லண்டனில் உள்ள பிரபலமான பள்ளியில் மாணவர்களின்
குட்டைப் பாவாடை சீருடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .
பிரிட்டனின் நார்த்தாம்டன்ஷயரில் மவுல்டன் அறிவியல் பள்ளி
உள்ளது. இங்கு 11 வயது முதல் 18 வயது வரையுள்ள 1,300 மாணவ ,
மாணவியர் படிக்கின்றனர் .
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டிரிவோர் ஜோன்ஸ் கூறியதாவது :
எங்கள் பள்ளி மாணவியருக்கு முன்பு பாவாடை சீருடையாக இருந்தது.
முழங்கால் வரை இந்த பாவாடை இருக்க வேண்டாம் .
ஆனால் மாணவியர் தொடை தெரியும் அளவுக்கு பாவாடைகளை
அணிந்து வருவது அதிகப்படியான கவர்ச்சியாக உள்ளது .இதனால்
தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகலாம் என்பதால்
தற்போது பாவாடையை ரத்து செய்துள்ளோம் .
அதக்கு பதில் பேன்ட் வடிவ சீருடையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
மீண்டும் பாவாடை அணிந்து வரும் மாணவியருக்கு தண்டனையாக
பழைய ஆடைகள் அணிவிக்கப்படும் அல்லது அவரின் பெற்றோரை
அழைத்து வர வேண்டும்.
புதிய சீருடை அணிந்து வரும் வரை அவர்களை வகுப்பில் அனுமதிக்கப்
போவதில்லை . தற்போதைய சீருடை மூலம் மாணவியரின் பாதுகாப்பு
உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் .
பெண்களின் கவர்ச்சியான ஆடைகளினால் ஏற்படும் விபரீத
விளைவுகளை மேற்கத்திய நாடுகள் இப்போதுதான் மெல்ல
மெல்ல உணரத் தொடங்கியுள்ளனர்.
பெண்களுக்கு ஆடை சுதந்திரம் அளித்தால் பலபேருடைய
பல சுதந்திரங்கள் பறிபோவதை கண்கூடாகக் கண்ட பிறகுதான்
இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன .
அதிலும் , '' தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சீருடை
மூலம் மாணவியரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ''
என்று அந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் கூறியிருப்பது,
இஸ்லாத்தின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது .
மேற்க்கத்திய நாடுகள் இத்தகைய கேடுகெட்ட கலாச்சாரத்தை விட்டு
திரும்பி வரும் இவ்வேளையில் நமது நாடு அனைத்து மாணவிகளுக்கும்
குட்டைப்பாவாடையை சீருடையாக்கி அணியச் சொல்வது வேதனைக்குரிய
விஷயம் .சிந்திப்பார்களா ?
தகவல் :அம்பத்தூரிலிருந்து
ஹுசைன் அலி
நன்றி:உணர்வு
No comments:
Post a Comment