புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்பட பேசு என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் இலங்கை சென்று ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ராகவன் என்பவர் தெரிவித்தார். அதில கலந்து கொண்ட தமுமுகவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் சில தனி நபர்கள் செய்வது சமூதாயத்தின் நிலைபாடாக ஆகாது எனக் கூறி ராகவன் கூறிய தகவல் உண்மை என்பது போன்று சித்தரித்தார். இதன் உண்மை நிலை என்ன?
அஸ்லம், அதிரை
இலங்கைத் தூதரகம் முற்றுகை....இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து இன்ஷாஅல்லாஹ் நாளை காலை (17.06.2014) 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.
http://www.tntj.net/256568.html
நாளுக்கு நாள் காவிகளின் செயல்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. முதலில் செங்கோட்டை, மல்லிபட்டினம், வேலூர் தற்போது மேலப்பாளையம் என தொடர்ந்துகொண்டே போகின்றது. இதற்கு ஏழறை இலட்சம் ஏகத்துவப் படைகளைக் கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் நடவடிக்கை என்ன?
நீங்கள் எதை எதிர்பார்த்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள்? அவர்களை எதிர்த்து வன்முறை வழியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இக்கேள்வியைக் கேட்டால், அது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை அல்ல.