இறைதூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பெண்களை ஏற்றி வந்த ஒட்டகத்தை ஓட்டி வந்த ஒட்டகமோட்டி ஒருவர் பாட்டுப் பாடிக்கொண்டு படுவேகமாக விரட்டி செல்வதைக் கண்டு கடும் கோபமுற்றார்கள்.
அவரை நோக்கி அன்ஜஷாவே ஒட்டகத்தை விரட்டாதே ! நிதானத்தை கடைப் பிடி மேலே அமர்நதிருக்கும் பெண்களை விபத்துக்குள்ளாக்கி விடாதே ! என்று கோபத்துடன் கண்டித்து விட்டு இவ்வாறு பாட்டுப் பாடிக் கொண்டு வாகனத்தை வேகமாக விரட்டுவது உனக்கு பெரும் கேட்டைத் தான் உண்டு பண்னும் என்றுக் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர் ஒருவர் (அன்ஜஷா என்பவர்) பாடினார். அப்போது (அவரிடம்) நபி(ஸல்) அவர்கள், 'அன்ஜஷா! உனக்குக் கேடுதான்! மெல்லப்போ கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்து விடாதே!'' என்றார்கள். 6209. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
மத்திய அரசின் கல்வி ,வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 27சதவீத இட ஒதிக்கீடு உள்ளது .இந்த இட ஒதிகீட்டை அன்றைய பிரதமர் வி .பி சிங் சட்டமாக்கினார் ஆனால் ஐ ஐ டி..ஐஐஎம் .உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இந்த ஒதிக்கீடு அமுல் செய்யப்படாமல் இருந்தது எனவே மத்திய அரசு 2006 ம்ஆண்டில் ஒரு சட்டத்தை கொண்டு வந்து ,மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதிக்கீடு வழங்க வகை செய்தது ஆனால் இந்த சட்டத்தில் சில குறைபாடுகள் இருந்தன இதைகளையும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு இந்த சட்டத்திருத்தத்திற்கு பாராளுமன்றமக்களவை மே16ம்தேதி ஒப்புதல் வழங்கியது இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய மந்திரி கபில்சிபல் தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் மற்றும் இதரபிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டுக்கு பாடுபட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்றார் .
அரசியல் என்று போய்விட்டாலே ,பதவி சுகம் கண்டுவிட்டாலே அந்த பதவிசுகத்திற்காக எப்படிப்பட்ட இழிச்செயளையும் செய்யலாம் என்ற நிலைக்கு ஒருவன் ஆளாகிவிடுவான் என்பதற்கு ம .ம .கட்சி சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றது .எங்களுக்கு சீட்டுகள் யார் கூடுதலாகத் தருகின்றார்களோ அவர்களுடன்தான் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று பச்சோந்தித்தனம் செய்வதில் ஆரம்பித்து ஓட்டுப் பொறுக்குவதற்காக மானமிழந்து .மரியாதை இழந்து ,கடைசியில் வாரியப்பதவி தரமாட்டார்களா?என்று ஒரு சிறு எலும்புத்துண்டுக்காக ஜெயலலிதாவை போற்றி புகழ்ந்து அவரை துதி பாட ஒரு எல்லையே இல்லை என்ற அளவிற்கு செய்துவிட்டனர் ம ம கட்சியினர் .
கூடிய விரைவில் ஜால்ரா தட்டுவதில் இவர்களை மிஞ்ச ஆளில்லை என்று தமிழக கட்சிகளே மூக்கின் மேல் விரல் வைக்கக்கூடிய அளவிற்கு ,சிறந்த ஜால்ரா தட்டி என்ற சிறப்புப் பட்டத்தை இவர்கள் தட்டிச் சென்று விடுவார் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம் .
