அல்ஹம்துலில்லாஹ் கடந்த வியாழன் (10-02-2011) அன்று இரவு 8.30 மணிக்கு ஜித்தா மண்டலம் சார்பில் ஒரு மார்க்க சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தபுக் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் காலத்தின் அவசியம் என்ற தலைப்பிலும். சகோ. ஃபிர்னாஸ் அவர்கள் இயற்க்கையின் சீற்றமா ? இறைவனின் நாட்டமா ? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். தற்பொழுதைய உலக சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக அமைந்த இந்த தலைப்புகளில் உரையாற்றியவர்களும் மிகவும் சிறப்பாக உறையாற்றினார்கள். கலந்து கொண்டவர்களுக்கும் மிகவும் பயனளிக்க கூடியதாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் புதிதாக இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட சகோ. உமர் ஹாதி (பாஸ்கரன்) அவர்களுக்கு ஜித்த மண்டல சார்பில் க்ஷர்ஃபியா கிளை செயலாளர் சகோ. ஹனிஃபா அவர்கள் சகோ. பீ.ஜெ அவர்கள் மொழி பெயற்த தர்ஜுமா குர் ஆன் ஒன்றினை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியினை செனைய்யா கிளை தலைவர் சகோ. அமீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். சுமார் 175 நபர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்ச்சி இரவு 11 மணிக்கு ஜித்த மண்டல தலைவர் சகோ. நவ்சாத் அவர்கள் நன்றி உரையுடன் இனிதே நிறைவு பெற்றது. இரவு உணவிற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து கிளை நிர்வாகிகளும் சிறப்பான ஒத்துழைப்பை தந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
ஜித்தா மண்டலம்
No comments:
Post a Comment