அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, June 13, 2011

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் வெற்றி தொடர்ச்சி 2

முந்தைய இடுகையின் தொடர்ச்சி! 
2006 தேர்தலில் இடஒதுகீடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உருவானதும் கண்ட முதல் தேர்தல் 2006 சட்டமன்றத் தேர்தல்! இந்த சட்டமன்றத் தேர்தலைக்கருத்தில் கொண்டு கும்பகோணத்தில் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன்வைத்து மாபெரும் உரிமை மீட்புப் பேரணியைநடத்தியது. எதிர்பார்த்தது போலவே அது உரிய பலனை அளித்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்துஅழைப்பு வந்தது.
ஜெயலலிதாவைப் பொறுத்த வரை முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான சிந்தனை கொண்டவர். முஸ்லிம்களுக்குஇட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று வெளிப்படையாகவே பேசியவர். இருப்பினும் கும்பகோணம் பேரணியில் கூடியகூட்டம் அவருடைய எண்ண ஓட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற வேண்டுமானால்அவர்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துஅது குறித்து ஆய்வு செய்வதற்காகஓர் ஆணையத்தையும் அமைத்தார். அந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகள் அதிமுகவுக்குவிழுந்தாலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் இலவசத் திட்டங்களை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்தது.

எதிர்வீனையில்இடஒதுகீடு 
எதிர்பார்த்தது போன்று அதிமுக ஆட்சிக்கு வரவில்லையே என்று தவ்ஹீதுவாதிகள் கனத்த மனதுடன் இருந்தனர்.கவலையுடன் இருந்தனர். ஆனால் அல்லாஹ் அதில் நன்மையை வைத்திருந்தான்.

ஒரு சில கட்டங்களில் நேரடியாகக் கிடைக்காதது எதிர் விளைவில் கிடைத்து விடும். ஜெயலலிதா என்ன கொடுப்பதுநான்கொடுக்கிறேன் என்று கருணாநிதி வழங்கியது தான் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு!
எனவே இதன் மூலம் அல்லாஹ் ஒரு மாபெரும் வெற்றியை அளித்தான். இது தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல்நிலைபாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும்.
2006 நாடாளுமன்றத்தேர்தலில் இடஒதுகீடு
திமுக ஆட்சிக்கு வந்ததும் இட ஒதுக்கீட்டை உடனே தந்து விடவில்லை. அதற்காகப் பல கட்டப் போராட்டங்களை,ஆர்ப்பாட்டங்களைஅறப்போர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. அந்தப் போராட்டங்களில்திமுக அரசுமுஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை நன்றிக்கடனாக திமுகவிற்கு அளிப்போம் என்று பிரகடனம் செய்தோம்.

திமுக 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை அளித்ததும்நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்னதாகவே கருணாநிதியைச்சந்தித்து வாக்களித்தபடி திமுகவை ஆதரிப்பதாக உறுதியளித்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்! அல்லாஹ்வின்கிருபையால் அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியும் கண்டது.
விதியை மறுக்கும் வீணர்கள்
2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவளித்து அந்தக் கட்சி தோற்று விட்டதால்தவ்ஹீத்ஜமாஅத் ஆதரித்தால் அந்தக் கட்சி தோற்று விடும் என்ற சென்டிமென்டை நமது எதிரிகள் வேண்டுமென்றே பரப்பினார்கள்.விதியை மறுத்து விதண்டாவாதம் பேசினார்கள்.
சென்ற சட்டமன்றத் தேர்தலில் நமது இலக்கு இட ஒதுக்கீடு! அந்த இட ஒதுக்கீட்டை எதிர் விளைவின் மூலம் வல்லஅல்லாஹ் கிடைக்கச் செய்தான். அது தான் நமது தேர்தல் வெற்றி! இது விதியை மறுக்கும் வீணர்களுக்குப் புரியப்போவதில்லை.
இவர்கள் பார்வையில் தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தால் அந்தக் கட்சி தோற்று விடும் என்ற குஃப்ரான வாதத்திற்கு 2009நாடாளுமன்றத் தேர்தல் செருப்படியாக அமைந்தது.

