அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, March 28, 2013

யான்புவில் கிடைக்கும் புத்தக பட்டியல்! !




Monday, March 25, 2013

இன்றைய இளைஞர்களுக்கு ஆன்லைன் பயான் சகோ.பிஜே




Thursday, March 21, 2013

தனி ஈழம் சாத்தியமா?

தனி ஈழம் சாத்தியமா? மாநிலத் தலைவர் பி.ஜெயினுல் ஆபிதின் அவர்களின் பதில்:

(திமுக மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவிப்பதற்கு முன் இந்த பதில் உணர்வில் வெளியானது என்பதைக் கவனத்தில் கொள்க)

இலங்கைப் பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவர்கள் எதிர்பார்க்கும் பலன் ஏற்படுமா?

Thursday, March 14, 2013

விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க அறைகூவல்!

விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுக்கு பகிரங்க அறைகூவல்!

இலங்கை அதிபர் ராஜபக்சே பிரபாகரன் மகனான பச்சிளம் சிறுவனுக்கு பிஸ்கட் கொடுத்து, பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனை படுகொலை செய்துள்ளார். இந்த சிறுவனைக்கூட விட்டு வைக்காமல் கொலை செய்த ராஜபக்சேவை சர்வேதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பச்சைத் தமிழர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் குரல் கொடுத்து வருகின்றனர்.

***ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு அப்பாவி மக்களை கொன்று குவித்தது கண்டிக்கத்தக்கதுதான்.

***அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

Thursday, March 07, 2013

உலக அளவில் இரத்த தானத்தில் முத்திரை பதித்தவரும் டிஎன்டிஜே!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேயப் பணிகளில் முக்கிய இடத்தை வகிப்பது இரத்ததான சேவையாகும். தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழகத்தில் இரத்ததானம் செய்வதில் டிஎன்டிஜே அனைத்து அமைப்புகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தொடர்ந்து முதலிடம் வகித்து வருவதே இதற்கு மிகப்பெரிய சான்றாகும். அல்ஹம்துலில்லாஹ்…

Sunday, March 03, 2013

மாநில தலைவரை சந்தித்த யான்பு கிளை நிர்வாகிகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்களும் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர் சகோ.பக்கிர் முகம்மது அல்தாஃபி அவர்களும் கடந்த  26.02.2013 செவ்வாய் அன்று சௌதி அரேபியாவிலுள்ள மதீனா முனவராவிற்கு ஜியாராத் செய்வதற்காக வருகை தந்தார்கள் அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை நிர்வாகிகள் சந்தித்தனர் அன்புடன் கிளை நிர்வாகிகளை வரவேற்று சிறிது நேரம் பொதுவாக விசயங்கள் குறித்து உரையாடினார்கள் பின்பு மகிழ்ச்சியுடன்   யான்பு கிளை நிர்வாகிகள் விடை பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

குண்டுவெடிப்பு – கதை எழுதும் ஊடகங்கள்

ஆந்திர மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் தில்சுக் என்ற பகுதி இருக்கிறது. இங்குள்ள கொனார்க் என்ற சினிமா தியேட்டர் அருகே பிப்ரவரி 21ஆம் தேதி இரவு 7.10மணி அளவில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. பின்பு 5 நிமிடங்கள் கழித்து அதே பகுதியில் உள்ள ஆனந்த் ஹோட்டலில் இரண்டாவது குண்டு வெடித்தது.

அடுத்த 15நிமிடம் கழித்து வெங்கடாத்திரி என்ற தியேட்டரில் 3-வது வெடிகுண்டு வெடித்தது. இந்தக்குண்டு வெடிப்புகளில் சிக்கி இதுவரை 16பேர் இறந்துள்ளனர். சுமார் 116பேர் காயமடைந்துள்ளனர். குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ50ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

Saturday, March 02, 2013

மாபெரும் எழுச்சியோடு நடைபெற்ற குவைத் பொது கூட்ட நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக குவைத்தில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இஸ்லாத்திற்கு எதிராக உலகளாவிய சதி என்ற தலைப்பில் கெய்தான் பகுதியில் உள்ள கார்மெல் ஸ்கூலில் 01.03.2013 அன்று வெள்ளிகிழமை மாலை 6.00 மனிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது அதில் மாநில தலைவர் பி ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது நாம் ஏற்பாடு செய்த ஸ்கூலின் கொள்ளளவு சுமார் 600 முதல் 700 பேர் வரை அமரலாம் நெருக்கி அமர்ந்தால் 1000 பேர் அமரலாம் என கனக்குபோட்டு நாம் ஸ்கூல் நிர்வாகத்திடம் 700 பேர் கலந்து கொள்வார்கள் என அனுமதி வாங்கியிருந்தோம்

Friday, March 01, 2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தின் வெப் டிவி மார்ச் 1 இன்று இரவு 08.30 முதல் முதல்












தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y