அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, November 07, 2014

அப்பாஸ் அலி நீக்கம் ஏன்?


Friday, October 17, 2014

ஜெயலலிதாவிற்கு அளித்த தீர்ப்பு சரியா?

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து என்ன?

ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கி அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகக் கருத்து சொல்பவர்களும், ஆதரவாகக் கருத்து சொல்பவர்களும் எல்லை மீறி உண்மைகளை மறைத்து கருத்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

உடனடியாக கருத்து சொன்னால், இரண்டில் ஒரு கருத்துடையவர்களின் பட்டியலில் நம்மையும் சேர்த்து விடுவார்கள்.

Saturday, September 27, 2014

பிஜே அவர்களின் முக்கிய அறிவிப்பு!

அன்புள்ள கொள்கைச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எனது தொழிலை விரிவுபடுத்திட  சிறிது காலம் என்னை பொறுப்பில் இருந்து விடுமுறை தருமாறு ரமலானுக்கு முன்பிருந்தே நிர்வாகக் குழுவில் கேட்டு வந்தேன். நிர்வாகக் குழுவில் பல முறை வலியுறுத்திய பிறகு தற்போதுதான் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். சூனியத்துக்கு எதிரான மண்ணடி கூட்டத்திலும் இது பற்றி நான் குறிப்பிட்டுள்ளேன். பித்னாக்களுக்கும் அவதூறுகளுக்கும் முகம் கொடுத்தால் தொழிலில் கவனம் செலுத்த முடியாது. தொழிலில் கவனம் செலுத்தினால் ஆய்வுகள் செய்யவும் உலக விஷயங்களை அதிகம் அறிந்து கொள்ளவும் நேரம் ஒதுக்க முடியாது. எனவே தான்  எனக்கு இந்த விடுமுறை தேவைப்படுகிறது. எனது தொழில் விரிவாக்கம் அடைந்து எனது வேலைப்பளு குறையும் போது அல்லாஹ் நாடினால் என்னால் இயன்ற அளவுக்கு பணியாற்றுவேன். அனைத்து பிரச்சனைகளையும் சிறப்பாக கையாளும் நிர்வாகிகள் திறம்பட செயல்பட நானும் துஆ செய்கிறேன். நீங்களும் துஆ செய்யுங்கள். நான் புதிதாக துவங்கவுள்ள இன்னொரு தொழில் சிறக்க உங்கள் துஆவை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்

Wednesday, September 17, 2014

டிஎன்டிஜே நியூஸ் சேனல் சோதனை ஓட்டம்!


Sunday, September 14, 2014

மாபெரும் பொதுக்கூட்டம் மண்ணடியில் நாள்:21.09.2014


Sunday, August 24, 2014

திருச்சியில் இன்று நடைபெற்ற TNTJ யின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தமிழகம் முழுவதும் இன்ஷா அல்லாஹ் 2014 அக்டோபர் மாதம் முழுவதும் (24.08.14 - ஞாயிறு) ”தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம்” நடத்தப்படும் என்று திருச்சியில் கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது பற்றிய முழுவிபரம் வருமாறு:

மாநில செயற்குழு தீர்மானங்கள்

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஞாயிறு அன்று திருச்சி தாஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம்

தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் அனைத்துச் சமுதாயத்திலும் உள்ளனர். அது போல் இஸ்லாமிய சமுதாயத்திலும் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரின் இது போன்ற செயல்களை அதிகமான ஊடகங்கள் தனிப்பட்ட பயங்கரவாதிகளின் செயலாகக் கருதாமல் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஆதரவுடனும் அவர்களின் ஒத்துழைப்புடனும் நடத்தப்படுவதாக சித்தரிக்கின்றனர்.

திருச்சியில் நடைபெற்ற மாபெரும் சூனிய ஒழிப்பு மார்க்க விளக்க‌ பொதுக்கூட்டம்...


