அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, September 24, 2012

காதலின் பெயரால் தொடரும் (தற்)கொலைகள் !

சமீபத்தில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காதலால் ஏற்ப்படும் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது தொடர்ந்து நடக்கும் தற்கொலைகளால் பெற்றோர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் கடந்த இரண்டு நாட்களில் கோவையில் மட்டும் மூன்று காதல் (தற்)கொலைகள் நடந்துள்ளன.

நேற்று முன்தினம் தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் மாணவி தன்னை காதலிக்க மறுத்தால் அவரின் வீட்டிற்கு சென்று அந்த மாணவியையும் அவரின் தாயாரையும் கத்தியால் குத்தி தானும் தீவைத்து தற்கொலை செய்துகொண்டார் ஒரு மாணவன்  இதேபோல் வேறொரு சம்பவத்தில் பதினான்கு வயதான மாணவியை இருபத்தி ஒரு வயது மாணவன் தன அவளை காதலிப்பதாகவும் தன்னை அவளும் காதலிக்க வேண்டும் என கூறியுள்ளார் அதற்க்கு அந்த மாணவி மறுக்கவே அந்த மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

Friday, September 21, 2012

யான்பு கிளை நிர்வாகிகள் கூட்டம்.

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை நிர்வாகிகள் கூட்டம் ரமளானுக்கு பிறகு நடைபெற்றது அதில் தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர் தவ்ஹீத் ஜமாஅத் தாயகத்தில் செயல்படும் விதம் அனைவரையும் மிக மகிழ்ச்சிக் குள்ளாக்கியுள்ளது நடந்து முடிந்த சத்தியமூர்திபவன் அமெரிக்க தூதரகம் முற்றுகை அதில் தவ்ஹீத் ஜமாத்தினர் காத்த சமூக ஒழுங்கு மற்றும் சமுதாய கண்ணியம் மிக பிரம்மிப்பை அளிக்கின்றது என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். 

மேலும் அமெரிக்க தூதரகம் முற்றுகை பல்லாயிரக்கணக்காக சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர் இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக இறுதியில் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்! 




Wednesday, September 19, 2012

வீட்டுக்குள்ளே இருந்தாலும் கவனமா இருங்க பெண்களே!


மதுரை: பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று வெளியே செல்லும் பெண்களுக்குத்தான் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்றில்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட அச்சுறுத்தல்களும், அவர்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
நம் வீட்டிற்குள் கேபிள், பிளம்பிங், எலக்ட்ரிகல் வேலை என்று நுழையும் சில நபர்கள் நமக்குத் தெரியமாலேயே ஸ்பை கேமராவை பொருத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். இவற்றை படம் பிடித்து அதனை பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து காசு பார்த்து விடுகின்றனர். இது நடந்தது மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் இல்லை. நாகரீக வாசம் அதிகம் எட்டிப்பார்க்காத மதுரை மாவட்டத்தில்தான்.

Thursday, September 13, 2012

எங்கே உங்களின் ஒற்றுமை ?

முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்ப்பெயருக்கு களங்கம் கற்ப்பிக்கும் முகமாக அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து  யூத இனத்தைச் சேர்ந்த ஷ்யாம்பைசரி என்பவன் இயக்கிய திரைப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளான் இந்த படுபாதகச் செயலை உலகத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் கடுமையாக கண்டித்துள்ளனர் அமெரிக்காவிற்கு எதிராக உலக முஸ்லிம்கள் பொங்கி எழுந்துள்ளனர். 

அதேபோல தமிழகத்திலும் அணைத்து முஸ்லிம் இயக்கங்களும் வன்மையாக கண்டித்துள்ளது இஸ்லாத்திற்கும் முஸ்லிமுக்கும் ஒரு அவமானம் என்றால் உடனே களம் இறங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இச்செயலை வன்மையாக கண்டித்து முதலில் கண்டன அறிக்கையையும் அதனைத்தொடர்ந்து வரும் 15.09.2012 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றிகையிடப் போவதாக அறிவித்தது.

Monday, September 10, 2012

மோடியை பின்பற்றி தருண் கோகோய்!

கடந்த  மாதம் அஸ்ஸாமில் நடந்த வன்முறையில் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் இந்த கலவரம் சங்கபரிவார அமைப்புகள் திட்டமிட்டே அரங்கேற்றியது அது மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் அஸ்ஸாமிய போடோ இன மக்களை ஒன்றிணைத்து மீண்டும் ஒரு மிகப்பெரிய வன்முறையை அஸ்ஸாமில் கட்டவிழ்த்து விட்டு எஞ்சியுள்ள முஸ்லிம்களையும் துடைத்தெறிவதர்க்காக பல்வேறு மாநிலங்களில் வாழும் அஸ்ஸாமிய மக்களுக்கு முஸ்லிம்களால் ஆபத்து என்று ஒரு வதந்தியை கிளப்பி அதில் அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர் என்பதை அங்கே தொடர்ந்து முஸ்லிம்கள் தாக்கப்படுவதை வைத்து புரிந்து கொள்ளலாம். 

