அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, January 29, 2013

மனுஷ்யபுத்திரனுக்கு கொலை மிரட்டலா ?

மனுஷ்ய புத்திரனுக்கு கொலை மிரட்டல் விட்டதைக் கண்டித்து சிலர் அறிக்கை விட்டுள்ளார்களே? மசூத் கடையநல்லூர்.

மனுஷ்யபுத்திரன் எழுத்தாளராக ஆனது அவரது எழுத்தாலும் அறிவாலும் அல்ல. அவரது எந்த வாத்த்திலும் அறிவார்ந்த வாதம் இருக்காது. ஆனால் அவரது உடல் நிலை காரணாக சிலர் பச்சாதப்ப்பட்டு பிழைப்புக்கு வழி ஏற்படுத்தலாமே என்று அவரது எழுத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

தன்
மீது பச்சாதாபம் ஏற்படுவதற்காக இவர் எதுவும் செய்யக் கூடியவர் என்பது தான் எனது கணிப்பு.

பாரதிராஜாவைக் கொச்சைப்படுத்தலாமா ?

பாரதிராஜாவின் குடும்பப் பெண்களை இழுத்து பீஜே பேசியது சரியா? என்று பரவலாகப் பேசப்படுகிறது. அவ்வாறு பீஜே பேசியது சரியா? அஸ்மா சரஃபுத்தீன், பிரான்ஸ்.

அந்த உரையில் நான் என்ன பேசினேன் எதற்காகப் பேசினேன்? இதைச் சரியாகக் கவனித்தால் என் பேச்சில் குற்றம் கூற மாட்டார்கள்.

நான் பேசியது பாரதிராஜா பேசியதற்கு பதிலடியாகத் தான். எனவே பாரதிராஜா பேசியது என்ன என்பதைச் சரியாக விளங்கிக் கொண்டால் தான் நான் என்ன பதிலடி கொடுத்தேன் என்பதையும் விளங்க முடியும்.

விஸ்வரூபம்
படத்தை தடை செய்ய வேண்டாம் என்று அவர் அரசுக்கு கோரிக்கை வைத்தால் அதற்கு மட்டும் நாம் பதிலளிக்கலாம்.

கமலஹாசனின் குடும்பத்தை விமர்சிக்கலாமா ?

கமலஹாசனின் மகளுடன் இணைத்து நீங்கள் பேசியது சரியல்ல என்ற விமர்சனம் செய்யப்படுகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?
அஸ்மா சரபுத்தீன், பிரான்ஸ்.
 
கமலஹாசனுக்கும் நமக்கும் எந்த உறவும் பகையும் இல்லை. கமலஹாசனுடன் நமக்கு எந்த்க் கொடுக்கல் வாங்கலும் இல்லை. அவரைப்பற்றி பேசவேண்டிய எந்த உள் நோக்கமும் இல்லை

பிரச்சனை
கமலஹாசன் என்ற நடிகர் ஹேராம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாக சித்தரித்து வரலாற்றுக்கு முரணாக படங்களை எடுத்து வந்தார். இதனால் சமுதாயத்தில் சிறிது சிறிதாக அவர் மீது கோபம் அதிகரித்து வந்தது. விஸ்வரூபம் என்ற திரைப்பட்டத்தில் குர் ஆன் வசனங்கள் தான் தீவிரவாதத்தைத் தூண்டுகிறது என்றும் முஸ்லிம்கள் எதற்கெடுத்தாலும் தலாக் சொல்லி பெண்ணை அந்தரத்தில் விட்டு விடுகின்றனர். அப்பனால் கைவிடப்பட்ட்தால் தான் முரடர்களாக உள்ளனர் என்ற கருத்தையும் அப்படத்தில் சொல்லி இருக்கிறார். முஸ்லிமாக நடிக்கும் கமலஹாசனின் அப்பாவும் கமலஹாசனின் அம்மாவை தலாக் சொல்லி விட்டார் எனக் கூறி முஸ்லிம்கள் அனைவரும் அல்லது பெரும்பாலானவர்கள் அப்பனால் கைவிடப்பட்டவர்கள் என இப்படத்தில் காட்டியுள்ளார். தலாக் என்ற வார்த்தையைத் தான்.

Monday, January 28, 2013

இரத்த தான முகாம் அழைப்பிதழ் அரப் நியுஸ்! வெளியான நாள் 28.01.2013

இரத்த தான முகாம் அழைப்பிதல் அரப் நியுஸ் 



Friday, January 25, 2013

மாபெரும் சமூக விழிப்புணர்வு மற்றும் விவாத அழைப்பு பொதுக்கூட்டம்!

சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ்!

இடம் : மண்ணடி,தப்புசெட்டி தெரு

நாள் : 27.01.2013 ஞாயிறு இந்திய நேரம் மாலை 07.00 மணிக்கு,சௌதி நேரம் 04.30 

உரையாற்றப்படப்போகும் தலைப்புக்கள் 

Wednesday, January 23, 2013

விஸ்வரூபம் திரைப்படம் கிருத்துவ மிஷனரிகளின் தூண்டுதலா?

முஸ்லிம்களை மிகவும் கேவலமாக திட்டமிட்டே நடிகர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம் வரும் 25 தேதி திரையிட இருந்த நிலையில் இஸ்லாமிய இயக்கங்களில் பெரும் முயற்சியால் படம் வெளியிட தடை விதித்து  அணைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த திரைப்படம் குறித்து ஆரம்பம் முதலே கூத்தாடி கமலுக்கு  வெளியிடுவதில் ஒரு வித குழப்பம் இருந்தே வந்துள்ளது ஆனாலும் ஏதோ ஒரு தைரியத்தில் இந்த திரைப்படம் குறித்து கமல் முன்னுக்கு பின் முரணான கருத்தையே கூறிவந்தார் இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத்தலைவர் பிஜே ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது துப்பாக்கி படத்தில் நாங்கள் பிந்திவிட்டோம் ஆனால் இந்த படத்தை  வெளியிடும்போது  எங்கேயும் நாங்கள் ஓட விடமாட்டோம் என்று அதற்க்கான காரணம் இத்திரைப்படம் பற்றி வெளியிட்டுள்ள முன்னோட்ட காட்சிகளே மிகவும் மோசமாக இருக்கிறது அந்த படத்தின் பெயரையே கமல் அரபி எழுத்தைப் போல் எழுதி காட்டியுள்ளார் ஒரு பானை சோத்துக்கு ஒருசோறு பதம்போல இதன் முன்னோட்ட கட்சிகளியே இப்படி என்றால் இந்த திரைப்படம் வெளிவந்தால் எப்படி இருக்கும் ஒட்டு மொத்த முஸ்லிகளும் பொங்கி எழுந்து விடுவார்கள் அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

Tuesday, January 22, 2013

“விஸ்வரூபம் திரைப்படத்தை ஓடவிட மாட்டோம்” தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 22, 2013, 13:23
இது குறித்து தமிழகம் முழுவதும் ஒட்ட வேண்டிய போஸ்டர் வாசகத்திற்கு  Click Here
நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.

அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்

அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது

இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)

Monday, January 21, 2013

பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்து நக்கீரன், ஆனந்த விகடன் இதழுக்கு கடிதம்

இலங்கைப் பெண்மணி ரிசானாவுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை சரியல்ல என்று கூறி இஸ்லாத்தை விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்ட நக்கீரன், ஆனந்த விகடன் இதழ்கள் மற்றும் அந்த இதழ்களில் கட்டுரைகளை எழுதிய மனுஷ்ய புத்திரன், ஜே.பி.ஜோஸபின் பாபா, பாரதி தம்பி ஆகியோருக்கு பகிரங்க விவாத அறைகூவல் கடிதம் :


Saturday, January 19, 2013

பகிரங்க அறைகூவல் போஸ்டர் வாசகம்

பகிரங்க அறைகூவல் :
குற்றச் செயல்களுக்கு இஸ்லாம் வழங்கக்கூடிய தண்டனைகள் பிற்போக்கானவை என்று உளறும்
அதிமேதாவிகளே! அரைவேக்காடுகளே!

ஆனந்த விகடன் மற்றும் நக்கீரன் கும்பல்களே! மிருக புத்திரன்களே!
நீங்கள் சொல்வதில் உண்மையாளர்களாக இருந்தால், முஸ்லிம்களுடன் பகிரங்க விவாதம் செய்ய நீங்கள் தாயாரா?
அறைகூவல் விடுக்கின்றது..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை : அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்

குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்பவருக்கு சவூதி நீதி மன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள சில எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் விமர்சனத்திலிருந்து இவர்களுக்கு நிலையான கொள்கையும், தெளிவான பார்வையும் , பொது அறிவும் இல்லை என்பது தெரிகிறது.