ஹஜ் மானியம் என்ற பெயரில் 600கோடி ரூபாயை வருடம்தோறும் ஒதுக்கிய மத்திய அரசு அதை பயணிகளிடம் நேரடியாக கொடுக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தூக்கி கொடுத்து ஏர் இந்தியா நிறுவனமோ டிக்கட் கட்டணத்தை ஹஜ் காலங்களில் இருமடங்காக உயர்த்தி அதை ஸ்வாக செய்து வந்தது மத்திய அரசின் இந்த மோசடியை முஸ்லிம்கள் புரிந்து கொள்வதற்கு முன் ஹஜ் மானியம் கூடாதென்று சங்க்பரிவார அமைப்புகள் ரணகளம் பண்ணிவிட்டன. பின்னர் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த மானியத்தை (?) குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது இதை ரத்து செய்தால் முஸ்லிம்களுக்கு எந்த இழப்பும் இல்லை ஏர் இந்தியா நிறுவனதிர்க்குதான் இழப்பு இதை புரிந்துகொண்ட முஸ்லிம்கள் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு சும்மா இருந்துவிட்டனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மணைவி கதீஜா அவர்கள் மரணித்த பின் ஸம்ஆ என்பாரின் மகள் ஸவ்தா அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவரைப் பற்றிய முக்கியமான விபரங்களை அறிந்து கொள்வோம்.
ஸக்ரான் இப்னு அம்ரு அல்அன்ஸாரி (ரலி) அவர்களும் அவர்களின் மணைவி ஸவ்தா (ரலி) அவர்களும் இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். இஸ்லாத்தை ஏற்றதற்காக இத்தம்பதியினர் தம் இனத்தவரான அப்துஷம்ஸ் கூட்டத்தினரால் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 20-5-2012 அன்று மாபெரும் வரதட்சனை ஒழிப்பு பொதுகூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் அபிதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
பொதுக் கூட்டம் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும் மாநாட்டை மிஞ்சும் அளிவிற்கு மக்கள் கூட்டம் நிரம்பியது.
சகோதரர்கள் அமர்வதற்கு கூட இடமில்லா நின்று கொண்டும் சுவர்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு சொற்பொழிவை கேட்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது. மேலும் இரண்டு சகோதரர்களும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தங்களை வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். அல்லாஹம் லில்லாஹ்
உலகம் முழுவதும் உள்ள நம் கொள்கைச் சகோதரர்கள் பார்க்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி ஆன்லைன்பிஜே இணையதளத்தில் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது.
யான்பு கிளையில் நிர்வாகிகள் கூட்டம் 18.05.2012 வெள்ளி அன்று நடைபெற்றது அதில் கிளை தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- கூட்டத்தில் ஜெத்தா மண்டல தலைமையிடம் தொடர்பு கொண்டு இம்மாத இறுதிக்குள் அல்லது அடுத்தமாத தொடக்கத்தில் மாநில தலைமையில் கேட்டு சகோ.பிஜே அவர்களை வைத்து ஒரு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது
- தலைமைக்கு இடம் வாங்க வாரி வழங்கிய சகோதர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இந்தியாவை
ஆள்பவர்களுக்கும், நீதி
வழங்குவோருக்கும், ஊடகங்களுக்கும்
பொது அறிவு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அறைகுறையாகவும், மேலோட்டமாகவும் எதையாவது
உளறுவது தான் அறிவு என்று ஆகி விட்டது.
இந்தியா மதச்சார்பற்ற நாடு.
எனவே ஒரு மதத்தினரின் புனிதப்பயணத்துக்கு மானியம் வழங்குவது மதச்சார்பின்மைக்கு
எதிரானது என்பது தான் பிரச்சனையாக்கப்படுகிறது.
வசதி படைத்தவர்கள் தான் ஹஜ்
பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த மானியம் எல்லாம் தேவை இல்லை என்பதும்
கூடுதலாக முன் வைக்கப்படுகிறது.
