அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Sunday, February 26, 2012

பெற்றோர்களின் சிந்தனைக்கு!

சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் செயின் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி இந்த பள்ளியில் ஹிந்தி மற்றும் அறிவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி என்ற 39 வயது ஆசிரியையை அந்த பள்ளியில் 9 வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த பிப்ரவரி 9  அன்று வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் நாம் பெறவேண்டிய பாடங்களும் படிப்பினைகளும் நிறைய உள்ளன இந்த கொலைக்கு காரணம் என்ன என்று அந்த மாணவனிடம் போலீசார் விசாரித்தபோது அந்த மாணவன் அளித்த வாக்குமூலம் நாம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
படம் பார்த்து கொலை செய்தேன் 
அக்னி பாத் என்ற படம் பார்த்தேன் அதில் வரும் சம்பவங்களைப்போல அதை பார்த்துதான் ஆசிரியரை கொன்றேன் என்று அந்த மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

15 வயது மாணவனுடைய இத்தகைய கொடூரமான வக்கிர புத்தியை ஊட்டக்கூடிய மகத்தான பணியை இந்த திரைப்படங்கள் செய்து வருகின்றன என்றால் இந்த நாடு எத்தகைய கலாச்சாரத்தை நோக்கி சென்று கொண்டிருகிறது என்பதயும் இந்த நிலை முத்திபோகுமேயானால் நாம் அடிக்கடி அமெரிக்க மற்றும் மேற்க்கத்திய நாடுகளில் நடப்பதாக செய்திதாள்களில் படித்துக் கொண்டிருக்குரோமே! ஆசிரியரை சுட்ட மாணவன் கைது பலபேரை சுட்ட பள்ளி மாணவன் சிக்கினான் இதுபோன்ற செய்திகள் நமது தமிழகத்திலும் நடக்க ஆரம்பித்துவிடும்.

திரைப்பட மோகத்தின் உச்சம் 
எந்த அளவிற்கு திரைப்பட மோகம் நாம் மக்கள் மத்தியில் தலை விரித்தாடுகிறது என்பதற்கு இந்த நிகழ்வுக்கு சான்று பகர்கிறது எந்த அளவிற்கென்றால் இந்த கொலை சம்பவத்தை இவ்வளவு சீரியஸாக ஒவ்வொருவரும் நினைத்துக்கொண்டு செய்தி தாள்களையும் தொலைக்காட்சி சேனல்களையும் திருப்பி பார்த்தல் இந்த கொலை சம்பவத்தைப் பற்றி அவர்கள் செய்தி சொல்லும் போதும் அதை பற்றி எழுதும் போதும் கூட ஏய் திஸ் கொல வெறி ஏன் இந்த கொல வெறி என்று திரைப்பட பாடல் பாணியிலேயே செய்திகள் சொல்கிறார்கள் என்றால் ஒரு துக்ககரமான செய்தியை கூட இவர்களை சினிமா எந்த அளவிற்கு சிந்திக்க விடாமல் தடுத்து இவர்களது மூளைக்கு மூடிபோட்டுள்ளது என்று நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

பெற்றோர்களே உஷார்!
இதுபோன்ற சம்பவங்களில் நாம் பெறவேண்டிய அடுத்த படிப்பினை பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஒழுங்காக பேணி வளர்க்க வேண்டும் என்பதுதான் இதுபோன்ற வன்முறையை தூண்டக்கூடிய படங்களையும் ஆபாச படங்களையும் குடும்பம் சகிதம் பார்த்து பரவசப்பட்டு (?) இருக்கும் போது இது போன்ற காரியங்களை நாம் நம்முடைய வாழ்கையில் செய்தால் என்ன என்ற உந்துதல் குழந்தைகள் மனதில் வந்து விடுகின்றன.

நம்முடைய பெற்றோர்களும் இணைந்து இருந்து பார்த்த, அவர்கள் ரசித்தா அவர்கள் ஆமோதித்த அவர்கள் கைதட்டி வரவேற்ற இதுபோன்ற வன்முறையையும் ஆபாசத்தையும் நாம் நம்முடைய வாழ்கையில் செய்தால் தவறில்லை என்று நமது குழந்தைகள் உள்ளத்தில் பதியுமானால் நாளை நமக்கும் கூட இந்த நிலை ஏற்படலாம்.

