அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, September 29, 2011

ஆன்லைன் உரை சகோ.பிஜெ

இன்ஷாஅல்லாஹ் வரும் 07-10-2011 வெள்ளி அன்று மதியம் சௌதி நேரம் 2.30 முதல் 4 மணி வரை சகோ. பி.ஜெ அவர்கள் ஆன்லைன் மூலம் உரையாற்றுகிறார்கள் 

தலைப்பு : 
கடல் கடந்தவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவைகள்

Wednesday, September 28, 2011

போலி ஒற்றுமை


கேள்வி : ஏன் உங்களது கொள்கைகள் சரியானதாக இருந்தும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றாக சேர்க்க முடியவில்லை? மேலும், தங்கள் அமைப்பில் இருப்பவர்கள் ஏன் விலகிச் செல்கின்றார்கள்? – ஷமீம்

பதில் : குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டும் பின்பற்றி வாழ வேண்டும் என்பதே நமது கொள்கை. இதுவே சரியான கொள்கை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர உள்ள மற்ற அமைப்புகள் இதற்கு மாற்றமான கொள்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மற்ற அமைப்பினர்க்கு நமது கொள்கையை எடுத்துரைத்து அவர்களைச் சரியான வழியின் பக்கம் அழைக்கும் முற்சியை நாம் தொடர்ந்து செய்து வருகின்றோம். இதைத் தான் நம்மால் செய்ய முடியும். ஒருவருடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அவருக்கு நேர்வழி காட்டும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன். அல்குர்ஆன் (28 : 56)


(முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் விதண்டா வாதம் செய்வார்களானால் ‘என் முகத்தை அல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன். என்னைப் பின்பற்றியோரும் (இவ்வாறே செய்து விட்டனர்)” எனக் கூறுவீராக! வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், எழுதப் படிக்கத்தெரியாதோரிடமும் ‘இஸ்லாத்தைஏற்கிறீர்களா?” என்று கேட்பீராக! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர் வழி பெற்றனர். புறக்கணித்தால் எடுத்துச் சொல்வதே உமக்குக் கடமை. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.

ஹஜ் சர்வீஸ்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு


கடந்த சில ஆண்டுகளாக தனியார் நடத்தும் ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய நிர்வாகிகளே ஹஜ் சர்வீஸ் நடத்தி அது குறித்து பல புகார்களை தவ்ஹீத் ஜமாத் சந்திக்க நேர்ந்ததை அனைவரும் அறிவீர்கள்.
கடந்த காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் சார்பிலோ, அல்லது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சார்பிலோ இது போன்ற சர்வீஸ்கள் நடத்தும் போது, அந்தக் குறைபாடுகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் பதில் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதையும் அறிவீர்கள்.
மக்கள் மத்தியில் நாம் கட்டிக்காத்து வரும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் இது குறித்து கடந்த 22/09/2011 அன்று மாநில நிர்வாகக் குழு மற்றும் மேலாண்மைக் குழுவின் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை அனைத்து சகோதரர்களுக்கும் அறியத் தருகிறோம்.

Saturday, September 24, 2011

நரேந்திர மோடி குறித்து அமெரிக்க CRS அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன ?

Congressional Research Service(CRS) : இது அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட வெளிநாடுகளில் உளவு பார்த்து அறிக்கை தரும் ஓர் அமைப்பு எனலாம். சுமார் 900 ஊழியர்கள் பணியாற்றும் இந்த அமைப்பு ஆண்டுதோறும் பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக பட்ஜெட்டில் விழுங்கித்தான் இந்த வேலையை பார்க்கிறது. இதன் அறிக்கை ரகசியமாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் மட்டுமே தரப்படும். இது அமெரிக்க அரசு தன் அயலுறவு கொள்கையை முடிவு செய்யும்போது இதனையும் ஒரு பொருட்டாக பார்க்குமாம். அதில் முக்கியத்துவம் இருக்குமாயின் அறிக்கை இரகசியமாக வைக்கப்படும். இல்லையேல், உறுப்பினர்களால் மக்களுக்கு அவ்வப்போது இவ்வறிக்கைகள் 'லீக்' செய்யப்படுவதும் உண்டு. காரணம், 'இது போன்ற அதிரடி வேலைகளை எல்லாம் அமெரிக்கா செய்கிறது' என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்ளவும், செலவு கணக்கு காட்டவும்தான். 

