அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, January 03, 2012

அனுமாஷ்யம் முன் ஜென்மம்! காசுக்காக தொலைக்கட்சிகள் செய்யும் கயமைத்தனம்


கடந்த சில மாதங்களாக அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நேரடி களத்தொகுப்பு என்ற பெயரில் சில நிகழ்சிகளை ஒளிபரப்பி வருகிறது புலனாய்வு நிகழ்சிகளின்  சாயலில் நடந்தது என்ன என்பதை மக்களுக்கு கட்டுகின்றோம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் தவறான செயல்கள் நாகரீக சமுதாயத்தை மீண்டும் மூட நம்பிக்கை படுகுழிக்குள் தள்ளும் செயல்கள் என்று சொன்னால் அது மிகையாகாது மூட நம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரத்தின் மூலம் தமிழகத்தில் இருக்கும் இப்போதைக்கு கொஞ்சமேனும் போய் பிசாசு என்பவற்றையெல்லாம் மறந்து அதெல்லாம் மூட நம்பிக்கை என்ற நிலையை ஓரளவிற்கு அடைந்து விட்டார்கள்.
ஆனால் இன்றைக்கு தொ(ல்)லைக்கட்சிகள் தங்களுக்கு இருக்கும் போட்டி மற்றும் ரைட்டிங் காரணமாக எதயாவது ஒரு நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் டிஆர்பியில் அந்த நிகழ்சிகளையும் அந்த அந்த சேனல்கள் தங்களின் தரத்தையும் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன அதற்கு இவர்கள் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் அமானுஷ்யம் பேய் மர்ம உருவத்தின் நடமாட்டம் முன் ஜென்ம சம்பவங்கள் என மக்களால் ஆராய்ந்து அறியமுடியாத கண்களுக்கு புலப்படாத விசயங்களை வியாபாரமாக்குவது ஆகும்.

இந்த தந்திரத்தை கையாளும் தொலைக்கட்சிகள் ஊர் ஊராக கிராமம் கிராமமாக சென்று அங்கிருக்கும் மக்களிடம் பை எப்படி வந்தது பிசாசு எப்படி சென்றது என கதை அளந்து இவர்களாகவே காட்சிகளை சித்தரித்து மக்களை குழப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் இதன் காரணமாக பேய் பிசாசு என்பதெல்லாம் கிடையாது என்று முடிவெடுத்து தெளிந்து விட்டவரின் மனநிலை இந்த நிகழ்ச்சியெல்லாம் பார்க்குபோது ஒருவேளை பேய் இருக்குமோ என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டு விடும்.

 சித்தரிக்கப்படும் கட்சிகள் திகிலடைய வைக்கும் விதமாக படமாக்கப் படுவதால் மக்கள் இதை விரும்பி பாக்கிறார்கள் அதோடு இந்த கட்சிகளை உண்மையென நம்பி இதுபோல நமக்கும் எதுவும் வந்துவிடக்கூடாது என்ற நிலைக்கு மக்கள் வந்துவிடுகின்றனர்.

அதன் பிறகு அவர்கள் குடுமபதிலோ அல்லது தொழிலிலோ வித்யாசமாக தென்பட்டால் அதற்க்கான பரிகாரம் வேண்டி போலிச்சாமியார்களியும் போலி ஜோசியர்கள் மற்றும் வாஸ்த்து கல் என போலித்தனம் செய்பவர்களையும் நாடிச்சென்று தங்களின் காசு பணங்களை இழந்து நிற்கின்றனர்.

இதெல்லாம் போதாது என்று சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி முன் ஜென்ம வாழ்க்கையை தோண்டி எடுக்கிறேன் என்ற பெயரில் மீண்டும் மக்களை குழப்பும் வேலையை மேற்கொண்டுள்ளது அதாவது இந்த  நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு பிரபலத்தை ஆழ்நிலை உறக்க நிலைக்கு கொண்டு சென்று அவர்களிடம் கேள்வி கேட்க்கிறார்கள் கேள்வி கேட்பவர் தன்னை ஒரு மருத்துவர் என்று சொல்லிக் கொள்கிறார்.

