அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, June 17, 2011

சோதனையின்றி சொர்க்கமில்லை


தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் துவங்கியதும் ஊர் நீக்கம்பள்ளிவாசல் தடைஅடக்கத்தலம் மறுப்புதிருமணப் பதிவேடுமறுப்புபொதுக்கூட்டத்திற்குத் தடைபொதுக்குழாய்களில் குடிநீர் பிடிப்பதற்குத் தடை என தவ்ஹீதுவாதிகளுக்கு எதிரானஅடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
காட்டாற்று வெள்ளம் போல் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தக் காட்டுத் தர்பார்களை எதிர்த்துக் களம் கண்டது தான் இந்தஜமாஅத்! அப்போதெல்லாம் தவ்ஹீது அழைப்பாளர்களின் சொற்பொழிவுகளில் ஆதிக்கம் செலுத்தியதும்ஆக்கிரமித்துநின்றதும் இந்தக் குர்ஆன் வசனம் தான்.

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்களாஅவர்களுக்கு வறுமையும்துன்பமும் ஏற்பட்டன. "அல்லாஹ்வின் உதவி எப்போது?'' என்று(இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில்கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.அல்குர்ஆன் 2:214
அந்த அளவுக்குத் தவ்ஹீதுவாதிகள் பாதிக்கப்பட்டார்கள்சோதிக்கப்பட்டார்கள். இந்த வசனம்உதிரம் சிந்திய அவர்களின்காயத்திற்கு ஒற்றடமானது. உடைந்து போன அவர்களது உள்ளத்திற்கு ஆறுதலானது. ஒவ்வொரு தவ்ஹீதுவாதிக்கும்வேதனையே வாழ்க்கையானது.
தவ்ஹீதுவாதிகளுக்கு எதிர்ப்பலைகள்எரிமலைகள் புதிதல்ல! அல்லாஹ்வின் அருளால் அவர்கள் எந்த எதிர்ப்பலையிலும்,எரிமலையிலும் எதிர் நீச்சல் போடுவதற்குத் தெம்பும் தைரியமும் கொண்டிருக்கிறார்கள்.
இதை இங்கு சொல்வதற்குக் காரணம்ஏகத்துவாதிகளின் வியர்வையிலும் உழைப்பிலும் வளர்ந்த துரோகிஜவாஹிருல்லாஹ், "அதிமுக ஆட்சிக்கு வந்தால் திருவிடைச்சேரி சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கைஎடுப்போம்'' என்று தேர்தலுக்கு முன் ஒரு தொலைக்காட்சிப் பிரச்சாரத்தில் கொக்கரித்திருப்பது தான்.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. திருவிடைச்சேரிசம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் இருக்கின்றது. ஆனால் இவர் இதை தனதுதேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிடுவதற்குக் காரணம் தவ்ஹீத் ஜமாஅத்தைக் கருவருப்பதற்கு இந்தத் தேர்தல் களத்தை ஒருவாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் தான்.
திருவிடைச்சேரி சம்பவத்தில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்பது தெரிந்திருந்தும் நடவடிக்கைஎடுக்கப் போகிறேன் என்று திமிராக எக்காளமிடுகின்றார்.
ஏதோ இவருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி கிடைத்தது போன்று பேசுகின்றார். இவருக்குக் கிடைத்திருப்பது ஒருஎம்.எல்.. பதவி தான். அதுவும் அதிமுக போட்ட பிச்சை தான். இதற்கே இந்த ஆட்டம் போடுகிறார். கொஞ்சம் கூட சகிக்கமுடியவில்லை.
இருப்பினும் அரசு எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துதவ்ஹீத் ஜமாஅத்தை அடக்க நினைத்தால்இவருக்கு நாம் சொல்லிக் கொள்வதுதன்னைக் கடவுள் என்று வாதிட்ட ஃபிர்அவ்னிடம் வீர முழக்கமிட்டமந்திரவாதிகளின் அக்னி வரிகளைத் தான்.

"நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களாஅவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்தஉங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டிஉங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில்சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும்நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்துகொள்வீர்கள்'' என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.
"எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும்எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப்போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்'' என்றுஅவர்கள் கூறினார்கள். அல்குர்ஆன் 20:71, 72

நன்றி : ஏகத்துவம் 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y