அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, June 13, 2011

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் வெற்றி!

ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்ப கால கட்டத்தில் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்ற நிலைபாட்டில் தான்தவ்ஹீதுவாதிகள் இருந்தனர்.
1989ஆம் ஆண்டு அல்ஜன்னத் என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்த பி.ஜே. அப்போது எழுதியதைப் பாருங்கள்.

யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்சம் லாவண்யம் ஒழிந்து விடப் போகிறதாதமிழ்ச் சமுதாயம் வறுமைக் கோட்டைத்தாண்டி விடப் போகிறதாஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்பட்டு விடப் போகிறதாகுற்றங்கள் குறையப் போகின்றனவா?ஏறிவரும் விலைவாசி இறங்கப் போகின்றதாஇதில் எதுவுமே நடக்கப் போவதில்லை. அவர்கள் வாங்கிய லஞ்சத்தை,வாரிச் சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம்மட்டுமே. பதவி பித்துப் பிடித்துப் போய் அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிற்பதைத் தவிரவேறு எதுவுமில்லை. இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்ன தான் செய்வது?இதோ அல்லாஹ் சொல்கிறான்.

அழகிய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. தீய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. அல்லாஹ்அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.அல்குர்ஆன் 4:85

நன்மையிலும்இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும்வரம்பு மீறலிலும்ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!
அல்குர்ஆன் 5:2
வட்டியும் மதுவும் சூதும் லஞ்சமும் ஒழுக்கக் கேடுகளும் குற்றங்களும் எவராலும் ஒழியப் போவதில்லை. இறைவன் தீயகாரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத் தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்னவந்து விடப் போகிறதுஅல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப் போவதில்லை.அல்ஜன்னத்ஜனவரி 1989
ஆனால் பாபரி மஸ்ஜித் இடிப்பு நம்முடைய அந்தப் பார்வையை முற்றிலும் மாற்றியது. நம்முடைய வாக்குரிமையைதேர்தலில் பயன்படுத்தாமல் விடுவது பி.ஜே.பி. போன்ற முஸ்லிம் விரோதக் கட்சிகளை ஆட்சியில் அமர்த்துவதற்குப் பாதைவகுத்து விடும் என்று உணர்ந்ததால் அந்த நிலைபாட்டைக் கைவிட நேர்ந்தது. நாம் எதிர்த்து வாக்களித்த பின்னரும் பி.ஜே.பி.ஆட்சிக்கு வந்தால் அது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது.
இதுபோன்ற காரணங்களால் தான் நம்முடைய வாக்குரிமையைப் பயன்படுத்தும் முடிவுக்கு வந்தோம்.
சமுதாயத்திற்காகப் போராடும் வாசல் ஜாக்கில் அடைக்கப்பட்டதால் தமுமுக என்ற இயக்கத்தைத் தவ்ஹீதுவாதிகள்கண்டனர்.
அந்த அமைப்பைக் கண்ட பிறகு முதன் முதலில் சந்தித்த தேர்தல் 1998 நாடாளுமன்றத் தேர்தல்!
கோவையில் குண்டுவெடிப்பு நடந்துமுஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்த நேரம் அது.
அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகபிஜேபியுடன் கூட்டணி வைத்திருந்தது. திமுக ஆட்சியில்1997ல் நடைபெற்ற கலவரத்தில் காவல்துறையினரால் முஸ்லிம்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். எனவேஇரண்டு கட்சியையும் ஆதரிக்க முடியாத நிலையில் தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை எடுத்தோம்.
ஆனால் பிப்ரவரி 14,1998ல் கோவை குண்டு வெடிப்பு நடந்ததால் புறக்கணிப்பு என்ற முடிவை மாற்றி வலிமையானவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தோம்.
அந்தத் தேர்தல் நடைபெற்று 13 மாதங்களில் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிபிஜேபி ஆட்சியைக்கவிழ்த்தார்.அடுத்து 1999ல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல்.அப்போது திமுகபிஜேபியுடன் கூட்டணி சேர்ந்தது. இக்கால கட்டத்தில் கருணாநிதி தமுமுகவை நசுக்கி அழிப்பதற்குத்துடித்துக் கொண்டிருந்தார்.
ஜூலை 4 அன்று சென்னையில் நடைபெறவிருந்த வாழ்வுரிமை மாநாட்டையும் தடை செய்து விடுவார் என்ற ஒருநெருக்கடி இருந்தது. அதனால் அம்மாநாட்டிற்கு ஜெயலலிதாவை அழைத்திருந்தோம். அதில் கலந்து கொண்ட அவர்,பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார். இந்தக் சூழலில் 1999 நாடாளுமன்றத் தேர்தல்வந்தது. அந்தத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்தோம்.

