகமும் அல்லாஹ்வுக்கே.

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y