அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, October 09, 2012

என்ன நியாயம் தமிழக முதல்வரே?

ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் முஸ்லிம்களின் உடன் பிறவா சகோதரியாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்து பிறகு தேர்தலில் வெற்றிபெற்றதும் முஸ்லிம்களை முற்றிலுமாக மறந்து விடுவதும் உங்களின் தொடர் வாடிக்கையாகிவிட்டது.

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் மதி மழுங்கச் செய்து அடிமைகாளாக்கி வரும் Facebook & Twitter! – சிக்காக்கோ யுனிவர்சிட்டி ஆய்வு முடிவு


சமீபத்தி்ல சிக்காக்கோவில் உள்ள Chicago Booth School of Business classified என்ற பல்கலைகழகம் ஜெர்மனியில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. 18 வயது முதல் 82 வயது வரை உள்ளவர்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
தற்போதைய சமுதாயத்தினர் எதில் அதிகம் மோகம் கொள்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டம் தகவல்கள் வெளியாகிள்ளது.
தங்களின் பார்ட்னரிடம் செல்வதை விட Facebook & Twitter இடம் செல்வதை தான் தற்போதை சமுதாயத்தினர் அதிகம் விரும்புகின்றனர். அதில் தான் அதிக மோகம் கொண்டுள்ளனர். அதை விட்டு அவர்களால் வெளியே வர முடிவதில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செக்ஸ் மற்றும் சிகிரெட்டில் கிடைக்கும் இன்பத்தை விட Facebook மற்றும் Twitter ல் இன்றைய சமுதாயத்திற்கு அதிக இன்பம் கிடைக்கின்றதாகவும் அது எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் எங்கு வேண்டுமானாலும் எப்பொழு வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதாலும் அதில் தான் அவர்கள் அதிகம் மோகம் கொள்கின்றனர் என ஆய்வு தெரிவிக்கின்றது…
இன்றைய இளைய சமூதாயம் Facebook மற்றும் Twitter ல் மூழ்கி கிடக்கும் காரணத்தை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளது சிக்காக்கோ பல்கலைகழகம்.
இப்படி மோகம் கொள்ள காரணம் என்ன என்பதை பார்ப்போம்:
அனைவருக்கும் புரியும் விதத்தில் சுருக்கமாக சொல்வதாக இருந்தால் இரண்டு இணையதளங்களும் ”மாமா”  வேலையை தான் பார்க்கின்றனர். அதை தொழில் நுட்ப ரீதியாக செய்கின்றனர். இவைகளை eMaMa என அழைத்தால் அது மிகையாகாது.
பஸ்டாண்டு பஸ்டாண்டா அழைந்து, தெரு தெருவா சுத்தி, பல மணி நேரம் வெயிட் பன்னி, பொண்ணு பையன தேட்ரதும் பையன் போன்ன தேட்ரதும் அந்த காலம். ஆனா இப்ப உக்காந்த இடத்துல இருந்துக்கிட்டே பொண்ணு தான் விரும்பிய பையன் கிட்ட கடல போடவும் பையன் தான் விரும்பிய போண்ணு கிட்ட கடல போடவும் பயன்படுத்தப்படும் இணையதளங்கள் தான் இந்த  Facebook மற்றும் Twitter.

Monday, September 24, 2012

காதலின் பெயரால் தொடரும் (தற்)கொலைகள் !

சமீபத்தில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காதலால் ஏற்ப்படும் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது தொடர்ந்து நடக்கும் தற்கொலைகளால் பெற்றோர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் கடந்த இரண்டு நாட்களில் கோவையில் மட்டும் மூன்று காதல் (தற்)கொலைகள் நடந்துள்ளன.

நேற்று முன்தினம் தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் மாணவி தன்னை காதலிக்க மறுத்தால் அவரின் வீட்டிற்கு சென்று அந்த மாணவியையும் அவரின் தாயாரையும் கத்தியால் குத்தி தானும் தீவைத்து தற்கொலை செய்துகொண்டார் ஒரு மாணவன்  இதேபோல் வேறொரு சம்பவத்தில் பதினான்கு வயதான மாணவியை இருபத்தி ஒரு வயது மாணவன் தன அவளை காதலிப்பதாகவும் தன்னை அவளும் காதலிக்க வேண்டும் என கூறியுள்ளார் அதற்க்கு அந்த மாணவி மறுக்கவே அந்த மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

Friday, September 21, 2012

யான்பு கிளை நிர்வாகிகள் கூட்டம்.

