அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, September 10, 2012

மோடியை பின்பற்றி தருண் கோகோய்!

கடந்த  மாதம் அஸ்ஸாமில் நடந்த வன்முறையில் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் இந்த கலவரம் சங்கபரிவார அமைப்புகள் திட்டமிட்டே அரங்கேற்றியது அது மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் அஸ்ஸாமிய போடோ இன மக்களை ஒன்றிணைத்து மீண்டும் ஒரு மிகப்பெரிய வன்முறையை அஸ்ஸாமில் கட்டவிழ்த்து விட்டு எஞ்சியுள்ள முஸ்லிம்களையும் துடைத்தெறிவதர்க்காக பல்வேறு மாநிலங்களில் வாழும் அஸ்ஸாமிய மக்களுக்கு முஸ்லிம்களால் ஆபத்து என்று ஒரு வதந்தியை கிளப்பி அதில் அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர் என்பதை அங்கே தொடர்ந்து முஸ்லிம்கள் தாக்கப்படுவதை வைத்து புரிந்து கொள்ளலாம். 


ஆனால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதற்கு போடோ தீவிரவாதிகளும் சங்கபரிவார பயங்கரவாதிகள் மட்டுமே காரணம் என்றும் அரசு நடுநிலையாகதான் செயல் படுகிறது என்று முஸ்லிம்களும் மற்றும் நடுநிலையாளர்களும் எண்ணியிருந்த நிலையில் நாங்கள் நடுநிலையாளர்கள் இல்லை நாங்களும் சங்கபரிவாரத்தின் ஒரு அங்கமே என்பதைப்போல அம்மாநில முதல் அமைச்சர் காங்கிரஸ் காட்சியை சேர்ந்த தருண் கோகாய் முஸ்லிம்களுக்கு எதிராக விஷ(ம)த்தை கக்கியுள்ளார்.

எப்படி மோடியே குஜராத்தில் ரயிலை எரித்து பலியை முஸ்லிம்களின் மீது போட்டு பல்லாயிரம் முஸ்லிம்களை கருவருத்தானோ ஆதேபோல அஸ்ஸாம் முதல்வரும் நடந்த கலவரத்தில் இந்துக்களின் பங்கு இல்லை முஸ்லிம்கள்தான் காரணம் என்பதைப்போல கலவரங்களுக்கு  முஸ்லிம்களின் மக்கட்தொகைப் பெருக்கமே என்ற ஒரு அறிவற்ற கருத்தை கூறியுள்ளார் இதன் மூலம் இவர் உலகத்திற்கு சொல்லவருவது என்ன வென்றால் முஸ்லிம்கள் எல்லாம் வன்முறையாளர்கள் அவர்கள் உலகத்தில் அதிகரித்தால் வன்முறையும் அதிகாமாகும் என்றும் சீனாவில் முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட வட்டதிக்குள் வைதுள்ளதைப்போல் அஸ்ஸலாமிலும் இவர்களை வைக்கவேண்டும் என்ற ஒரு தோற்றத்திலும் இவ்வாறு ஒரு கருத்தை கூறியுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

இந்த நன்றிகெட்ட தருண்  கோகாய் தான் மூன்று முறை முதல்வரானதற்கு யார் காரணம் என்பதை மறந்துவிட்டார் அஸ்ஸாமில் வாழும் இருபத்தி ஐந்து சதவீததிற்க்கும் அதிகமான முஸ்லிம்களும் இவருக்கு வாகாளிக்காவிட்டால் இந்தியா முழுவதும் கட்டெரும்பாய் தேய்ந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் மீண்டும்  அஸ்ஸலாமில் மட்டும் எவ்வாறு ஆட்சி அமைக்க முடிந்திருக்கும் என்று என்ன  மறந்துவிட்டார். 

சாதாரணமாக நாட்டில் நடக்கும் பிரசவங்களில் அறுபது சதவீததிர்க்கு மேலாக சிசேரியன் மூலமாகவே பிரசவம் நடப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன இவர் வெளியிட்ட இந்த விஷமக்கருத்தால் இனி அசாமில் முஸ்லிம் தாய்மார்களின் நிலை என்னவாக இருக்கும் என்று ஏன் இவர் எண்ணிப்பார்க்க மறந்தார் அல்லது வேண்டுமென்றே இப்படி ஒரு கருத்தை மருத்துவர்களிடம் விதைக்கிறாரா என்று புரியவில்லை.

