அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Saturday, February 15, 2014

காதலர்தினம் என்ற பெயரால் நடக்கும் அசிங்கம்!

காதலர்தினம் என்ற பெயரால் நடக்கும் அசிங்கம்! அசிங்கத்தின் சிறய உதாரணம் வீடியோவாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.  

காதலர்களே காதல் பண்ணுங்க வேனாம்னு யாரும் சொல்லல ஆனா காதல்ங்குற பேர்ல இப்படி அசிங்கமா நடந்து கொள்ள வேண்டாம் என்கிற கவலை தான் பெத்தவங்களுக்கு...!

காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை. தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்துஇப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா?

Thursday, February 06, 2014

கற்ப்புக்கொள்ளையர்கள் தினம் பிப்ரவரி 14


Wednesday, November 07, 2012

சாதிய தலைவர்களின் விழாவும் சேதப்படுத்தப்படும் மக்கள் சொத்தும்?

சிலகாலமாக அடங்கியிருந் தென்மாவட்ட சாதிக் கலவரம் கடந்த இரண்டு வருடவங்களாக மீண்டும் தலை தூக்கியுள்ளது   இதற்கு முதல் காரணம் என்ன என்று பாமர மக்களிடம் கேட்டாலும் உடனே பதில் வரும் இதற்கு முதல் முக்கிய காரணம் அரசின் கையாளாகதனம் தான் என்று ஒட்டுப்பொறுக்கும் இந்த அரசியல்வாதிகளால் இன்று தென்மாவட்ட மக்கள் ஒருவித அச்ச உணர்வுடனேயே வாழ்கின்றனர். 



இந்த கலவரம் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்ந்து உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு அவர்களில் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது அன்றாடம் வேலை செய்தால் தான் தமது குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையிலிருக்கும் ஏழை கூலித்தொழிலாளிகள் தங்களது வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனர் தாய்மார்கள் தங்கள் வீட்டுக்குதேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளுக்கோ அல்லது அருகிலுள்ள நகரங்களுக்கோ போய்வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்  இவற்றையெல்லாம் கூட சகித்துக்கொள்ளலாம் நோயாளிகள் அவசரமாக மருத்துவமனை செல்ல முடியாமல் உயிரிழப்பு ஏற்ப்படும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது.

இவற்றை சீர் செய்ய அரசு எந்த வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொண்டதாக தெரியவில்லை  இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலைக்கு என்ன காரணம் என்பதை நாம் முதலில்  தெரிந்து கொள்ளவேண்டும்.

Thursday, October 25, 2012

டெங்கு காய்ச்சல் ..அவசியம் அறிய வேண்டியவை


டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். அநேகமான டெங்கு காய்ச்சல், மிக சாதாரண காய்ச்சல் போலவே இருந்து, அதனால் பாதிக்கப்பட்டவர் எளிதில் அதில் இருந்து மீண்டு விடுவர்.. மிக குறைந்த சதவிகிதத்திலான டெங்கு காய்ச்சல் தான், மிக மோசமான பாதிப்புகளையும் , உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தக் கூடியது.

இது சாதரணமாக, திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், மூட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை கலர் மாற்றம் ஏற்படுத்தும். இதில் குறிப்பாக ஜுரம், தோல் நிற மாற்றம், தலைவலி தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும் அனேகமாக இருக்கும் மூன்று நோய் அறிகுறிகளாகும். இதுபோக இரத்தக் கசிவுகளை ஏற்படுத்தலாம்.

இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கடுமையாக பாதிக்கும்.இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் உண்டாக்கப்படுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் ஒரு வகை டெங்கு வைரசால் பாதிக்கப்பட்டால், அந்த வகை வைரஸுக்கு மட்டும், வாழ்நாள் முழுவதும், நோய் எதிர்ப்பு தன்மை உருவாகி விடும். தவிர மற்ற வகை வைரஸுக்கு எதிராக, நோய் எதிர்ப்புத் தன்மை வராது.

Monday, October 22, 2012

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டீஸ்



Tuesday, October 09, 2012

என்ன நியாயம் தமிழக முதல்வரே?

ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் முஸ்லிம்களின் உடன் பிறவா சகோதரியாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்து பிறகு தேர்தலில் வெற்றிபெற்றதும் முஸ்லிம்களை முற்றிலுமாக மறந்து விடுவதும் உங்களின் தொடர் வாடிக்கையாகிவிட்டது.