Thursday, September 06, 2012

2012 வெளிநாடுகளில் திரட்டி தாயகத்தில் விநியோகித்த ஃபித்ரா விபரம் !


Wednesday, September 05, 2012

விவாதங்கள் ஓய்வதில்லை தொடர் : 4


1980க்குப் பின்னால் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் களை கட்ட ஆரம்பித்தது. இதன் வெளிச்ச அலைகள் தமிழகத்தின் பல பகுதிகளையும் நனைக்கத் தொடங்கியது. தஞ்சையில் தான் இந்தச் சத்தியப் பிரச்சாரத்தின் வேகத்தையும், வீரியத்தையும் பார்க்க முடிந்தது. அங்கு தான் ஆலிம்களின் வெறித் தனத்தையும் காண முடிந்தது. காரணம் தமிழகத்திலேயே அதிகமான அரபி மதரஸாக்கள் தஞ்சையில் தான் நிறுவப்பட்டிருந்தன.
சோழ நாடு சோறுடைத்து என்ற தஞ்சையின் மண் வளத்தைப் போலவே அங்கு வாழும் முஸ்லிம்களின் மன வளமும் அமைந்திருந்தது. அத்துடன் அந்த மக்களின் சிங்கப்பூர், மலேஷிய பயணங்கள் அவர்களது செல்வச் செழிப்பை மேலும் வளமாக்கின.
அந்த வளத்திற்குத் தக்க, தான தர்மங்கள், விருந்தோம்பல்கள் இன்று வரை அந்த மக்களிடம் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றின் அடையாளச் சின்னங்கள் தான் இந்த அரபி மதரஸாக்கள்.
நீடூர், கிளியனூர், அரங்கக்குடி, அத்திக்கடை, அதிராம்பட்டிணம், கூத்தாநல்லூர், பொதக்குடி, சங்கரன்பந்தல் போன்ற பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் ஊர்களில் அரபி மதரஸாக்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆலிம்களின் சங்கமமாக தஞ்சை அமைந்து விட்டது.
இதனால் அங்கு தவ்ஹீது பிரச்சாரத்திற்கு எதிர்ப்பலைகள் மிக வேகமாகக் கிளம்பின. இந்த மதரஸாக்களில் முக்கியமானதாக விளங்கியது நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா என்ற மதரஸாவாகும்.
எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா என்பவர் இந்த மதரஸாவின் அன்றைய முதல்வராக இருந்தார். அத்துடன் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவராகவும் இருந்தார்.

விவாதங்கள் ஓய்வதில்லை தொடர் : 3


8.5.2005 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக வேலூரில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பொதுக் கூட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு வேலூர் பாக்கியாத் மதரஸா மிகவும் முயன்றது. அதன் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து, அல்லாஹ்வின் மகத்தான அருளால் குறிப்பிட்ட தேதியில் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் திரண்டு வந்து சத்திய மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்டுப் பயனடைந்தனர்.
இந்தப் பொதுக் கூட்டத்தில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பேசும் போது, “மார்க்க அறிஞர்களைத் தயார் செய்து தமிழகத்துக்கே வழங்கும் சிறப்பு பெற்றது வேலூர். மிகச் சிறந்த உலமாக்கள் இவ்வூரில் நிறைந்துள்ளனர். இத்தகைய உலமாக்கள் நிறைந்த இவ்வூரில் நான் அறைகூவல் விடுகின்றேன். மத்ஹபுகள் இஸ்லாத்திற்கு விரோதமானவை. மத்ஹபு நூற்களில் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணான சட்டங்களும் உளறல்களும் மலிந்து காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இப்போது பட்டியலிடுகின்றேன்” என்று குறிப்பிட்டார். மேலும் மத்ஹபு நூற்களில் உள்ள அபத்தங்களில் சிலவற்றையும் அரபு மூலத்துடன் பாகம், பக்கத்துடன் வாசித்துக் காட்டி, இதைச் சரியென நிரூபிக்க இயலுமா? என்று சவால் விட்டார்.

