அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, April 09, 2011

கோவை பொதுக்கூட்டத்தில் அதிமுக குண்டர்கள் வெறியாட்டம் விளக்கு பிடித்து ஆள்காட்டிய MMK மற்றும் SDPI தொண்டர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திமுக கூட்டணியை ஆதரித்து கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு மாநில பொதுச்செயலாளர் ரஹம்த்துல்லா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா திமுக கூட்டணியை TNTJ ஆதரிப்பது ஏன் என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். சுமார் 9.45 மணியளவில் திடீரென அந்தக் கூட்டத்திற்குள் உருட்டுக்கட்டைகள் மற்றும் கற்களுடன் புகுந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த பெரிய ஸ்பீக்கரை கூட்டத்தினர் மீது பிடித்து தள்ள கூட்டத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
என்னவென்று சுதாரிப்பதற்குள் SDPI வேட்பாளர் உமர் தலைமையில் அங்கு வந்த மமகவின் பொருப்பாளர்கள் அங்கிருந்த விளக்குகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.
இந்த நேரத்தில் அதிமுக குண்டர்கள் அங்கே ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரின் வயரைப் பிடிங்கி விட அந்த இடமே இருளில் மூழ்கியது.
மேடைக்கு முன்னாள் திரண்டிருந்த பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் பொருட்டு இந்த கலவர சூழ்நிலையிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் பெண்களைச் சுற்றி அரணாக நிற்க அவர்கள் மீது பிளாஸ்டிக் சேர்களை தூக்கி அடித்து விட்டு பெண்கள் கூட்டத்திற்குள் நுழைந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த இஸ்லாமிய பெண்களை வெளியே சொல்ல முடியாத கொச்சை வார்த்தைகளால் திட்டி அவர்கள் மீதும் சேர்களைத் தூக்கி அடிக்க பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தனர்.

Friday, April 08, 2011

மாபெரும் தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் இராமநாதபுரம் மற்றும் சென்னையில்.

இன்ஷா அல்லாஹ் நாளை 09.04.2011 சனிக்கிழமை மாபெரும் தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் இராமநாதபுரம் அரண்மனை முன்பு காய்கறி மார்கட் அருகில் மாலை 07.00 மணிக்கு சிறப்புரை சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் 

இன்ஷா அல்லாஹ் நாளை 10.04.2011 ஞாயிறு மாபெரும் தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் சென்னை நேதாஜி நகரில் மாலை 07.00 மணிக்கு சிறப்புரை சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் 



தலைப்பு 
இந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் பிரச்சனை எது?
ஊழலா ?
குடும்ப ஆட்சியா?
விலைவாசி உயர்?
அல்லது இடஒதுக்கிடா ?
பொதுக் கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பை onlinepj.com  இணையதளத்தில் காணத்தவறாதீர்கள்!

அனைவரையும் அழைக்கிறது 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

நாங்கரெடி நீங்கரெடியா ஒரு சமுதாய சவால்

jkpo;ehL jt;`Pj; [khmj;jpdh; ,];yhkpa Ntl;ghshh;fis Mjupf;fhky; mth;fSf;F khw;whf Nghl;bapLk; khw;Wkj Ntl;ghsh;fis Mjupf;fpwhh;fs;. ,th;fs; xU Filapd; fPo; xd;Wgl khl;lhh;fs; ghUq;fs;! ehq;fnsy;yhk; vg;gb K];ypk; Ntl;ghsh;fSf;F MjuT jUfpNwhk; vd jt;`Pj; [khmj;ij kl;LNk Rw;wp Rw;wp gopf;Fk; ,af;fq;fSk; mth;fs; rhh;e;j kf;fSk; xt;nthU Njh;jYf;Fk; tpLf;Fk; mwpf;ifjhd; ,J.

