அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, September 27, 2014

பிஜே அவர்களின் முக்கிய அறிவிப்பு!

அன்புள்ள கொள்கைச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எனது தொழிலை விரிவுபடுத்திட  சிறிது காலம் என்னை பொறுப்பில் இருந்து விடுமுறை தருமாறு ரமலானுக்கு முன்பிருந்தே நிர்வாகக் குழுவில் கேட்டு வந்தேன். நிர்வாகக் குழுவில் பல முறை வலியுறுத்திய பிறகு தற்போதுதான் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். சூனியத்துக்கு எதிரான மண்ணடி கூட்டத்திலும் இது பற்றி நான் குறிப்பிட்டுள்ளேன். பித்னாக்களுக்கும் அவதூறுகளுக்கும் முகம் கொடுத்தால் தொழிலில் கவனம் செலுத்த முடியாது. தொழிலில் கவனம் செலுத்தினால் ஆய்வுகள் செய்யவும் உலக விஷயங்களை அதிகம் அறிந்து கொள்ளவும் நேரம் ஒதுக்க முடியாது. எனவே தான்  எனக்கு இந்த விடுமுறை தேவைப்படுகிறது. எனது தொழில் விரிவாக்கம் அடைந்து எனது வேலைப்பளு குறையும் போது அல்லாஹ் நாடினால் என்னால் இயன்ற அளவுக்கு பணியாற்றுவேன். அனைத்து பிரச்சனைகளையும் சிறப்பாக கையாளும் நிர்வாகிகள் திறம்பட செயல்பட நானும் துஆ செய்கிறேன். நீங்களும் துஆ செய்யுங்கள். நான் புதிதாக துவங்கவுள்ள இன்னொரு தொழில் சிறக்க உங்கள் துஆவை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y