அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, June 18, 2011

மது அருந்துதல் உலக அளவில் 10வது இடத்தில் வந்து கேவலப்பட்ட மலேசியா!

மலேசியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு என்று சொல்லப்பட்டாலும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படியிலான சட்டங்கள் இங்கு அமுலில் இல்லை இதனால் இங்கு மது விற்பனை சக்கை போடுபோடுகிறது. 
 உலக சுகாதார அமைப்பு அதிகம் மது குடிக்கும் மக்களைக் கொண்ட நாடுகள் பட்டியல் ஒன்றை தயாரித்தது இதில் மலேசியாவிற்கு 10வது இடம் கிடைத்துள்ளது. 
 கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மலேசியர்கள் மதுவிற்காக செலவிட்ட தொகை 2250 கோடியாம் சராசரியாக ஒரு மலேசியன் 11 லிட்டர் பீரை அருந்துகிறாராம்  மலேசியர்கள் அருந்தும் ஆல்கஹால் அதிகம் உள்ள மது சராசரியாக 7 லிட்டராம் சர்வே முலம் கிடைத்த இந்த கணக்கெடுப்புகளைக் கொண்டு உலக அளவில் மலேசியாவிற்கு 10வது இடத்தை தந்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

இந்த புள்ளிவிபரங்கள் வெளியானவுடன் செய்தியாளர்களை சந்தித்த மலேசியா குடும்ப நல அமைச்சர் ஹெயஷ் செய்ஹி மலேசியக கலாச்சாரத்தில் மதுவிற்கு இடமில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்று கூறியதோடு மதுவின் தீமைகள் பற்றி மலேசியா அரசு சார்பில் மலை தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
மலேசியாவில் இந்து கிருத்துவம் தாவோயிசம் புத்தம் ஆகிய மதங்கள் இருந்த போதும் முஸ்லிம்களே பெரும்பான்பையினராக உள்ளனர் ஆனால் இந்த முஸ்லிம்கள் தூய இஸ்லாத்தை பின்பற்றுபவர்களாக இல்லை மாறாக பிற மத கலாச்சாரங்களை காப்பி அடித்து வாழ்பவர்களாகவே உள்ளனர் ஒரு முஸ்லிம் நாட்டில் மதுப்பழக்கம் அதிகமாக இருக்கின்றது என்ற செய்தி முஸ்லிம்களுக்கு மிக கேவலமான ஒன்றாகும்.
மலேசியா முஸ்லிம்களிடம் பணம் இருக்கு அளவிற்கு மார்க்கப் பற்று இல்லை மார்க்கப் பற்றை ஏற்ப்படுத்தும் அமைப்புகளையும் தனி மனிதர்களையும் மலேசியா அரசு ஒருவிதத்தில் ஒடுக்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
 இந்த தவறான அணுகுமுறையை மலேசியா அரசு கைவிட்டால் அங்கு மார்க்கப் பற்று ஏற்ப்படும் அது மதுப்பழக்கத்தை வேரோடு வெட்டிச் சாய்த்துவிடும் இந்த நல்ல சூழ்நிலை ஏற்ப்பட மலேசியா ஆட்சியாளர்கள் மனது வைப்பார்களா?  

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலைவணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அஹமத்)


அல்லாஹ் கூறுகிறான்:

விசுவாசம் கொண்டோரே! நிச்சயமாக மதுவும் சூதாட்டமும் (வணக்கத்திற்காக) நாட்டப்பட்டுள்ளவை(களான சிலை)களும் குறிபார்க்கும்(சூதாட்ட) அம்புகளும் ஷைத்தானுடைய செயல்களிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே இவைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றிபெறுவீர்கள். (அல்குர்ஆன்
5:90)



நன்றி:உணர்வு இதழ்  

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y