அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, February 28, 2013

மாநில தலைவரின் குவைத் உரை நேரடி ஒளிபரப்பில்!

மாநில தலைவரின் குவைத் உரை நேரடி ஒளிபரப்பில்! நாளை வெள்ளிக்கிழமை 01.03.2013 சவுதி நேரம் மாலை 06.00 மணிக்கு பார்க்க தவறாதீர்கள்

Wednesday, February 27, 2013

நரகப்படுகுழிக்கு வழிகாட்டும் எஸ்.டி.பி.ஐ

இதற்கு முன்பாக ..கட்சியினர் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இருட்டில் சிரமப்பட்டு செல்லாமல் இருக்க ஒளிரும் குச்சிகளை வழங்கி இணைவைப்பிற்கு வழிகாட்டினர். தற்போது அவர்களுக்கு போட்டியாக எஸ்.டி.பி. கட்சியினரும் கலத்தில் குதித்துள்ளனர்.

சபரி மலைக்கு செல்லும் வழி என்று தங்களது போர்டில் வழிகாட்டி இணைவைக்க விரும்பக்கூடியவர்கள் இந்த வழியாக செல்லுங்கள் என்று நரகப்படுகுழிக்கு வழிகாட்டியுள்ளனர்.

Sunday, February 24, 2013

அல்லாஹ்வின் ஆலயத்திற்கு அள்ளிக்கொடுங்கள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு  நிதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை சார்பாக சென்ற வாரம் ஜெத்தா  தலைமை மூலம் வழங்கப்பட்டது அதை பெற்றுக்கொண்ட கிளை நிர்வாகிகள் அனுப்பி தந்துள்ள கடிதம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

நீங்களும் அல்லாஹ்வின் நன்மையை பெற இதுபோன்ற அல்லாஹ்வின் இல்லத்திற்கு உதவிடுங்கள் நீங்கள் தனித் தனியாகவோ அல்லது எங்களிடமோ தந்து அனுப்பலாம்.


Saturday, February 16, 2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தின் மாநில தலைமைக்கு கட்டிடம் கட்டும் பனி துவங்கியது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தின் மாநில தலைமைக்கு கட்டிடம் கட்டும் பனி துவங்கியது.

பள்ளிவாசல் கட்டுமானத்திற்கு பங்களிப்பு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை நிர்வாகிகள் யான்பு கிளை நிர்வாகிகளை தொடர்புகொண்டு தங்களின் பள்ளியின் கட்டுமான தேவைக்கு உதவிடுமாறு வேண்டுகோள் வைத்ததை அடுத்து யான்பு கிளையின் சார்பாக இந்திய ரூபாய் சுமார் 17000 தொகை அளவிற்கு 1200 சௌதி ரியால் ஜித்தா மண்டல தலைமையின் வழியாக கடையநல்லூர் மக்கா நகர் கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!

Thursday, February 14, 2013

அப்சல் குருவை தூக்கிலிட்டது சரியா? மண்ணடி பொதுக்கூட்டம்

  • உறவினர்களுக்கு கூட தெரியப்படுத்தாமல் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது ஏன்?
  • பிரதமர் கேள்வி கேட்க்கும் அளவிற்கு ஷிண்டே அதுமீறியுள்ளாரா ?
  • யாரை திருப்தி படுத்த அப்சல் தூக்கிலிடப்பட்டார்?
  • பலர் வரிசையில் இருக்கையில் ஏன் அப்சல் குரு அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்டார்?
போன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் பெற

Wednesday, February 13, 2013

போடுங்கையா ஒட்டு கை சின்னத்தைப் பார்த்து !

2009 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஏன் ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கே  வாக்களித்தனர் ஆனால் இன்று காங்கிரஸ் நடத்தும் அரசியல் நாடகத்தைப் பார்த்து அதிகமான முஸ்லிம்கள் மனம் நொந்து போயுள்ளனர் ஒரு தவறான ஆட்சிக்கு தமது ஓட்டும் ஒரு காரணமாகிவிட்டதே என்று பல சகோதரர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கொந்தளித்து போயுள்ளனர்..

Tuesday, February 12, 2013

அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு!

பாராளுமன்றத்தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்து பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பி.நவ்லேகர் என்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் கடந்த 04/08/2005 அன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அபசல் குரு கடந்த வாரம் தூக்கிலிடப்பட்டார். அப்சல் குருவோடு சேர்த்து இந்த நாட்டின் நீதி பரிபாலனமும் தூக்கிலிடப்பட்டுள்ளது.

இந்தத்தீர்ப்பின் மூலம் நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கின்றதா? இந்திய அரசியலமைப்புச் சாசனச் சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றனவா? என்ற சந்தேகம் நம்முடைய உள்ளத்தில் எழுந்துள்ளது.


அப்சல் குரு தெஹல்கா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி

எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' - அப்சல் குரு
அமெரிக்காவின் ‘ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை ‘தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து...

Sunday, February 03, 2013

இன்ஷா அல்லாஹ் 24 மணிநேர இணையதள செய்திச் சேனல்!

இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமை 24 மணிநேர இணையதள செய்திச் சேனல் ஒன்று அடுத்த மாதம் முதல் தொடங்க இருக்கிறது இதற்க்கு செய்தி செய்தி ஆசிரியர்கள் தேவை என உணர்வு இதழில் வெளிட்ட விளம்பரம்!









Saturday, February 02, 2013

யான்புவில் நடந்த இரத்த தான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா  மண்டலம் யான்பு கிளையில் சென்ற 01.02.2013 வெள்ளியன்று இரத்த தான முகாம் சிறப்பாக நடந்தது அதில் ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர் நேரமின்மை காரணமாக முப்பது சகோதரர்கள் குருதி கொடையளித்தனர்.

குருதி கொடையளித்த அனைவருக்கும் ஜூஸ் மற்றும் பழம் கொடுக்கப்பட்டது மேலும் வந்திருந்த சகோதரர்கள் அனைவருக்கும் பகல் உணவு வழங்கப்பட்டு இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்!

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y