mJ Nghyj;jhd; ,e;jj; Njh;jypYk; gutyhf ,J Nghd;wnjhU nra;jp gug;gg;gl;L tUfpd;wJ. jkpo;ehL jt;`Pj; [khmj; jtpu kw;w ,af;fq;fs; xw;WikAld; xuzpapy; jpuz;L jq;fs; gyj;ij ep&gpj;J vy;yhUk; xNu ,af;fj;jpw;F my;yJ K];ypk; Ntl;ghsh;fSf;F MjuT jUtJ NghyTk; jkpo;ehL jt;`Pj; [khmj; kl;Lk;jhd; K];ypk; Ntl;ghsh;fis Gwf;fzpg;gjhfTk; kf;fs; kj;jpapy; xU jtwhd fUj;ij ,e;j tprkpfs; gug;gp tUfpwhh;fs;.
Mdhy; ,ih nrhy;gth;fs; ,e;j fUj;jpNy mth;fs; cz;ikahsh;fshf ,Uf;fpwhh;fsh? vd;why; Rj;jkhf ,y;iy. fhuzk; K];ypk; Ntl;ghsUf;F MjuT jhUq;fs; vd Koq;Fk; jiyth;fs; NtW VjhtJ xU K];ypk; Ntl;ghsiuj;jhd; vjph;j;J epw;fpwhh;fs;.

Thursday, April 07, 2011

தவறுகளை ஒப்புக் கொள்வோம் பாகம் 3

நண்பர்களுக்கிடையில்...

ஒரு சிலர்நல்ல நண்பர்களாய் இருப்பார்கள். திடீரென இருவரும் எதிரும் புதிருமாக மாறிவிடுவார்கள். ஒருவர் கிழக்கே சென்றால் இன்னொருவர் மேற்கே செல்வார் எனுமளவுக்கு பகைமைத்தீ பற்றி எரியும். நேற்று வரையி லும் நல்ல நண்பர்களாய்ஒரே தட்டில் சாப்பிடுபவர்களாய்ஒரு சட்டையை மாற்றி மாற்றி போடுபவர்களாய்... இவ்வாறு தங்கள் நட்பை ரம்மியமாய் பரிமா றிக் கொண்டவர்கள் ஏன் இப்படி..என்று சிந்தித்து பார்த்தால் அதில் ஒருவர் தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள முன்வராததே காரணம் என்பதை சந் தேகமற கூறிவிடலாம். செய்த தவறை ஒப்புக் கொள்ள தயங்கினால் இரு நண்பர்கள் மட்டுமல்லநட்பை பரிமாறும் நாடுகள் கூட தமக்கிடையில் சண்டையிட்டுக் கொண்டுபிரிந்து சென்று விடும். நல்ல நண்பர்களை நாம் தக்க வைக்க வேண்டுமெனில் நாம் செய்த தவறை சிறிதும் தயக்கமின்றி ஒப்புக் கொள்ள முன்வர வேண்டும். இதோ அருமையான இரு நல்ல நண்பர்களின் சம்பவத்தை கவனியுங்கள்

Saturday, April 02, 2011

தவறுகளை ஒப்புக் கொள்வோம் பாகம் 2


தவறை ஒப்புக் கொள்ளத் தயங்காத தோழர்கள்

நம்மில் யாரும் பிறரை பாதிக்கும் வண்ணம் சிறியதொரு தவறை செய்தா லும் அதையும் ஒப்புக் கொள்ள தயாராக இருப்பதில்லை. எங்கே ஒப்புக் கொண்டு விட்டால்மக்கள் நம்மை கேவலமாக பார்ப்பார்களோ என்று இவ்வு லகிற்கு அஞ்சுகின்றோம். நாம் செய்த குற்றத்தை மறைக்கபூசி மொழுக பல பொய்களை கட்டவிழ்த்து விடுவோம். ஆனால் நபிகளாரின் பயிற்சி பட்டறை யில் பாடம் பயின்றவர்கள் எத்தனை பாரதூரமான தவறை செய்திருந்தாலும் அதனை கொஞ்சமும் தயங்காமல் ஒப்புக் கொண்டார்கள் என்று சரித்திரம் சான்றளிக்கின்றது.