ஆழ்நிலை உறக்கத்திற்கு சென்றுவிடும் அந்த பிரபலத்திடம் இவர் ஒவ்வொரு கேள்வியாக கேட்க்க துவங்குகிறார் நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் சம்பந்தமே இல்லாமல் நான் இப்போது திருப்தி கோவிலில் இருக்கிறேன் என்று சொல்கிறார் இன்னும் சில நிமிடத்தில் பழனி முருகன் கோவிலில் இருக்குறேன் என்று சொல்கிறார் இப்படி தொடர்கிறது இந்த நிகழ்ச்சியின் முட்டாள்தனம்.

இது முடிந்து அவரிடம் இன்னும் கொஞ்சம் முன்னால் செல்லுங்கள் என கேட்க அவர் இன்னும் முன்னால் சென்று தன்னுடைய முன் ஜென்மத்தை அடைகிறாராம் அந்த ஜெம்னத்தில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என கேட்கப்படும்போது அந்த ஜென்மத்தில் மானாக இருந்தேன் மயிலாக இருந்தேன் பட்டாம்பூச்சியாக இருந்தேன் என பெருமையாக சொல்லிக்கொள்கிரார்க்ள ஆய்வுக்கு உட்ப்படக்கூடியவர்கள் ஆனால் அதிலே வருபவர்களில் ஒருவர்கூட நான் நாயாக இருந்தேன் கழுதையாக இருந்தேன் பன்றியாக இருந்தேன் எனச் சொல்வதில்லை, சொல்வதில்லை என்று சொல்வதைவிட சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்று சென்னால் சாலப்பொருந்தும்.

முன் ஜென்மம் என்ற முட்டாள்தனமான விவகாரத்தை கையிலெடுத்திருக்கும் தொலைக்காட்சி நிறுவனத்தினர் அதை வைத்து காசு பார்க்கும் வேலையே செய்கிறார்கள் லாபம் கிடைத்தாலும் அதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்ற நிலையாவது அதில் இருக்கிறதா என்றால் இல்லவே இல்லை கொஞ்சம் கொஞ்சமாக காட்டுமிராண்டி காலத்திலருந்து நவீன காலத்திற்கு நாகரிக மனிதனாக மாறிவிட்ட மக்களை மீண்டும் பழைய அறியாமை காலத்திற்குத் தள்ளிச்செல்லும் கீழ்த்தர வேலையே இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்து வருகின்றன.

தொலைக்காட்சி வழியாக எதை சொன்னாலும் நம்பும் மக்கள் இவைகளையும் கொஞ்சமும் ஆராயாமல் அப்படியே உண்மை என நம்பி விடுகின்றனர் இது போல நிகழ்சிகளை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதற்க்கு பரிகாரம் செய்கின்றேன் என பல போலிகள் கிளம்பி மக்களின் பொருளாதாரங்களுக்கு வேட்டு வைக்கும் வேலைகளில் ஈடுபடுவதற்கும் அதன் மூலம் பல பெண்களின் கற்ப்பை சூறையாடுவதற்கும் இதுபோன்ற மூடநம்பிக்கையை உருவாக்கும் செயல்பாடுகளே காரணம் ஆகும்.

உண்மையை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய ஊடகங்கள் தங்களின் சுயநலனுக்காக இதுபோன்ற முட்டாள்தனமான சம்பவங்களை ஒளிபரப்பி அதுகுறித்து எந்த வித விழிப்புணர்வையும் மக்களுக்கு தெரிவிக்காமல் சுய நலத்துடன் நடந்து கொள்வது வன்மையாக கண்டிக்கதக்கது.
நன்றி : உணர்வு 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y