முதலில், "நம்மைப்பற்றி இது போன்ற அறிக்கைகளை இங்கே வந்து ஆய்வு செய்து சமர்ப்பிக்க இவர்கள் யார்" என்று தம்மை 'தேசபக்தர்கள்' என கூறிக்கொள்ளும் போலிகள் எவருமே இப்போது வாயை திறந்து கேட்க காணோம். வேண்டுமானால், இதேபோல இந்தியா அமெரிக்காவில் வேவு பார்த்து ஒரு அறிக்கையை இந்திய பாராளுமன்றத்துக்கு பகிரங்கமாக சமர்ப்பிக்கட்டுமே, பார்க்கலாம்..! விடுவார்களா..? இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த அறிக்கை பற்றி 'ஆஹா ஓஹோ' என்று நியூஸ் போடுபவர்கள் எல்லாருமே இரண்டு விஷயத்தில் ஒத்துப்போகின்றனர். ஒன்று அமெரிக்க ஆதரவு. மற்றொன்று ஹிந்துத்துவா ஆதரவு.

Friday, September 23, 2011

ஜெயலலிதா மாறவில்லை

கடந்த தேர்தலின்போது தன்னிடம் அளப்பரிய மற்றம் ஏற்ப்பட்டு விட்டதாக ஒரு தோற்றத்தை ஜெயலலிதா ஏற்ப்படுத்தினார் ஊடகங்கள் அவர் மிகவும் மாறிவிட்டார் என்று பிரச்சாரம் செய்தன மக்களும் அவர் மாறிவிட்டதாக நினைத்து மிருக பலத்துடன் அவரை ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்யும் அளவுக்கு அவருக்கு ஆதரவும் அளித்தனர் ஆனால் அவரிடம் எந்த மாற்றமும் ஏற்ப்பட்டதாக  தெரியவில்லை மாற்றம் ஏற்ப்பட்டதாக ஒப்புக்கொண்டாலும் முஸ்லிம்களையும் தலித் மக்களையும் அவருக்கு பிடிக்காது என்ற நிலைப்பாட்டில் அவரிடம் நிச்சயம் கடுகளவும் மாற்றம் ஏற்ப்பட வில்லை என்பதை அவரே நிரூபித்து வருகிறார்.

இரெண்டாயிரம் முஸ்லிம்களை கொன்று கருவறுத்த பயங்கரவாதி நரேந்திர மோடியை தனது பதவி ஏற்ப்பு விழாவிற்கு அழைத்து கண்ணியப் படுத்தியதன் மூலம் தான் முஸ்லிம் விரோதிகளின் தோழி தான் என்பதை மீண்டும் பகிரங்கமாக காட்டிக் கொண்டார்  இதில் தன்னிடம் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

இந்திய அரசியலில் இஸ்லாமியர்களின் உரிமை நேரடி ஒளிபரப்பு


இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக் கிழமை 23-09-11 அன்று நடைபெறும் ஜித்தா ஆன்லைன் நிகழ்ச்சி இந்திய   நேரம் - இரவு 9.15 முதல் 10.30 மணி வரை
(செளதி அரேபியா நேரம் மாலை 6.45 முதல் 8.00 மணி வரை நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
www.onlinepj.com

தலைப்பு - இந்திய அரசியலில் இஸ்லாமியர்களின் உரிமை
உரை - பி.ஜைனுல் ஆபிதீன்

Thursday, September 22, 2011

நரபலிமோடியின் உண்ணாவிரத நாகடம்.


அமைதி, ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி 72 மணிநேர உண்ணா விரதத்தை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மேற்கொண்டுள்ளதை பத்திரிகைகள் பரபரப்பு செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருகின்றன.

அண்ணா ஹசாரேவை அம்போவென்று விட்டு விட்டு மோடி பக்கம் பல்டி அடித்து விட்டன பார்ப்பனப் பத்திரிகைகள்.

குஜராத் அமைதி இழந்து சமூக நல்லிணக்கம் கெடுவதற்கு வேறு யாராவது காரணமாக அமைந்து அதற்காக மோடி உண்ணாவிரதத்தை மேற்கொண்டால் உலகம் இவரது உண்ணாவிரதத்தை ஏற்றுக் கொள்ளும்.

காந்திப் பிறந்த மண்ணை சிறுபான்மை அப்பாவி முஸ்லீம்களின் இரத்தத்தால் தோய்த்து கலங்கப்படுத்திய கொலை வெறியன் இன்று சமூக நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றுக் கூறுவது  அதுவும் பத்தாயிரம் முஸ்லீம்களுடன் ? வேஷம் என்று உலகுக்குத் தெரியாதா ?

Wednesday, September 21, 2011

இந்த பெயர் தாங்கிகளால் முஸ்லிம்களுக்கு என்றுமே வீழ்ச்சிதான்




2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் - முன்னாள் 
குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.

சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட்:
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பா.ஜ.க. பிரமுகர்கள்பஜ்ரங் தள்வி.ஹெ.ச்பி.ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மோடி, ‘நான் உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால்,மூன்று நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும்என்றார். அதன்பிறகு பெரிய அளவில் கொலைச்சம்பவங்கள் நடந்த பிறகு எங்களை அழைத்த மோடிஎல்லோரையும் பாராட்டினார்.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y