கடந்த 2011 முதல் 2012 வரை
தமிழகத்தில் மதுபான விற்பனை மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி கிடைத்திருப்பதாகவும், இன்னும் இந்த வருமானத்தை
பெருக்கிட எலைட் என்ற உயர் ரக மதுவகைகள் தயாரிக்கும் திட்டம் துவக்கப்படும்
என்றும் சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதனை கடந்த வருடங்களுடன் ஒப்பீடும் பொழுது
அதீத வளர்ச்சி அடைந்திருப்பதை தெரிந்துகொள்ளலாம். அதன் விபரம் வருமாறு:-
2003-2004ம் வருடம் ரூ.3
ஆயிரத்து 639.93 கோடி, 2004-2005ம் வருடம் ரூ.4ஆயிரத்து 872.03 கோடி, 2005-2006ம் வருடம் ரூ.6 ஆயிரத்து 030.77 கோடி, 2006-2007ம் வருடம் ரூ.7ஆயிரத்து 473.61 கோடி, 2007-2008 ம் வருடம் ரூ.8 ஆயிரத்து 821.16 கோடி, 2008-2009ம் வருடம் ரூ.10 ஆயிரத்து 601.50 கோடி, 2009-2010ம் வருடம் ரூ.12 ஆயிரத்து 498.22 கோடி, 2010-2011ம் வருடம் ரூ.14 ஆயிரத்து 965.42 கோடி, 2011-2012ம் வருடம் ரூ.18 ஆயிரத்து 081.16 கோடி மொத்த வருவாய்
கிடைத்துள்ளது.
கடந்த 28.04.12 சனிக்கிழமை அன்று இதை கேட்பாரே இல்லையா? என்ற தலைப்பில் தினத்தந்தியில் வெளியான தலையங்கம் முஸ்லிம்களை
மிகுந்த கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. தாங்கள் சங்பரிவாரக் கும்பலின் கைக்கூலிகள்
தான் என்பதை தினத்தந்தி வெட்ட வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அந்தத் தலையங்கம்
அமைந்துள்ளது.
இவ்வாறு விஷம் தோய்ந்த வினாக்களை
எழுப்பி பொய்யான அவதூறுகளை முஸ்லிம்கள் மீது சுமத்தி ஏதோ பாகிஸ்தானில் பிற
மதத்தவர்களை நிர்ப்பந்தப் படுத்தி ஆயிரக்கணக்கான இந்துக்களையும், கிறித்தவர்களையும் இஸ்லாத்திற்கு மாற வைக்கின்றார்களே எனவே இந்து
மற்றும் கிறித்தவர்களே! நீங்களும் நீங்கள் சார்ந்த அமைப்புகளும் கொதித்தெழ
வேண்டாமா? அரசியல் கட்சிகள் கொதித்தெழ வேண்டாமா?
என்ற கேள்விகளை கேட்டு எல்லோரையும்
முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, அண்ணன்
தம்பிகளாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் இந்து, கிறித்தவ, முஸ்லிம் சகோதரர் களுக்கு மத்தியில்
கலவரத்தை உண்டு பண்ணி தமிழகத்தையும் குஜராத் போன்று சுடுகாடாகவும் கலவர
பூமியாகவும் மாற்ற வேண்டும் என்பதுதான் தினத்தந்தியின் திட்டம் என்பது அதன்
கேவலமான தலையங்க வார்த்தைகளிலிருந்து புலனாகின்றது.
நபியவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் முதல் திருமணம் செய்தார்கள். இருபத்தைந்து வயதுக்கு முன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு அதிசயமான வாழ்க்கை. எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத பரிசுத்த வாழ்வு அவர்களுடையது. தன் வயதொத்த இளைஞர்களுடன் சேர்ந்து பெண்களைப் பற்றி விமர்சனம் கூட செய்துவிடாத தூய வாழ்வு அவர்களுடையது. பெண்களுடன் தகாத முறையில் சல்லாபம் செய்வது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்ட அந்த அறியாமைக் காலத்தில் அவர்கள் மட்டும் - அவர்கள் மட்டுமே - இந்த அற்புத வாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தார்கள்.
அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று பிரகடனம் செய்த போது முதல் ஆதாரமாக தமது அப்பழுக்கற்ற நாற்பதாண்டு கால தூய வாழ்வைத் தான் அவர்கள் முன்வைத்தார்கள்.
வெள்ளிக்கிழமை (11-5-2012) பி.ஜே அவர்களின் ஷார்ஜா ஆன்லைன் நிகழ்ச்சி இந்திய நேரம் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை.
வெள்ளிக்கிழமை 11.05.2012 சவுதி நேரம் மாலை 07.30 முதல் 08.30 வரை உரை நிகழ்த்துபவர் கோவை ஆர் ரஹ்மத்துல்லாஹ்
சனிக்கிழமை (12-5-2012) பி.ஜே அவர்களின் ஃபிரான்ஸ் ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி. இந்திய நேரம் இரவு 7 மணி முதல் 9 மணி வரை.
மதுரை அண்ணாநகர் பகுதியில் ஒரு தனியார் டிரஸ்ட்டுக்கு சொந்தமான ராமர் கோவில் உள்ளது .இந்த கோவிலின் கம்பி வேலியில் 4 நாட்களாக ஒரு சைக்கிள் கட்டப்பட்டு இருந்ததாகவும் ,அந்த சைக்கிளில் வைக்கப்பட்ட டைம்பாம் வகை குண்டு வெடித்ததாகவும் போலிஸும் ஊடகங்களும் செய்தி பரப்பி பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டனர் .
கோவில் கம்பி வேலியில் கட்டப்பட்டிருந்த சைக்கிள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு தந்த இலவச சைக்கிளாகும் இந்த சைக்கிள் குறிக்கப்பட்டுள்ள என்னை வைத்து எந்தப் பள்ளிக்கு இந்த சைக்கிள் வழங்கப்பட்டது ? அதை பெற்ற மாணவன் அல்லது மாணவி யார் ?என்று துப்பறிந்து குற்றவாளியை நெருங்க முடியும் .பிறகு ஏன் போலீஸ்
இன்னும் குற்றவாளியை பிடிக்கவில்லை என்பது மர்மமாக இருக்கிறது .
கடந்த மே 6ஆம் தேதி கோவையில் நடைபெற்ற மாவட்ட மாநாடு கோவையை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மாநாட்டுத் திடல் மட்டுமல்ல; திடலைச் சுற்றியுள்ள பகுதிகளும் மக்கள் வெள்ளத்தால் மிதந்தன.
மாவட்டம் தழுவிய அளவில் நடைபெறக்கூடிய ஒரு மாநாட்டிற்கு இந்த அளவிற்கு மக்கள் வெள்ளம், அதுவும் பெண்கள் வெள்ளம் சாரை சாரையாக வந்து கலந்து கொண்டது காண்போரை வியக்க வைத்தது. அல்ஹம்துலில்லாஹ்….
காலை 10 மணிக்கு மாநாட்டின் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மாநாட்டிற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் கோவை ரஹீம் தலைமை வகித்தார்.
கண்ணைக் கவர்ந்த அரங்கங்கள் :
மக்களின் அறிவுத்தாகத்தைப் போக்கும் வகையிலும், மாநாட்டிற்கு வந்த மக்களுக்கு மார்க்க அறிவை இன்னும் அதிகமாக வளர்த்துக் கொள்ள வழிவகை செய்யும் வகையிலும் ஏராளமான அரங்கங்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த பதிவை எல்லா சகோதரர்களும் முழுவதுமாக நிச்சயம் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மேலும் இந்த சம்பவத்தில் ஒரு வார்த்தை கூட மிகைபடுத்தி எழுதவில்லை என்று அல்லாஹுவின் மீது ஆணையிட்டு கூறிக்கொள்கிறேன்.