மாஇஸ் பின் மாக் அவர்கள் நபி (ஸல்) அவர்கடம் வந்(து தாம் விபசாரம் புரிந்து விட்டதாக வாக்குமூலம் அத்)தபோது,அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண் ணாலோ கையாலோ) சைகை செய்திருக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!'' என்று சொன்னார்கள். அவர், "(அவ்வாறெல்லாம்) இல்லை;அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள்சாடைமாடையாகக் கேட்காமல் "அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?'' என்று (வெப்படையாகவே) கேட்டார்கள். அவர்ஆம்என்று கூறி னார். அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர)புகாரி (6824)

Thursday, March 31, 2011

ஏப்ரல் ஃபுல் ஏமாறவேண்டாம்


ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி மாறிவிட்டது.
அன்று உலகம் முழுவதும் ஒருவர் மற்றவரிடம் நம்பவைத்து பொய் சொல்லி, நம்பிய  பிறகு ஏமாற்றி, அவரை பார்த்து மற்றவர்கள் ஏளனமாகச் சிரித்து மகிழ்வதை  வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் முட்டாளாக்கி  இழிவுபடுத்துவதில் அளாதி இன்பம் அடைக்கின்றனர்.
April Fool’s Day அல்லது All Fool’s Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஏப்ரல் ஃபுல் க்கு பல வரலாறுகள் சொல்லப்படுகின்றது
முஸ்லிம்களில் சிலரும் அன்ற தினத்தில் நண்பர்களை ஏமாற்றி ஏப்ரல் ஃபூல் முட்டாளாக்கி மகிழ்கின்றனர்.
எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.

2011 இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு உத்தேச பட்டியல் வெளியிடு


டெல்லி: இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 18.1 கோடி அதிகரித்துள்ளது.


ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2001ம் ஆண்டுக்குப் பின் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் தோராயமான விவரங்களை இன்று மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி,

இப்போது நாட்டின் மக்கள் தொகை 121.2 கோடியாகும். இதில் ஆண்கள் 62.37 கோடி, பெண்கள் 58.65 கோடியாகும்.

2001ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சி 21.15 சதவீதமாக இருந்தது. இப்போது இது 17.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மாபெரும் சாதனையாகும். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 3.90 சதவீகம் குறைந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி இதுவரை இவ்வளவு வேகமாகக் குறைவாக இருந்ததில்லை.

Monday, March 28, 2011

தவறுகளை ஒப்புக் கொள்வோம் பாகம் 1

உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது காணப்படுகின்றமெய்சிலிர்க்கச் செய்கிறபல அரிய கண்டுபிடிப்புகள் யாவும் மனிதர்கள் கண்டுபிடித் தவையே. இறைவன் அவர்களுக்கு வழங்கிய அறிவு எனும் பொக் கிஷத்தை பயன்படுத்தியே இந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார் கள். என்னதான் அறிவில் சிறந்தவனாக மனிதன் இருந்தாலும்அவனிடம் தவறுகள் நிகழத்தான் செய்யும். நம்மைப்படைத்த இறைவனிடம் மட்டுமே எந்த தவறும் நிகழாது.. மனிதன் என்ற வட்டத்திற்குள் யார் நுழைந்தாலும்அவர்கள் உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளாக இருந்தாலும்ஏன் இறைவ னின் தூதர்களாகவே இருந்தாலும் அவர்களும் தவறு செய்யக்கூடியவர்களே. இறைவனது கரத்தினால் படைக்கப்பட்ட முதல் மனிதரும்,மிகச்சிறந்த அறிவாளியுமானமனித சமுதாயத்தின் ஆதிபிதா என்று அழைக்கப்படுகின்ற ஆதம் (அலை) அவர்கள் கூட தவறு செய்தவர்களே. அவர்களின் பிள்ளைக ளாக இருக்கின்ற நாம் அனைவரும் தவறு செய்பவர்கள் என்பதில் ஆச்சரியத் திற்கு ஒன்றுமில்லை.

ஆதமின் சந்ததிகள் அனைவர்களும் இரவிலும்பகலிலும் தவறு செய்யக்கூடியவர்களே என இறைவன் கூறியதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூதர் (ரலி)நூல் : அஹ்மத் (20451)

மனிதர்கள் இயல்பிலேயே தவறு செய்பவர்கள்தான் என்றாலும் அதிலே நிரந்தரமாக உழல்வது ஏற்கத்தக்கதல்ல. மாறாக தவறு செய்பவர்கள் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டுமனந்திருந்தி வாழ வேண்டும். 

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y