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் மதி மழுங்கச் செய்து அடிமைகாளாக்கி வரும் Facebook & Twitter! – சிக்காக்கோ யுனிவர்சிட்டி ஆய்வு முடிவு


சமீபத்தி்ல சிக்காக்கோவில் உள்ள Chicago Booth School of Business classified என்ற பல்கலைகழகம் ஜெர்மனியில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. 18 வயது முதல் 82 வயது வரை உள்ளவர்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
தற்போதைய சமுதாயத்தினர் எதில் அதிகம் மோகம் கொள்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டம் தகவல்கள் வெளியாகிள்ளது.
தங்களின் பார்ட்னரிடம் செல்வதை விட Facebook & Twitter இடம் செல்வதை தான் தற்போதை சமுதாயத்தினர் அதிகம் விரும்புகின்றனர். அதில் தான் அதிக மோகம் கொண்டுள்ளனர். அதை விட்டு அவர்களால் வெளியே வர முடிவதில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செக்ஸ் மற்றும் சிகிரெட்டில் கிடைக்கும் இன்பத்தை விட Facebook மற்றும் Twitter ல் இன்றைய சமுதாயத்திற்கு அதிக இன்பம் கிடைக்கின்றதாகவும் அது எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் எங்கு வேண்டுமானாலும் எப்பொழு வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதாலும் அதில் தான் அவர்கள் அதிகம் மோகம் கொள்கின்றனர் என ஆய்வு தெரிவிக்கின்றது…
இன்றைய இளைய சமூதாயம் Facebook மற்றும் Twitter ல் மூழ்கி கிடக்கும் காரணத்தை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளது சிக்காக்கோ பல்கலைகழகம்.
இப்படி மோகம் கொள்ள காரணம் என்ன என்பதை பார்ப்போம்:
அனைவருக்கும் புரியும் விதத்தில் சுருக்கமாக சொல்வதாக இருந்தால் இரண்டு இணையதளங்களும் ”மாமா”  வேலையை தான் பார்க்கின்றனர். அதை தொழில் நுட்ப ரீதியாக செய்கின்றனர். இவைகளை eMaMa என அழைத்தால் அது மிகையாகாது.
பஸ்டாண்டு பஸ்டாண்டா அழைந்து, தெரு தெருவா சுத்தி, பல மணி நேரம் வெயிட் பன்னி, பொண்ணு பையன தேட்ரதும் பையன் போன்ன தேட்ரதும் அந்த காலம். ஆனா இப்ப உக்காந்த இடத்துல இருந்துக்கிட்டே பொண்ணு தான் விரும்பிய பையன் கிட்ட கடல போடவும் பையன் தான் விரும்பிய போண்ணு கிட்ட கடல போடவும் பயன்படுத்தப்படும் இணையதளங்கள் தான் இந்த  Facebook மற்றும் Twitter.

Monday, September 24, 2012

காதலின் பெயரால் தொடரும் (தற்)கொலைகள் !

சமீபத்தில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காதலால் ஏற்ப்படும் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது தொடர்ந்து நடக்கும் தற்கொலைகளால் பெற்றோர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் கடந்த இரண்டு நாட்களில் கோவையில் மட்டும் மூன்று காதல் (தற்)கொலைகள் நடந்துள்ளன.

நேற்று முன்தினம் தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் மாணவி தன்னை காதலிக்க மறுத்தால் அவரின் வீட்டிற்கு சென்று அந்த மாணவியையும் அவரின் தாயாரையும் கத்தியால் குத்தி தானும் தீவைத்து தற்கொலை செய்துகொண்டார் ஒரு மாணவன்  இதேபோல் வேறொரு சம்பவத்தில் பதினான்கு வயதான மாணவியை இருபத்தி ஒரு வயது மாணவன் தன அவளை காதலிப்பதாகவும் தன்னை அவளும் காதலிக்க வேண்டும் என கூறியுள்ளார் அதற்க்கு அந்த மாணவி மறுக்கவே அந்த மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

Wednesday, September 19, 2012

வீட்டுக்குள்ளே இருந்தாலும் கவனமா இருங்க பெண்களே!


மதுரை: பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று வெளியே செல்லும் பெண்களுக்குத்தான் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்றில்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட அச்சுறுத்தல்களும், அவர்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
நம் வீட்டிற்குள் கேபிள், பிளம்பிங், எலக்ட்ரிகல் வேலை என்று நுழையும் சில நபர்கள் நமக்குத் தெரியமாலேயே ஸ்பை கேமராவை பொருத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். இவற்றை படம் பிடித்து அதனை பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து காசு பார்த்து விடுகின்றனர். இது நடந்தது மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் இல்லை. நாகரீக வாசம் அதிகம் எட்டிப்பார்க்காத மதுரை மாவட்டத்தில்தான்.