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை நிர்வாகிகள் கூட்டம் ரமளானுக்கு பிறகு நடைபெற்றது அதில் தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர் தவ்ஹீத் ஜமாஅத் தாயகத்தில் செயல்படும் விதம் அனைவரையும் மிக மகிழ்ச்சிக் குள்ளாக்கியுள்ளது நடந்து முடிந்த சத்தியமூர்திபவன் அமெரிக்க தூதரகம் முற்றுகை அதில் தவ்ஹீத் ஜமாத்தினர் காத்த சமூக ஒழுங்கு மற்றும் சமுதாய கண்ணியம் மிக பிரம்மிப்பை அளிக்கின்றது என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். 

மேலும் அமெரிக்க தூதரகம் முற்றுகை பல்லாயிரக்கணக்காக சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர் இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக இறுதியில் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்! 




Wednesday, September 19, 2012

வீட்டுக்குள்ளே இருந்தாலும் கவனமா இருங்க பெண்களே!


மதுரை: பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று வெளியே செல்லும் பெண்களுக்குத்தான் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்றில்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட அச்சுறுத்தல்களும், அவர்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
நம் வீட்டிற்குள் கேபிள், பிளம்பிங், எலக்ட்ரிகல் வேலை என்று நுழையும் சில நபர்கள் நமக்குத் தெரியமாலேயே ஸ்பை கேமராவை பொருத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். இவற்றை படம் பிடித்து அதனை பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து காசு பார்த்து விடுகின்றனர். இது நடந்தது மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் இல்லை. நாகரீக வாசம் அதிகம் எட்டிப்பார்க்காத மதுரை மாவட்டத்தில்தான்.

Thursday, September 13, 2012

எங்கே உங்களின் ஒற்றுமை ?

முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்ப்பெயருக்கு களங்கம் கற்ப்பிக்கும் முகமாக அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து  யூத இனத்தைச் சேர்ந்த ஷ்யாம்பைசரி என்பவன் இயக்கிய திரைப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளான் இந்த படுபாதகச் செயலை உலகத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் கடுமையாக கண்டித்துள்ளனர் அமெரிக்காவிற்கு எதிராக உலக முஸ்லிம்கள் பொங்கி எழுந்துள்ளனர். 

அதேபோல தமிழகத்திலும் அணைத்து முஸ்லிம் இயக்கங்களும் வன்மையாக கண்டித்துள்ளது இஸ்லாத்திற்கும் முஸ்லிமுக்கும் ஒரு அவமானம் என்றால் உடனே களம் இறங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இச்செயலை வன்மையாக கண்டித்து முதலில் கண்டன அறிக்கையையும் அதனைத்தொடர்ந்து வரும் 15.09.2012 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றிகையிடப் போவதாக அறிவித்தது.

Monday, September 10, 2012

மோடியை பின்பற்றி தருண் கோகோய்!

கடந்த  மாதம் அஸ்ஸாமில் நடந்த வன்முறையில் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் இந்த கலவரம் சங்கபரிவார அமைப்புகள் திட்டமிட்டே அரங்கேற்றியது அது மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் அஸ்ஸாமிய போடோ இன மக்களை ஒன்றிணைத்து மீண்டும் ஒரு மிகப்பெரிய வன்முறையை அஸ்ஸாமில் கட்டவிழ்த்து விட்டு எஞ்சியுள்ள முஸ்லிம்களையும் துடைத்தெறிவதர்க்காக பல்வேறு மாநிலங்களில் வாழும் அஸ்ஸாமிய மக்களுக்கு முஸ்லிம்களால் ஆபத்து என்று ஒரு வதந்தியை கிளப்பி அதில் அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர் என்பதை அங்கே தொடர்ந்து முஸ்லிம்கள் தாக்கப்படுவதை வைத்து புரிந்து கொள்ளலாம். 

Thursday, September 06, 2012

2012 வெளிநாடுகளில் திரட்டி தாயகத்தில் விநியோகித்த ஃபித்ரா விபரம் !


தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y