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் 23-08-2014 சனிக்கிழமை அன்று மாபெரும் சூனிய ஒழிப்பு மார்க்க விளக்க‌ பொதுக்கூட்டம் நடைபெற்றது...

சூனியம் உண்டா மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் திருச்சியில் 23.08.2014

இனி யாருக்கும் தேர்தலில் ஆதரவு இல்லை தவ்ஹீத் ஜமாஅத் அதிரடி முடிவு!

a

Saturday, August 16, 2014

யான்பு கிளையில் நடந்த நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளையின் மாதந்திர நிர்வாகிகள் கூட்டம் வெள்ளியன்று 15.08.2014 யான்புவில் நடந்தது அதில் கிளை தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் 

Tuesday, July 29, 2014

2014,பித்ரா வெளிநாட்டில் திரட்டி தலைமைக்கு அனுப்பிய தொகை சுமார் ரூபாய் 10131593 !

அல்ஹம்துலில்லாஹ் இதுவரை திரட்டியிராத அளவிற்கு இந்த வருடம் வெளிநாட்டில் திரட்டிய தொகை சுமார் ஒருகோடியே ஒருலட்சத்து முப்பத்தியோராயிரத்து ஐநூற்றி தொண்ணூற்றி மூன்று (10131593) 
இது சென்ற ஆண்டைவிட சுமார் பதிநூறு லட்சம் (1144350) அதிகம்.

அல்ஹம்துலில்லாஹ் இந்த ஜமாத்தின் மீது முஸ்லிம்களுக்கு வருடாவருடம் நன்ம்பகத்தன்மை அதிகரிப்பதையே இது கட்டுகிறது.  

Monday, July 28, 2014

தமிழகத்தில் ஷவ்வால் பிறை தென்பட்டது 29.07.2014 நோன்பு பெருநாள்!


Sunday, July 27, 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை 2014 ஃபித்ரா மற்றும் நன்கொடை விபரம்.


Saturday, June 21, 2014

ஹாஜாகனியின் அறியாமை தவ்ஹீத் ஜமாஅத் விளக்கம்!

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்பட பேசு என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் இலங்கை சென்று ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ராகவன் என்பவர் தெரிவித்தார். அதில கலந்து கொண்ட தமுமுகவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் சில தனி நபர்கள் செய்வது சமூதாயத்தின் நிலைபாடாக ஆகாது எனக் கூறி ராகவன் கூறிய தகவல் உண்மை என்பது போன்று சித்தரித்தார். இதன் உண்மை நிலை என்ன?
அஸ்லம், அதிரை

Monday, June 16, 2014

நாளை 17.06.2014 இலங்கைத் தூதரகம் முற்றுகை...

இலங்கைத் தூதரகம் முற்றுகை....

இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து இன்ஷாஅல்லாஹ் நாளை காலை (17.06.2014) 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.

http://www.tntj.net/256568.html

Sunday, June 15, 2014

இஸ்லாமும் வர்த்தகமும்

Saturday, June 14, 2014

நாளுக்கு நாள் காவிகளின் செயல் அதிகரித்துக்கொண்டே போகிறதே?

நாளுக்கு நாள் காவிகளின் செயல்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. முதலில் செங்கோட்டை, மல்லிபட்டினம், வேலூர் தற்போது மேலப்பாளையம் என தொடர்ந்துகொண்டே போகின்றது. இதற்கு ஏழறை இலட்சம் ஏகத்துவப் படைகளைக் கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் நடவடிக்கை என்ன?
 நீங்கள் எதை எதிர்பார்த்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள்? அவர்களை எதிர்த்து வன்முறை வழியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இக்கேள்வியைக் கேட்டால், அது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை அல்ல.

யான்புவில் நடந்த மசூரா

இயன்ற அளவு கட்டுப்படுங்கள்

Friday, June 13, 2014

கனவுகள் ஓர் அற்புதம்

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y