Wednesday, September 05, 2012

நகைகள் வெளியே தெரியாமல் மறைக்க இந்திய பெண்களுக்கு இங்கிலாந்து போலீசார் அறிவுரை (இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்பு )


லண்டன்: இங்கிலாந்தில் வாழும் இந்திய பெண்கள் வெளியே செல்லும்போது ஸ்கார்ப் அல்லது துப்பட்டாவால் தங்க நகைகளை மறைத்துக் கொண்டு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்தில் லெஸ்டரில் உள்ள கிழக்கு மிட்லேண்ட்ஸ் நகரில் இந்திய வம்சாவழியினர் அதிகம் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள பெல்கிரேவ் ரோட்டில் ஏராளமான இந்திய வம்சாவழியினர் நகைக்கடைகள் வைத்துள்ளனர். அந்த கடைகளுக்கு ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருந்து நகைகள் செல்கின்றன.

Tuesday, September 04, 2012

இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பிற்கு வேட்டுவைக்கும் தமிழக கட்சிகள்!

தொடர்ந்து தமிழக கட்சிகள் சிங்களவர்களை குறிவைத்து தாக்குவதால் இலங்கையில் பல்வேறு இடங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு குறித்து மிகப்பெரிய கேள்விக்குறி ஏற்ப்படட்டுள்ளது.

இலங்கையில் 2009 மே மாதம் நடந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டாதாக கூறி தமிழ்நாட்டில் உள்ள  அணைத்து அரசியல் கட்சிகளும் இலங்கை அரசுக்கு எதிராகவும் சிங்களர்களுக்கும் எதிராக தொடர்ந்து தமிழக மக்களை தூண்டி விட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்ற வருடம் ராஜபக்சேயின் மைத்துனர் ராமேஸ்வரம் கோவிலுக்கு வழிபாடு நடத்த வந்த அவரை அவர்  தங்கியிருந்த விடுதிக்குச் சென்று தமிழக அரசியல் காட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி அவரை நாட்டை விட்டே துரத்தி  அடித்தனர்.

Saturday, August 18, 2012

போலி போட்டோக்களுக்கு ஏமாறாதீர்! – மியான்மர் புகைப்படங்களின் பின்னால் உள்ள புனைவுகள்!

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.

(அல் குர்ஆன் 49 : 6)

மியான்மரில் வாழும் ரோஹிங்யா இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டு ஆட்சியாளர்களாலும் புத்த பிட்சுகளாலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அது தொடர்பாக உலகளாவிய முஸ்லிம்களும் மனித உரிமை ஆர்வலர்களும் தமது ஆழ்ந்த கவலைகளையும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு இலங்கை வாழ் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.

Saturday, August 04, 2012

விளையாட்டு அரங்கமா ? ஆபாசக் கூடாரமா ?


உலக(ஆபாச)விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற்று வருகின்றதுஇதனை உலக விளையாட்டு திருவிழாவாக ஆக்கி ஒவ்வொரு நாட்டையும்தான் இந்த போட்டியை நடத்துவது தன் நாட்டிற்க்கு கௌரவம் என்றும் அதில் பங்கேற்பது ஒவ்வொரு தனிநபருக்கும் மிகப்பெரிய லட்சியமாகவும் விளம்பரம் மூலம் அந்த விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள் ஏற்படுத்தி உள்ளதுமேற்கத்திய ()நாகரீக மோகத்தால் பாரம்பரியமிக்க சில நாடுகள் கூட இந்த போட்டியை நடத்த கோடிகளில் செலவு செய்து பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றது என்றுதான் நாம் நினைக்கின்றோம்


Sunday, July 08, 2012

பத்திரிக்கையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்த மதுரை ஆதினம்! வீடியோ இணைப்பு

ஒரு நாட்டின் இறையாண்மைக்கு மிக முக்கிய தூண்களாக விளங்கி வருவது மூன்று துறைகள் காவல்துறை நீதித்துறை பத்திரிக்கைத்துறை இவை மூன்றும் செம்மையாக செயல்பட்டால் மாத்திரமே நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படும் இல்லாவிட்டால் ஒட்டு மொத்த சமூக கட்டமைப்பும் சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும் ஆனால் இந்த மூன்று தூண்களாக வர்ணிக்கப்படும் இவர்கள் தங்களின் பொறுப்புணர்ந்து செயல்படுகிறார்களா என்றால் யோசிக்காமல் இல்லை என்று சொல்லிவிடலாம்.

