அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, January 25, 2012

பைபிள் இறை வேதமா - விவாதம் குறித்த ஒரு பார்வை!

வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான  இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந்ததாகும்.
மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல், இந்த SAN அமைப்பினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டு நிற்கின்றனர்.

பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும், பிறரது கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில் அதிகமாக பிரச்சாரங்கள் செய்கிற வழக்கம் உடையவர்களல்லர். தாங்கள் உண்டு, தங்கள் மார்க்கம் உண்டு என்று இருப்பவர்கள் தான். 

ஆனால், இந்த SAN அமைப்பினரும், அதன் தலைவரான திரு. ஜெர்ரி தாமஸ் அவர்களும் தங்கள் மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், பிற மதங்களை, அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தை கடுமையாக விமர்சித்தும் சாடியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சாகிர் நாயக் மதங்களை ஒப்பீட்டு நோக்கும் அறிவை (comparitive study ) பெற்றிருக்கிறார் என்பதை அறிந்து, சாகிர் நாயக்கை வீழ்த்த வேண்டும், அவரிடம் எந்த ஞானமும் கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவரை போன்று நாங்களும் comparitive study செய்துள்ளோம், இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதை அவருடன் நேருக்கு நேரான விவாதம் மூலம் நிரூபிப்போம் என்று பகிரங்கமாக சவால் விடுத்தனர்.

Tuesday, January 03, 2012

அனுமாஷ்யம் முன் ஜென்மம்! காசுக்காக தொலைக்கட்சிகள் செய்யும் கயமைத்தனம்


கடந்த சில மாதங்களாக அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நேரடி களத்தொகுப்பு என்ற பெயரில் சில நிகழ்சிகளை ஒளிபரப்பி வருகிறது புலனாய்வு நிகழ்சிகளின்  சாயலில் நடந்தது என்ன என்பதை மக்களுக்கு கட்டுகின்றோம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் தவறான செயல்கள் நாகரீக சமுதாயத்தை மீண்டும் மூட நம்பிக்கை படுகுழிக்குள் தள்ளும் செயல்கள் என்று சொன்னால் அது மிகையாகாது மூட நம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரத்தின் மூலம் தமிழகத்தில் இருக்கும் இப்போதைக்கு கொஞ்சமேனும் போய் பிசாசு என்பவற்றையெல்லாம் மறந்து அதெல்லாம் மூட நம்பிக்கை என்ற நிலையை ஓரளவிற்கு அடைந்து விட்டார்கள்.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y