தனக்குத்தானே முரண்படுவதுதான் பொய் என்பதன் அளவுகோல். இது நமது நாட்டுஅறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது.

டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இவர்கள் புலம்பினார்கள். சட்டமும் நீதி மன்றமும் முடிவெடுக்கவேண்டிய விஷயத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கம் தூக்குத் தண்டைனை விதிக்க வேண்டும் என்று பேச வைத்தார்கள்.

போகக்கூடாத நேரத்தில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் உல்லாசமாக சுற்றிய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள்.

பருவ வயது அடைந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பது இவர்களது கொள்கையாக இருந்தால், இவர்களுக்கு சிந்திக்கும் திறனும் மூளையும் மனசாட்சியும் இருந்தால் இலங்கைப் பெண் விஷயமாக எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்?

ரத்ததான செய்வோர் கவனத்திற்க்கு!




Wednesday, January 16, 2013

மாபெரும் இரத்த தான முகாம் இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி முதல் தேதி வெள்ளிகிழமை!




Sunday, January 13, 2013

சென்னையில் தவ்ஹீத் ஜமாத்திற்கு அலுவலகம் கட்ட வாரி வழங்குங்கள்!


தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் (அல் குர்ஆன் .2:261)

வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் வெறியாட்டம்! கண்டித்து களமிறங்கிய முஸ்லிம்கள்!!

e
பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்களை அந்தக் கொடுமைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுதந்திர இந்தியாவில் கொண்டு வரப்பட்டதுதான் வன்கொடுமை தடுப்புச் சட்டம். இந்த சட்டத்தின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை ஜாதியைச் சொல்லி யாராவது திட்டினால், இந்த சட்டத்தின் மூலம் அவர்களை சிறைக்கு அனுப்பலாம். அதுமட்டுமல்லமால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான பலதரப்பட்ட கொடுமைகளுக்கு தகுந்தாற்போல இந்த சட்டத்தின் வாயிலாக ஆயுள் தண்டனை அல்லது 10ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனை வழங்கும் வகையிலும் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

Thursday, January 10, 2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேவை மையங்களுக்கு வாரி வழங்குங்கள் !




Friday, January 04, 2013

மதுரை ஆதினம் கூறிய கருத்து சரியா? – சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் – TNTJ vs மாதர் சங்கம்!

மதுரை ஆதினம் கூறிய கருத்து சரியா?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் VS மாதர் சங்கம்
நேருக்கு நேர் – (மகளிர் விவாதம்)
சன் நியூஸ் தொலைக்காட்சியில்
இன்ஷா அல்லாஹ்…..
05.01.13 – சனிக்கிழமை இரவு 9மணி முதல் 9.30 வரையிலும்,
அதன் மறுஒளிபரப்பு
06.01.13 – ஞாயிறு காலை 8.30 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பாக உள்ளது.
இதனுடைய தொடர்ச்சி இரண்டாம் பாகம் :
அடுத்த 12.01.13 – சனிக்கிழமை இரவு 9மணி முதல் 9.30 வரையிலும்,
இரண்டாம் பாகத்தின் மறுஒளிபரப்பு
13.01.13 – ஞாயிறு காலை 8.30 மணி முதல் 9 மணி வரையிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

காணத்தவறாதீர்கள்!

Print This page

Wednesday, January 02, 2013

உலகம் போற்றும் உன்னத மார்க்கம் இஸ்லாம்



அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் யான்பு கிளை சார்பாக கடந்த 31.12.12 திங்கள் அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி நடந்தது அதில் தாயகத்திலிருந்து வருகை தந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைத்தலைவர் சகோ..எம்ஐ.சுலைமான் அவர்கள் உலகம் போற்றும் உன்னத மார்க்கம்  இஸ்லாம்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 

பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாயகத்தில் செய்துவரும் அரும்பணிகள் குறித்து சில நிமிடங்கள் சிறப்பாக எடுத்துரைத்தார்கள்
இன்நிகழ்ச்சியில் சகோதர்கள் கலந்து பயனடைந்தனர்.
துஆவுடன் இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்!


www.tntj.net/124448.html
வீடியோ காண கீழேயுள்ள இணைப்பை க்ளிக் செய்யவும். 
உலகம் போற்றும் உன்னத மார்க்கம் இஸ்லாம் (யான்பு பயான்)

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y