நாடே எதிர்பாத்து காத்திருந்த ஒரு மிக முக்கிய தீர்ப்பான பாபர் பள்ளிவாசல் தீர்ப்பு எவ்வாறு வெளியானது என்று இந்த அனைவருக்கும் தெரியும் உலகமே இந்தியா நீதித்துறையை பார்த்து காரி உமிழும் அளவிற்கு இருந்தது ஒரு சமுதாயத்திற்கு மிகப்பெரிய அநீதி சங்க்பரிவார தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது அதை இந்த உலகமே அதிர்ச்சியுடன் நேரடியாக பார்த்தது அதுமட்டுமில்லை அந்த இடம் சம்பந்தப்பட்ட அணைத்து ஆவணங்களும் முஸ்லிம்களிடமே இருந்தது இடிக்கும் அந்த நொடி வரை பொசிசனும் முஸ்லிம்களிடம்தான் இருந்தது ஆனால் இவற்றை எதையும் பார்க்காமல் என்ன தீர்ப்பு வழங்கினார்கள் இந்த மிக முக்கிய தூண்களில் ஒன்றான நீதித்துறை பறிகொடுத்தவனுக்கு ஒரு பங்கு அநியாயமாக அபகரித்தவனுக்கு இரண்டு பங்கு என்று மகா கேடுகெட்ட தீர்ப்பை அளித்து.

Saturday, July 07, 2012

கவர்ச்சி ஆடை அணிந்து வரக்கூடாது ஆசிரியைகளுக்கு தமிழக அரசு உத்தரவு! வீடியோ இணைப்பு

நமது கலாசசாரத்திற்கேற்பவும், பண்பாட்டுக்கு ஏற்பவும், நாகரீகமான முறையில் ஆசிரியைகள் உடை அணிய வேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம் திடீரென ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாம்.
ஜூன் 29ம் தேதி இந்த சுற்றறிக்கை போயுள்ளது. அதில், அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியைகள், ஆசிரியர்ள், வகுப்பறையில் நாகரீமான முறையில் உடையுடன் காணப்பட வேண்டும் என அறிவுறுத்துமாறு பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளது.
நாகரீகமற்ற, நமது கலாச்சார, பண்பாட்டுக்குப் புறம்பான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் அணியக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, May 01, 2012

ஆவியின் பெயரால் நிகழும் அட்டூழியங்கள்.


ஷேக்பாபுஅல்லாபி என்ற முஸ்லீம் தம்பதிகள் நள்ளிரவு நேரங்களில் சென்று கிராமத்தின் இடுகாட்டில் மண்டை ஓடுகளை சேகரித்துக் கொண்டு வந்து பில்லி சூனியம் செய்வதை பிழைப்பாகக் கொண்டவர்கள். சம்மந்தப்பட்ட கிராமத்தில் எதிர்பாராமல் தொடர் மரணங்கள் நிகழவே இவர்கள் மண்டை ஓடுகளை சேகரித்து பில்லி,சூனியம் செய்வதால் ஏற்பட்ட விளைவு தான் தொடர் மரணம் என்று முடிவு செய்த ஊர் மக்கள் அவர்களை நையப்புடைத்து இருவரின் பற்களையும் நிற்க வைத்து கதற கதற பிடுங்கி எடுத்துள்ளனர். 

42 வயதையுடை முருகன் என்ற மந்திரவாதி நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவியையும், 7ம் வகுப்புப் படிக்கும் மாணவியையும் இறந்த ஆவியை விரட்டுவதற்கு தனி அறையில் பூஜை செய்ய வேண்டும் என்றுக் கூறி தாய். தந்தை அனுமதியுடன் கதவைத் தாழிட சிறிது நேரத்தில் அலறி அடித்து கதவைத் திறந்து கொண்டு இரண்டு மகள்களும் ஓடிவந்து மந்திரவாதி தவறாக நடக்க முயற்சித்ததாகக் கூற ஊர் மக்கள் கூடி நையப்புடைத்துள்ளனர். இது மற்றொரு சம்பவம்.