இதேபோன்றுதான் கோத்ரா ரயில் எரிப்பு சம்பத்தின்போது அங்கே பார்வையிடச் சென்ற நரமோடி எல்ல வினைக்கும் எதிர்வினை உண்டு எனக்கூறி இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட்டு பல்லாயிரக்கணக்காக முஸ்லிம்களின் உயிர் பாரிக்கப்பட காரணமாக இருந்தான் ஆனால் இப்போது நிலை என்ன எங்கே முஸ்லிம்களால் தனது பிரதமர் கனவு பலிக்காமல் போய்விடுமோ  என்று அஞ்சி தான் முஸ்லிம்களின் நண்பன் என்றும் தன்னை குஜராத் முஸ்லிம்கள் முல்லாமோடி என்று அழைப்பதாகவும் கூறித் திரிகின்றான் இவற்றையெல்லாம் தாண்டி தான் தவளைறிளைதிருந்தால் தன்னை தூக்கில் போடலாம் என்றும் முஸ்லிம்கள் மத்தியில் மண்டியிட்டுத் திரிகின்றான் இதே நிலை தருண் கோகோய்க்கும் காங்கிரஸ் கட்சிக்கும் வேண்டுமா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். 

காங்கிரஸ் கட்சிக்கு இரெட்டை வேடம்  ஒன்றும் புதிதல்ல சுதந்திரத்திற்குப் பிறகு அன்று நடந்த இந்திய பாகிஸ்தான் பிரிவினையாகட்டும் பாபர் மஸ்ஜீத் பிரச்சினையிலாகட்டும் முஸ்லிம்களை பின்னாலிருந்து தாக்குவதை காங்கிரஸ் கட்சி கனகட்சிதமாக செய்தே வருகிறது.

பாபர் மஸ்ஜித் இடித்தது முதல் இப்படி ஒரு வேலையைத்தான் காங்கிரஸ் செய்து வருகிறது பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டவுடன் அப்போதைய பிரதமராக இருந்த காங்கிரஸ் காட்சியை சேர்ந்த நரசிம்ஹராவ் என்ற கவிச்சிந்தனை கொண்ட இவண் இடிக்கப்பட்ட அந்த இடத்திலேயே பள்ளியை கட்டிதருவோம் என்று வாக்களித்தான் ஓடிப்போச்சு ஆண்டுகள் பல இப்பவும் மத்தியில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி புரிகிறது ஆனால் இழந்த பள்ளிவாசல் இன்னமும் முஸ்லிம்களுக்கு கிடைத்தபாடில்லை.

அதேமாதிரி அஸ்ஸாமில் கலவரத்தின்போது பாதிக்கப்பட்டு தங்களின் சொத்தை இழந்து வீட்டை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாக வாழும் அம்மாநில முஸ்லிம்களுக்கு போதுமான நிவாரணம் அம்மாநில அரசால் சரியாக எடுத்துச் செல்லப்படவில்லை.

எதையும் காரண காரியத்துடன் எதிர்க்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம்களுக்கு ஒரு அநியாயம்  என்றால் கடுமையாக கண்டிக்கும் போர்க்குணம் கொண்ட சமுதாய  பேரியக்கம் டிஎன்டிஜே அஸ்ஸாம் முதல்வர்  தருண் கோகாய்யை கண்டிக்கும் முகமாக அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சின் தமிழக தலைமைச் செயலகமான சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிடும் போராட்டத்தை வரும் 12.09.2012 புதனன்று  மாலை நான்குமணிக்கு நடத்த இருக்கிறது 

அபாண்டத்தை அள்ளி வீசிய அஸ்ஸாம் முதல்வரை கண்டிக்க அனைவரையும் அலையென புறப்பட்டு வர அழைக்கிறது 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
தென்சென்னை மாவட்டம் 

முஹம்மது உபைஸ் 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y