விவாதங்கள் ஓய்வதில்லை தொடர் : 2


 03.07.05 அன்று சிதம்பரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் வழக்கம் போல் ஸைபுத்தீன் ரஷாதி நரகல் நடையில் பேசத் துவங்கியதும், இது குறித்து பி.ஜே.யின் முன்னிலையில் நேரடியாக விவாதிக்கத் தயாரா? என்ற கருத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் ஒரு துண்டுச் சீட்டு எழுதி மேடைக்கு அனுப்புகின்றார்கள்.
வழக்கம் போல் தயார் என்று அறிவித்து விட்டு பெங்களூர் பறந்து விட்டார் ஸைபுத்தீன் ரஷாதி.
இந்தப் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சிதம்பரம் ஜமாஅத்துல் உலமாவைத் தொடர்பு கொண்டு விவாதத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதற்குப் பதிலளித்த சிதம்பரம் ஜமாஅத்துல் உலமா, ஸைபுத்தீன் ரஷாதி மேடையில் சொல்லும் வார்த்தைகளை எழுத்து வடிவில் தந்தது.

விவாதங்கள் ஓய்வதில்லை…… தொடர் 1


எல்லா ஆலிம்களைப் போலவே நாமும் வீடு வீடாக மவ்லிது ஓதிக் கொண்டிருந்தவர்கள் தான். இவ்வாறு ஓதுகின்ற அந்த மவ்லிதின் வரிகள் குர்ஆனுடன் மோதும் போக்கு நம்முடைய உள்ளங்களில் ஒரு நெருப்புப் பொறியைக் கிளப்பியது.
தாயத்து, தகடுகள், கப்ரு வணக்கங்கள், தர்ஹாக்கள், அவற்றில் நடக்கும் அனாச்சாரங்கள் இவை அனைத்தும் நம்மை வெகுவாகப் பாதித்தன. இவை அந்த நெருப்புப் பொறியைப் பற்றி, கனன்று எரிய வைத்தன. அதன் விளைவாக எல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய அருட்கொடை தான் ஏகத்துவ சிந்தனை.
இது எந்தத் தனி மனிதனாலும் நமக்குக் கிடைத்ததல்ல! இறைவனாக நமக்குத் தந்த சிந்தனை!
அடுத்த கட்ட நடவடிக்கையாக இதை மக்களிடம் முன் வைத்தோம். அவ்வாறு முன் வைத்த மாத்திரத்திலேயே எதிர்ப்புகள் நம்மை நோக்கி ஏவுகணைகளாகப் பாய்ந்தன. இந்த ஏவுகணைகள் மக்களிடமிருந்து வரவில்லை; உலமாக்களிடமிருந்து தான் வந்தன.
இந்த ஏவுகணைகளை எதிர் கொள்வதற்கு நாம் கையில் எடுத்தது, எல்லாம் வல்ல அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கொடுத்த வாதம் என்ற ஆயுதம்.

நகைகள் வெளியே தெரியாமல் மறைக்க இந்திய பெண்களுக்கு இங்கிலாந்து போலீசார் அறிவுரை (இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்பு )


லண்டன்: இங்கிலாந்தில் வாழும் இந்திய பெண்கள் வெளியே செல்லும்போது ஸ்கார்ப் அல்லது துப்பட்டாவால் தங்க நகைகளை மறைத்துக் கொண்டு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்தில் லெஸ்டரில் உள்ள கிழக்கு மிட்லேண்ட்ஸ் நகரில் இந்திய வம்சாவழியினர் அதிகம் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள பெல்கிரேவ் ரோட்டில் ஏராளமான இந்திய வம்சாவழியினர் நகைக்கடைகள் வைத்துள்ளனர். அந்த கடைகளுக்கு ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருந்து நகைகள் செல்கின்றன.

Tuesday, September 04, 2012

இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பிற்கு வேட்டுவைக்கும் தமிழக கட்சிகள்!

தொடர்ந்து தமிழக கட்சிகள் சிங்களவர்களை குறிவைத்து தாக்குவதால் இலங்கையில் பல்வேறு இடங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு குறித்து மிகப்பெரிய கேள்விக்குறி ஏற்ப்படட்டுள்ளது.

இலங்கையில் 2009 மே மாதம் நடந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டாதாக கூறி தமிழ்நாட்டில் உள்ள  அணைத்து அரசியல் கட்சிகளும் இலங்கை அரசுக்கு எதிராகவும் சிங்களர்களுக்கும் எதிராக தொடர்ந்து தமிழக மக்களை தூண்டி விட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்ற வருடம் ராஜபக்சேயின் மைத்துனர் ராமேஸ்வரம் கோவிலுக்கு வழிபாடு நடத்த வந்த அவரை அவர்  தங்கியிருந்த விடுதிக்குச் சென்று தமிழக அரசியல் காட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி அவரை நாட்டை விட்டே துரத்தி  அடித்தனர்.

தொலைக் காட்சியில் தொலைந்து விட்ட சமுதாயம் !