2001 சட்டமன்ற தேர்தல்
முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாக வாக்குறுதி அளித்து அதைத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவதாகவும்ஜெயலலிதா சொன்னதன் அடிப்படையில் அதிமுகவை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம். ஆனால் தேர்தல் அறிக்கையில்தலித் முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு தருவோம் கூறிஇஸ்லாத்துக்குள் தலித்கள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். மேலும்முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு இடங்களை மட்டுமே ஒதுக்கினார்.
இதனால் வெகுண்டெழுந்து ஜெயலலிதாவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கியதுடன்ஜெயலலிதாவின் இந்த ஆணவப்போக்கிற்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவை எதிர்த்து அந்தத் தேர்தலில் களமிறங்கினோம்.
அதிமுக போட்டியிடும் இடங்களில் அதிமுகவை எதிர்ப்பதுமற்ற இடங்களில் அந்தந்த பகுதியில் உள்ள வேட்பாளர்களைக்கவனித்து வாக்களிப்பது என்ற நிலைபாட்டை எடுத்தோம்.
2004 தேர்தலில் இடஒதுகீடு
2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தமுமுகவின் செயற்குழு தஞ்சையில் கூடியது. இந்த செயற்குழுதவ்ஹீதுவாதிகளை ஓரங்கட்டுவதற்கு ஒத்திகை பார்க்கப்பட்ட செயற்குழு என்று குறிப்பிடலாம்.
ஒவ்வொரு கருத்தும்ஆலோசனையும் முன்வைக்கப்பட்ட போதெல்லாம், "தலைவர் அதுபற்றி முடிவெடுப்பார்என்றுஜவாஹிருல்லாஹ்வின் தன்னாதிக்கத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த சமயத்தில் 2004ல் விருதுநகரில் திமுக நடத்திய மாநாட்டில் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாகத்தீர்மானம் நிறைவேற்றியது.
எனவே இந்த இட ஒதுக்கீடு வாக்குறுதிக்காக திமுகவுக்கு ஆதரவளிக்கலாம் என்று தமுமுகவின் தேர்தல் நிலைபாடு பற்றிஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு ஆலோசனை வழங்கியது.
இந்தச் செயற்குழுவில் திமுகவை ஆதரித்து தீவிரமாகப் பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.
உடனே குறுக்கிட்ட பி.ஜே.,"தேர்தலில் ஆதரவு என்றால் அது எந்த நிலையில் இருக்க வேண்டும்இஸ்லாத்தின்வரம்புகளை மீறாமலும் இயக்கத்தின் மரியாதைக்குப் பங்கம் ஏற்படாமலும் இன்னது செய்யலாம்இன்னது செய்யக்கூடாது என்று இப்போதே தெளிவாக வரையறுத்து விட வேண்டும். இல்லாவிட்டால் நம் சகோதரர்கள் வரம்பு மீறிவிடக்கூடும்'' என்று வற்புறுத்தினார்.
அப்போதைக்கு இதை மறுக்க முடியாமல் இதற்கான திட்டங்களை வகுக்க ஒரு குழு அமைக்கலாம் என்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால் வகுக்கப்பட்ட எந்த விதிமுறையும் பேணப்படவில்லை.
"வாடி பொட்டப்பிள்ளை'' என்ற பாடலுக்குஆபாச நடனம் ஆடிய நங்கைகள் முன்னே செல்ல தமுமுக பொதுச் செயலாளர் ஓட்டுக் கேட்டுச் சென்ற அவலம் அப்போதுதான் நடந்தது.
அந்தத் தேர்தலில் தான் முதன்முதலில் இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் திமுகவிற்கு ஆதரவளித்தோம். இதன் பின்னர்இஸ்லாமிய சமுதாயத்தின் ஆதரவு இட ஒதுக்கீடு அடிப்படையில் தான் என்ற வியூகம் தமிழகத்தில் வகுக்கப்பட்டது. அதற்குமுன்பெல்லாம் தேர்தல் ஆதரவு என்பது அந்தந்த கட்சிக்குக் கிடைக்கும் சீட்டுகள் அடிப்படையில் தான் இருந்தது. இதைத்தான் தவ்ஹீதுவாதிகள் மாற்றியமைத்தனர்.
இதற்கிடையே ஏகத்துவக் கொள்கையால் தமுமுக வளர்ச்சி பாதிக்கின்றது என்று கூறி தவ்ஹீதுவாதிகளின் முதுகில்தமுமுக குத்தியதால் தவ்ஹீதுவாதிகள் ஆன்மீகம்அரசியல் இரண்டையும் இணைத்துச் செயல்படுகின்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைக் கண்டனர்.
தொடரும்........
ஏகத்துவம் இதழ்  

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y