Tuesday, April 24, 2012

ஆபாசத்திற்கும் சூதாட்டத்திற்கும் கூடாரமாக திகழும் IPL கிரிகெட்!?


ஏப்ரல்3அன்று சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் துவக்க விழாவின் போது ஆபாச நடனமாடிய பாலிவுட் நடிக> நடிகையர் மீது ஒழுங்கு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோயில் திருவிழாக்களில் ஆடும் நடனத்தை தடை செய்த போலீஸார் இதை கண்டு கொள்ளாதது துரதிஸ்டம் என்றுக் கோரி மதுரை காந்தி நகரைச் சேர்ந்த வக்கீல் ஜெயக்குமார் என்பவர் மதுரை உயர் நீதி மன்றத்தில் அப்பொழுதே மனுத் தாக்கல் செய்திருந்தார் மனுவை வேண்டுமென்றே இழுத்தடித்த உயர்நீதிமன்ற நீதிபதி20-4-2012 அன்று விசாரித்து மேல்படி மனுவை கூடுதல் டிஜிபி க்கு அனுப்பி நடிவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளதாக அறிவித்தள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் துவக்க விழாவின் போது ஆபாச நடனமாடிய பாலிவுட் நடிகநடிகையர் மீது ஒழுங்கு நடிவடிக்கை எடுக்கக் கோரி வக்கீல் ஜெயக்குமார் மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பே தமிழகத்தில் 10ம் வகுப்புக்கான பரீட்சை தொடங்க இருப்பதால் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 4ம் தேதி நடக்கவிருக்கின்ற ஐ.பி.எல். விளையாட்டின் தேதியை தள்ளி வைக்குமாறு பரிந்துரை செய்து மாநில முதல்வருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடிதம் எழுதியது. பார்க்க http://www.tntjsw.net/index.php ஆனால் மாநில முதல்வர் அதன் தேதியைக் கூட தள்ளி வைக்க வில்லை, தள்ளி வைக்க வில்லை முடிய வில்லை.


Monday, April 02, 2012

பன்றி காய்ச்சல் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன

சில காலமாக ஓய்ந்திருந்த பன்றி காய்ச்சல் என்று நோய் இன்று மீண்டும் மீடியாக்கள் மூலம் மக்களிடம் பீதியை கிளப்பி வருகிறார்கள் அப்படி பரப்புவது அனைத்தும் உண்மையா மேலும் இந்த காய்ச்சலுக்கு இஸ்லாம் கூறும் விளக்கம் என்ன அதை எப்படி அணுகுவது என்பதை அறிய இந்த வீடியோவை காணவும்.



Sunday, March 18, 2012

பணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்:

சென்னை, மார்ச்.18: அரசு சாரா போலி தொண்டு நிறுவனங்கள் குடிசைப் பகுதிகளிலும், ஏழைகள் வசிக்கும் பகுதிகளிலும் சேவை செய்கிறோம் என்ற பெயரில் பணம் கொடுத்து மதமாற்றம் செய்வது நாள்தோறும் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத்  தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த அரசு சாரா போலி தொண்டு நிறுவனங்கள் குடிசைப் பகுதிகளிலும், ஏழைகள் வசிக்கும் பகுதிகளிலும் சேவை செய்கிறோம் என்ற பெயரில் பணம் கொடுத்து மதமாற்றம் செய்வது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பணமாகவும், வீடுகளாகவும் எப்படி இவர்களை இத்தனை கோடிகளைச் செலவிட்டு ஆள் பிடிக்க முடிகின்றது? தனியார் தொலைக்காட்சிகளில் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய்கள் கட்டணம் செலுத்தி  எப்படி நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட  மதப்பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்த முடிகிறது என்ற சந்தேகங்களுக்கு இப்போதுதான் அரசின் சார்பில் விடையளிக்கப்பட்டுள்ளது.

Sunday, February 26, 2012

பெற்றோர்களின் சிந்தனைக்கு!

சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் செயின் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி இந்த பள்ளியில் ஹிந்தி மற்றும் அறிவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி என்ற 39 வயது ஆசிரியையை அந்த பள்ளியில் 9 வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த பிப்ரவரி 9  அன்று வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் நாம் பெறவேண்டிய பாடங்களும் படிப்பினைகளும் நிறைய உள்ளன இந்த கொலைக்கு காரணம் என்ன என்று அந்த மாணவனிடம் போலீசார் விசாரித்தபோது அந்த மாணவன் அளித்த வாக்குமூலம் நாம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y