இன்று தோஹாவில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற போது"என்னுடைய மாமா சென்னையில் இருந்து உம்ரா செய்வதற்கு வந்திருக்கிறார்" என்று ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்.அவர் பெயர் ரபியுல்லாஹ்.சுமார் 70 வயது மதிக்கத்தக்க அந்த சகோதரர் உருது மொழியை தாய்மொழியாக கொண்டவர்.அவரிடம் மார்க்க விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருதந்த போது விஷயம் ஊரில் நடக்கும் ஏகத்துவ பிரசாரங்களை பற்றி வந்தது.
அப்போது அவர் "நான் நீண்ட காலமாக தாவா பணிகளை மேற்கொண்டு வருகிறேன். "1984 காலகட்டங்களில் சென்னை பூந்தமல்லியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.அதில் யாரை உரையாற்ற அழைப்பது என்று ஆலோசித்தப்போது பிஜே என்ற இமாம் ஒருவர் தொண்டி என்ற ஊரில் இருக்கிறார்.நல்ல பேச்சாற்றல் உள்ளவர் அவரை அழைக்கலாம் என்று சிலர் ஆலோசனை சொன்னார்கள்.
சென்ற ஏப்ரல் 21 தேதி சத்திஸ்கரில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டர் நெல்லையை சேர்ந்த அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டார் பின்பு 13 நாட்களுக்கு பிறகு அரசு மாவோயிஸ்ட்களுடன் செய்துகொண்ட பல்வேறு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விடுவிக்கப்பட்டு இன்று பணிக்கும் திரும்பிவிட்டார் ஆனால் நடந்த அந்த சம்பவத்தில் கண்டுகொள்ளப்படாத நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இரண்டு காவலர்களை அதிகம் பேர் அறிந்திருக்கவில்லை
அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்ட அன்று அவரில் மெய்காவலர்கள் இருண்டுபேர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர் அப்படி சுட்டுக்கொள்ளப்பட்டவர்களை இதுவரை அதிகமானோருக்கு தெரியவில்லை அதற்கு காரணம் அங்கு உள்ள பாஜக அரசு இந்த செய்தியை அதிகம் வெளிவராமல் மிகவும் கவனுத்துடன் பார்த்துகொண்டது.
ஷேக்பாபு, அல்லாபி என்ற முஸ்லீம் தம்பதிகள் நள்ளிரவு நேரங்களில் சென்று கிராமத்தின் இடுகாட்டில் மண்டை ஓடுகளை சேகரித்துக் கொண்டு வந்து பில்லி சூனியம் செய்வதை பிழைப்பாகக் கொண்டவர்கள். சம்மந்தப்பட்ட கிராமத்தில் எதிர்பாராமல் தொடர் மரணங்கள் நிகழவே இவர்கள் மண்டை ஓடுகளை சேகரித்து பில்லி,சூனியம் செய்வதால் ஏற்பட்ட விளைவு தான் தொடர் மரணம் என்று முடிவு செய்த ஊர் மக்கள் அவர்களை நையப்புடைத்து இருவரின் பற்களையும் நிற்க வைத்து கதற கதற பிடுங்கி எடுத்துள்ளனர்.
42 வயதையுடை முருகன் என்ற மந்திரவாதி நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவியையும், 7ம் வகுப்புப் படிக்கும் மாணவியையும் இறந்த ஆவியை விரட்டுவதற்கு தனி அறையில் பூஜை செய்ய வேண்டும் என்றுக் கூறி தாய். தந்தை அனுமதியுடன் கதவைத் தாழிட சிறிது நேரத்தில் அலறி அடித்து கதவைத் திறந்து கொண்டு இரண்டு மகள்களும் ஓடிவந்து மந்திரவாதி தவறாக நடக்க முயற்சித்ததாகக் கூற ஊர் மக்கள் கூடி நையப்புடைத்துள்ளனர். இது மற்றொரு சம்பவம்.