அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, June 14, 2014

நாளுக்கு நாள் காவிகளின் செயல் அதிகரித்துக்கொண்டே போகிறதே?

நாளுக்கு நாள் காவிகளின் செயல்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. முதலில் செங்கோட்டை, மல்லிபட்டினம், வேலூர் தற்போது மேலப்பாளையம் என தொடர்ந்துகொண்டே போகின்றது. இதற்கு ஏழறை இலட்சம் ஏகத்துவப் படைகளைக் கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் நடவடிக்கை என்ன?
 நீங்கள் எதை எதிர்பார்த்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள்? அவர்களை எதிர்த்து வன்முறை வழியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இக்கேள்வியைக் கேட்டால், அது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை அல்ல.

நம்மில் சிலர் ஆயுதம் தூக்கினால் காவிகள் அதை வைத்து இன்னும் வளர்வார்கள். சிலரது செயல்களால் நம் சமுதாயம்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகும்.
இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடக்கும் போது மக்கள் சக்தியை திரட்டி அரசின் மூலம் குற்றவாளிகளைத் தண்டிக்க எல்லா முயற்சியையும் தவ்ஹீத் ஜமாஅத் செய்யும். செய்தும் வருகிறது.
மேலும் ஒவ்வொரு வன்முறைச் சம்பவத்தின்போதும் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நியாயமான நடவடிக்கை எடுக்க, தவ்ஹீத் ஜமாஅத் முயற்சிக்கிறது. காவல்துறை நமக்கு ஏற்படும் எந்த இழப்புக்கும் நடவடிக்கை எடுக்காது என்ற அளவுக்கு நிலைமை மோசமானால், காவல் துறை முற்றிலுமாக காவிமயமாக மாறினால், அப்போதுதான் வேறு வழிகளைப் பற்றி சிந்திக்க முடியும்.
தமிழகத்தைப் பொருத்தவரை அந்த நிலை நிச்சயமாக இல்லை. உயிரைக் கொடுத்தால்தான் சமுதாயத்தின் உயிரையும் உடமையையும் பாதுகாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டால் நாங்கள் சட்ட வழியையும் ஜனநாயக வழியையும் கைவிட்டு விட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டு மாற்று வழியை தேர்ந்தெடுப்பதில் இந்த ஜமாஅத்துக்கு எந்த அச்சமும் இல்லை.
அந்த நிலை தமிழகத்தில் ஏற்படாது என்றுதான் நாம் நம்புகிறோம். ஓரிரு காவல்துறையினர் காவிச் சிந்தனையுடன் செயல்பட்டாலும் மேல் அதிகாரிகளிடம் முறையிட்டு அது சரி செய்யப்படுகிறது. இப்போது அவர்கள் வழியில் பதிலடி என்று இறங்குவது நன்மைக்கு பதிலாக கேடுகளைத்தான் எற்படுத்தும் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.
மேலும் சில வன்முறைச் சம்பவங்களுக்கு, நம் சமுதாயத்தில் அறிவை இழந்து வெறும் உணர்ச்சிக்கு இடம் கொடுத்தவர்களும் காரணமாக உள்ளனர். இவர்களும் அறிவைப் பயன்படுத்தி தூர நோக்குடன் நடந்து கொள்வதும் அவசியம் என்பதையும் பதிவு செய்கிறோம்.

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y