 பெற்றோர்கள் கொடுக்கும் டார்ச்சர் தாங்க முடியாமல் பெற்றோர்களியே கொலை செய்வது போல ஒரு அழகிய (?) திரைக்கதை வசனத்துடன் கூடிய ஒரு சினிமாவை பெற்றோர் சகிதம் அமர்ந்து ரசித்து பார்க்கும் ஒரு மாணவன் நம்முடைய பெற்றோர்கள் இதுபோல டார்ச்சர் செய்தால் இந்த படத்தில் தனது பெற்றோரை கிளைமாக்ஸ் காட்சியில் கொலை செய்யும் மகனைப்போல நமது பெற்றோரயும் தீர்த்து கட்டிவிட்டு இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை செய்து காட்டிவிடலாம் என்று முடிவெடுத்தால் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியைக்கு வந்த கதிதான் சினிமா பார்க்க வைத்து தங்களது குழந்தைகள் கெடுக்கும் பெற்றோருக்கும் ஏற்படும் என்பதை அவர்கள் உணரவேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளை டார்ச்சர் செய்வது கூடாது 
அடுத்து இந்த விசயத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய படிப்பினை பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை டார்ச்சர் செய்வது கூடாது என்பதாகும் இப்பொழுது உள்ள கால சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் ஏதனும் ஒரு பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்துவிட்டால் அந்த குழந்தை பாடு பரிதாபம்தான் ஏன் நீ மதிப்பெண் குறைவாக வாங்கினாய் என்று அந்த குழந்தைகளை பெற்றோர்கள் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல ஏதோ ஐந்து மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் உலகமே அழிந்து விட்டது போல அந்த குழந்தைகளை போட்டு பின்னி எடுக்க கூடிய பெற்றோகள் ஏராளமாக உள்ளனர்.

ஒரு பக்கம் இப்படி குழந்தைகளை பெற்றோர்கள் அடித்து துன்புறுத்தி அவர்களுக்கு மெண்டல் டார்ச்சர் கொடுத்து அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்ப்படுத்தும் போது அவர்கள் இதற்கான தீர்வுக்கு கிடைக்காமல் தவிக்கின்றனர் துடிக்கின்றனர்.

மறுபக்கம் சரியாக படிக்காவிட்டலோ அல்லது மதிப்பெண் குறைந்துவிட்டாலோ ஏன் நீ சரியாக படிக்கவில்லை ஏன் குறைவாக மதிப்பெண் வாங்கினாய் என்று ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்தில் அவர்களை கேட்க்கும்போது அவர்களுக்கு மன அழுத்தம் இன்னும் அதிகமாகிறது வீட்டுக்கு போனால் அடித்து துவைகிரார்கள் பள்ளிக்கு வந்தால் பின்னி எடுகிறார்கள் ஏறு உணரும் மாணவன் மன அழுத்தத்தின் உச்சிக்கே சென்றால் என்ன நடக்கும்.

நடக்க கூடாததெல்லாம் நடக்கும் அவன் பள்ளிக்கும் செல்ல முடியாமல் வீட்டுக்கும் செல்ல முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளானால் வேறு வழியின்றி அவன் கத்தி விற்கும் கடைக்கு செல்லவேண்டிய செல்லவேண்டிய நிர்பந்தத்தை பெறோர்களும் ஆசிரியர்களும் தான் உருவாகுகின்றார்கள் அதற்க்கு வாழ்வியல் வழிகாட்டும் காரணியாக இந்த கேடுகெட்ட சினிமாக்கள் காரணமாக அமைந்துள்ளன.

இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் இனிமேலும் தொடராமல் இருக்க வேண்டுமானால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரவனைப்பதோடு ஆசிரியர்களும் அவர்களை ஊக்கப்படுத்தும் விசயங்களை சொல்லி அவர்களை ஊக்குவிப்பதோடு வன்முறைகளையும் ஆபாசங்களையும் தூண்டும் கேடுகெட்ட சினிமாக்களையும் மெகா சீரியல்களையும் விட்டு மக்கள் வெளியேற வேண்டும் அப்பொழுதுதான் இந்த சமுதாயமும் நாடும் உருப்படும்.

நன்றி -உணர்வு இதழ் 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y