அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, February 13, 2013

போடுங்கையா ஒட்டு கை சின்னத்தைப் பார்த்து !

2009 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஏன் ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கே  வாக்களித்தனர் ஆனால் இன்று காங்கிரஸ் நடத்தும் அரசியல் நாடகத்தைப் பார்த்து அதிகமான முஸ்லிம்கள் மனம் நொந்து போயுள்ளனர் ஒரு தவறான ஆட்சிக்கு தமது ஓட்டும் ஒரு காரணமாகிவிட்டதே என்று பல சகோதரர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கொந்தளித்து போயுள்ளனர்..


இப்படி வருத்தப்பட வேண்டிய ஒரு அவசியமும் இல்லை ஏனென்றால் நாம் நமது குடும்பத்திலேயே சிலநேரம் எடுக்கும் முடிவுகள் அது தவறாக பின்பு ஆகிவிடுகிறது நாம் மட்டுமே தீர்மானிக்கும் ஒன்றிலேயே நமது முடிவு அது சில நேரங்களில் தவறாகிவிடும்போது ஒட்டுமொத்த முஸ்லிம்களும்  சமுதாய நலன் கருதி சில முடிவுகளை  எடுப்பதும் அது சில நேரங்களில் தவறாக ஆகிவிடுவதும் சகஜமே இதில் எந்த ஒரு முஸ்லிமும் வருத்தப்பட தேவையில்லை.

வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் நமது அரசியல் எதிரிகளை வீழ்த்தவேண்டும் முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக எண்ணியிருக்கும் இந்த அரசியல் கோமாளிகளை வீழ்த்தவேண்டும் இவ்வளவு அக்கிரமம் செய்த பின்பும் இந்த காங்கிரஸ் கயவர்கள் மீண்டும் தனது நாடகத்தை வரும் 2014 தேர்தலிலும் அரங்கேற்றிட எண்ணுவார்கள் முஸ்லிம்களின் மறதியை தங்களுக்கு சாதகமாக்கி அதில் ஆதாயம் அடையலாம் என்று எண்ணுவார்கள் அதற்க்கு அவர்கள் பல யுத்திகளை கையிலெடுப்பார்கள்.

குறிப்பாக இந்துபயங்கரவாதம் என்பார்கள் காவிபயங்கரவாதம் என்பார்கள் ஆனால் எவரின்மீதும் நடவடிக்கை எடுக்க துணிவு இருக்காது சங்கபரிவாரதிடமிருந்து எதிர்ப்பு வந்தால் அப்படி சொல்லவில்லை இப்படிதான் சொன்னேன் என்று பல்டி அடிப்பார்கள் இவற்றையெல்லாம் விட முஸ்லிம்களை குஷி படுத்தும் விதமாக  2009 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல தங்களை வெற்றிபெற வைத்தால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்போம் என்று போலி வாக்குறுதி அளிப்பார்கள் அதையே இங்கேயுள்ள அதன் கூட்டணி கட்சிகளும் பரப்புவார்கள குறிப்பாக முஸ்லிம்களின் காவலன் என்று தன்னைதானே அறிவித்துக்கொன்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி பின்பாட்டு  பாடுவார் கருணாநிதிக்கும் காங்கிரசுக்கும் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து அதை இன்றுவரை இம்மியளவும் மாறிவிடாமல் கடைபிடிக்கும் முஸ்லிம்லீக்காகட்டும் நம்மை ஏமாற்ற வருவார்கள்  இத்தகைய மாபாதகர்களை நாம் அனைவரும் எதிர்க்கவேண்டும் அதன்மூலம் இந்த போலி மிதவாதம் பேசும் இந்த நிஜமதவாதிகள் காங்கிரஸ்கா
ர்கள் தான் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து அவர்களை புறக்கணிக்க வேண்டும்.

இந்த அறுபத்திஐந்து கால சுதந்திர வரலாற்றில் காங்கிரஸ் அரசால் முஸ்லிம்கள் அடைந்த துரோகம் கொஞ்சநஞ்சமில்லை இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் பல லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்  பாபர் பள்ளிவாசல் தொடர் துரோகம் இறுதியில் இடித்தபின்பும் தொடரும் பச்சை துரோகம் சச்சார் கமிசன் ரங்கநாத் மிஸ்ரா என்றும்  படம்காட்டுவார்கள் அதை பாராளுமன்றத்தில் வைப்பார்கள் அதை நடைமுறையில் செயல்படுத்த எந்த ஆவணமும் முயற்சியும் எடுக்க மாட்டார்கள் இன்றுவரை முஸ்லிம்கள் காஸ்மீரில் ராணுவத்தினரால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் இறுதியாக அஜ்மல் கசாப் என்றும் அப்சல் குரு என்றும் கூறி ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக சித்தரிக்க முயலும் இந்த காங்கிரஸ் கயவர்களை வரும் நாடாளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் இன்ஷா அல்லாஹ்!

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y