இன்றைய நவீன காலத்தில் மனிதனுடன் பிரிக்க முடியாத அளவிற்கு இரண்டறக் கலந்துள்ள ஓர் அற்புதமான அறிவியில் கண்டு பிடிப்பு தொலைக் காட்சியாகும். அறிவியில் கண்டு பிடிப்புகளில் எதுவாக இருந்தாலும் அவற்றில் மனிதர்களுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடியவைகளும் தீமையை ஏற்படுத்தக் கூடியவைகளும் இருக்கின்றன.
புதிது புதிதாக நவீன சாதனங்களை மனிதன் கண்டு பிடிக்கும் போது அவற்றையல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையா? தடுக்கப்பட்டவையா? அல்லது எந்த அளவிற்கு இதைப் பயன்படுத்துவதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது. என்பதை நாம் சற்று நிதானமாக ஆய்வு செய்து அதற்கேற்ப அதைப் பயன்படுத்தி இம்மை மறுமை நற்பேறுகளைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
தொலைக் காட்சி உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மனிதர்கள் இவ்வுலகத்தில் அடைந்திருக்கக் கூடிய நன்மைகள் ஏராளம் இதன் மூலம் இறைவனின் ஆற்றல்களையும் வல்லமைகளையும் இதையெல்லாம் மனிதன் கண்டுபிடிப்பதற்கு அவனுக்கு மேல் ஒரு சக்தி இருக்கின்றது என்பதையும் இன்னும் சாமானிய மக்கள் இந்த அறிவியல் ஆராய்ச்சிகளை அறிந்து பயன்படுத்துவதற்கும் இந்தத் தொலைக் காட்சி அற்புதமான அறியதோர் வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
அல்லாஹ் தன்னைப் பற்றிச் சொல்லும் போது வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 3:190
இவைகளை எல்லாம் சிந்திக்கும் போது இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் அவனுடைய தகுதியையும் அந்தஸ்தையும் உணர்ந்து கொள்ள முடியும். அது போன்று இறைவன் இருக்கிறான் என்பதை சாதாரண பாமர மக்கள் அறிந்து கொள்ளும் அளவிற்கு இந்த தொலைக்காட்சி முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது.

Sunday, September 02, 2012

கோக்னானியை காப்பாற்ற முயன்றது மோடி அரசு-நரோடா பாட்டியா வழக்கை விசாரித்த நீதிபதி


அகமதாபாத்: நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோத்னானியை காப்பாற்ற முதல்வர்  நரேந்திர மோடியின்  அரசு தீவிரமாக முயன்றது என்று இந்த வழக்கில் மாயாவுக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தெரிவித்துள்ளார். இதனால் மோடிக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும் இனக் கலவரம் ஏற்பட்டது. பஜ்ரங் தளம், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் நடத்திய இந்த இனவெறிப் படுகொலை வன்முறையில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதில் நரோடா பாட்டியா பகுதியில்தான் மிகப் பெரிய அளவில் அதிக அளவிலானோர் படுகொலை செய்யப்பட்டனர். மொத்தம் 97 இஸ்லாமியர்கள் இங்கு நடந்த வன்முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள் ஆவர்.
இந்க கொடூரமான சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் குஜராத் அமைச்சரும், 3 முறை எம்.எல்.ஏவுமான மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தீர்ப்பளித்துள்ளார். அதேபோல முன்னாள் விஎச்பி தலைவர் பஜ்ரங்கிக்கு அவரது வாழ்நாள் முழுவதும் ஆயுள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தனது தீர்ப்பின்போது நீதிபதி ஜோத்சனா சில முக்கிய தகவல்களையும் வெளியிட்டுள்ளார். அதாவது மாயாவைக் காக்க மோடி அரசு தீவிரமாக முயன்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாயாவைக் காக்க மோடி அரசு பல வழிகளிலும் முயன்றதாக நீதிபதி தனது கருத்தில் தெரிவித்துள்ளார். இந்த படுகொலை வழக்கில் மாயாதான் வன்முறைக் கும்பலின் தலைவர் போல செயல்பட்டதாகவும் நீதிபதி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
2008ம் ஆண்டுதான் மாயா கோத்னானி அமைச்சர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அப்போது அவர் மகளிர் நலம் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராக பதவி தரப்பட்டார். நரோடா பாட்டியா சம்பவத்தில் பெண்களும், குழந்தைகளும்தான் மிகப் பெரிய அளவில் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி ஜோத்சனா மேலும் கூறுகையில், மாயா கோத்னானிக்கு அப்போதைய விசாரணை அமைப்புகள் அனைத்தும் (அதாவது உச்சநீதிமன்றம் எஸ்ஐடியை அமைப்பதற்கு முன்பு) உதவியாக இருந்துள்ளன. பலியானவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், பாதிப்பை ஏற்படுத்தியவரைக் காக்கும் வகையில் அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டன. கோத்னானியின் பெயர் கூட இந்த சம்பவத்தில் வந்து விடாதபடி காக்க கடுமையாக முயன்றுள்ளனர் என்று கூறியுள்ளார் நீதிபதி.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y