2011 சட்டமன்றத் தேர்தலும் இட ஒதுக்கீடும்
இந்த சட்டமன்றத் தேர்தலை முக்கிய நிரலாகக் கொண்டு தான் 30.01.2011 அன்று சேலத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலபொதுக்குழு கூடியது. 
மாநில நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூடியது இந்தப் பொதுக்குழு! நிர்வாகிகள் தேர்வுக்குஇன்னும் கால அவகாசம் இருந்த போதும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு முன்னரே கூடியது.
இப்பொதுக்குழு கூடுவதற்கு முன்னரே தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையிடம் தொடர்பு கொண்ட திமுகஅதிமுகதலைவர்களிடம்,பொதுக்குழு கூடுவதற்கு முன்னால் ஆளுங்கட்சி இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தர வேண்டும். 
எதிர்க்கட்சிதேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும். உங்களில் யார் இதைச் செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் தவ்ஹீத்ஜமாஅத் ஆதரவுஎன்று தெரிவித்திருந்தோம். இதனால் பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் போது இரு கட்சிகளும் மாறிமாறி தலைமையைத் தொடர்பு கொண்டன. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விடாதீர்கள் என்று நம்மைத் தாக்காற்றிக்கொண்டிருந்தன.
இந்நிலையில் இந்தப் பொதுக்குழு முடிவதற்கு முன்னால் இஸ்லாமிய இலக்கியக் கழகம் என்ற லெட்டர் பேடுஇயக்கத்தைச் சேர்ந்த ஹிதாயத்துல்லாஹ் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டு பேசிய அப்போதைய முதல்வர்கருணாநிதிமுஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்துவதற்கு அமைச்சர்கள் கூட்டத்தில்கலந்து முடிவெடுப்பேன் என்று அறிவித்தார்.

தேர்தலுக்கு முன்பே வெற்றி
அல்லாஹ்வின் கிருபையால் இது தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு முடிவதற்குள்ளாக,தேர்தலுக்கு முன்பே கிடைத்தமாபெரும் வெற்றியாகும்.
முஸ்லிம்களுக்கு 5 சதவிகித இட ஒதுக்கீடு என்ற கருத்தாக்கம் தமிழகத்தில் பதிவானது தான் அந்த மாபெரும்வெற்றியாகும். அதுவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர வேறு எந்த சமுதாய அமைப்புகளோஅரசியல்கட்சிகளோலெட்டர் பேடுகளோ இந்தக் கருத்தை முன்வைக்கவில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தநிர்ப்பந்தத்திற்குப் பின்னர் தமிழக முதல்வர் இவ்வாறு அறிவித்தார். அதற்குப் பிறகு தான் மற்ற இயக்கங்கள் வேறுவழியின்றி இந்தக் கோரிக்கையைக் கையில் எடுத்தன.
திமுக தலைவரின் மேடை அறிவிப்பு வெளியானதைத் தவிர அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் நமது தலைமைக்குவரவில்லை. அதுபோன்று அதிமுகவிடமிருந்தும் சரியான பதில் வரவில்லை.
அரசியல் கட்சிகளின் கூட்டணி விவகாரமே அப்போது முடிவுக்கு வரவில்லை. அதனால் தேர்தல் களம் பற்றி ஒருதெளிவான கண்ணோட்டம் ஏற்படாததால் தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு பற்றிய முடிவை பின்னர் ஒருசெயற்குழு கூடி முடிவெடுக்கட்டும் என்று அந்த சேலம் பொதுக்குழு அதிகாரம் வழங்கியது.

சென்னையில் செயற்குழு
இதற்கிடையே இரு கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் நமது தலைமையிடம் வந்து பேசிய வண்ணமிருந்தனர்.
அதிமுக ஓரளவிற்கு நமது கோரிக்கையை ஒப்புக் கொள்ளும் தருவாயில் இருந்தது. அப்போது தான் 06.03.2011 அன்றுசென்னையில் செயற்குழு கூடியது. தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழு முடிவதற்குள் தங்களது முடிவைத் தெரிவிப்பதாகஅதிமுக கூறியது. ஆனால் செயற்குழு முடிவதற்குள் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் இந்தச் செயற்குழு முடியும் வரை ஆளுங்கட்சியான திமுக இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக எந்தஆணையும் பிறப்பிக்காததால் அதற்கு ஆதரவு இல்லை என்றும்இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாகத் தேர்தல்அறிக்கையில் அதிமுக குறிப்பிட்டால் அதற்கு முழு ஆதரவு என்றும்இந்த வாக்குறுதியை நமது தலைமைக்குக் கடிதமாகத்தந்தால் தார்மீக ஆதரவு மட்டும் வழங்குவது என்றும் இந்தச் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் அந்தசெயற்குழு முடிவடைந்தது.

திமுகவின் தேர்தல் அறிக்கை
ஆனால் செயற்குழு தீர்மானத்திற்குப் பின் நாம் எதிர்பாராத ஒரு வித்தியாசமான சூழல் உருவானது.
ஆணை பிறப்பிக்க வேண்டிய ஆளுங்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதாகக்குறிப்பிட்டது.
தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டிய எதிர்க்கட்சிஅதைச் செய்யாமல் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்வதாகக்குறிப்பிட்டது.
இதனால் சென்னை எழும்பூரில் 26.03.2011 அன்று மீண்டும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழுவைக் கூட்ட நேரிட்டது.
அந்தப் பொதுக்குழுவில்வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் மவுனம் வகிப்பது,அல்லது ஆதரவு தெரிவிப்பது என்ற இரு நிலைபாட்டை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்திய போதுஆதரவுதெரிவிப்பதற்குத் தான் அதிகமான வாக்குகள் கிடைத்தன.
இதற்கிடையே இந்தப் பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் போதுதிருச்சியில் மரியம் பிச்சையை ஆதரித்துப் பிரச்சாரம்செய்த ஜெயலலிதா முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்தித் தரப்படும் என்று தெரிவித்தார். இந்தஅறிவிப்பின் பின்னணியிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் இருந்தது.
அதிமுக தலைமையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நிர்வாகிகள்,"திமுகவின்தேர்தல் அறிக்கையை எல்லாவற்றிலும் காப்பியடித்து வெளியிட்ட நீங்கள் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை மட்டும்திட்டமிட்டு மறைத்து விட்டீர்கள்மறுத்து விட்டீர்கள்'' என்று திட்டிய பிறகு தான் ஜெயலலிதா தனது திருச்சி பிரச்சாரத்தில்மவுனம் கலைத்தார்.
இந்த அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு இரட்டை வெற்றி!
முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்துவோம் என்று அப்போதைய ஆளுங்கட்சித் தலைவரை,முதல்வரைப் பேச வைத்தது மட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையிலும் சொல்ல வைத்துமுரசொலியிலும் எழுத வைத்ததுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான்.
அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும்தற்போதைய முதல்வருமான ஜெயலலிதாவையும் அது பற்றிப் பேச வைத்து 5சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஓர் அஸ்திவாரத்தை அமைத்திருக்கின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!
நாம் ஆதரித்த திமுக தேர்தல் களத்தில் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் அது 5 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஒருதளத்தை அமைத்துக் கொடுத்ததில் வெற்றியடைந்திருக்கின்றது.
இது தான் இறையருளால் இந்தத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்ட வெற்றியாகும். தற்போது 5 சதவிகித இடஒதுக்கீடு என்ற கருத்தாக்கத்தை அனைத்துக் கட்சிகளிடமும் ஏற்படுத்தி விட்டோம். இனி களமிறங்கி அந்த இலக்கைஅடைவதற்காகப் போராடுவோம்இன்ஷா அல்லாஹ்!
நன்றி:ஏகத்துவம் இதழ் 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y