அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, May 25, 2012

இந்து புனித பயணத்திற்கு மானியம் தமிழக அரசுக்கு சில கேள்விகள்.....

ஹஜ் மானியம் என்ற பெயரில் 600கோடி ரூபாயை வருடம்தோறும் ஒதுக்கிய மத்திய அரசு அதை பயணிகளிடம் நேரடியாக கொடுக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தூக்கி கொடுத்து ஏர் இந்தியா நிறுவனமோ டிக்கட் கட்டணத்தை ஹஜ் காலங்களில் இருமடங்காக உயர்த்தி அதை ஸ்வாக செய்து வந்தது மத்திய அரசின் இந்த மோசடியை முஸ்லிம்கள் புரிந்து கொள்வதற்கு முன் ஹஜ் மானியம் கூடாதென்று சங்க்பரிவார அமைப்புகள் ரணகளம் பண்ணிவிட்டன. பின்னர் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த மானியத்தை (?) குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது இதை ரத்து செய்தால் முஸ்லிம்களுக்கு எந்த இழப்பும் இல்லை ஏர் இந்தியா நிறுவனதிர்க்குதான் இழப்பு இதை புரிந்துகொண்ட முஸ்லிம்கள் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு சும்மா இருந்துவிட்டனர்.

இந்நிலையில் சீனாவில் உள்ள இந்து புண்ணிய தலமான மானசரோவர் என்ற இடத்திற்கு செல்லவிருப்பவர்களுக்கு மானியமாக ருபாய் 40 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது அதுபோல் நேபாளத்தில் உள்ள முக்திநாத் செல்பவர்களுக்கும் 10 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படுமாம் இந்த இரு பயணத்திற்கும் தலா 250 வீதம் 500 நபர்களுக்கு இந்த மானியம் கிடைத்திருக்கிறது ஹஜ் மானியம் விசயத்தில் காட்டுக்கூச்சல் போட்டவர்கள் ஹஜ் மானியத்தை தடை செய்ய உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது எனவே இந்த மானியத்தையும் தரக்கூடாது என்று சொல்ல முன் வரவில்லை இதன் மூலம் முஸ்லிம்களுக்கு தரப்பட்டதாக செல்லப்பட்டதை பறிக்க வேண்டும் என்ற நோக்கம் தானே தவிர மத மானியம் கூடாது என்பது இவர்களது கொள்கை இல்லை என்பது புரிகிறது.

மத அடிப்படையில் மானியம் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஜெயலலிதா இந்த முடிவை எடுத்றுகிறார் இதை அவர் தவிர்த்திருக்கலாம் என்று எந்த ஊடகமும் சொல்லவில்லை இந்துக்கள் மற்றும் கிருத்தவர்களுக்கு மட்டும்தான் மானியம் உண்டு முஸ்லிம்களுக்கு என்பது உண்மையான மதசார்பின்மை கிடையாது முஸ்லிம்கள் இரேண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இந்த மானிய விவகாரம் நல்ல சான்றாக உள்ளது.

தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ள அணைத்து யானைகளுக்கும் முதுமலை சரணாலயத்தில் நலவாழ்வு முகாம்கள் நடத்தப்படுகிறது 1006 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்படுகின்றன 1248 கோவில்களில் புனரமைப்பு பணிகள் நடந்துள்ளன 106 கோவில்களில் நடந்த அன்னதானங்கள் மேலும் விரிவாக்கப்பட்டு 468 கோவிகளில் நடத்தப்பட்டு வருகிறது கிராம கோவில்களில் புனரமைப்பு நிதி 25 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோக 364 கோவில் குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன எட்டு கோவில்களில் பேட்டரிகார் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது மேலும் சிறிங்கம் மற்றும் பழனி ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது இவை எல்லாமே அரசு சிலவில்தான் நடைபெறுகிறது இவை எல்லாம் ஜெயலலிதா அரசின் சாதனைகளாக சொல்லப்படுகிறது ஆனால் சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் முஸ்லிகளின் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்ற இவரின் வாக்குறுதி மட்டும் இன்னும் கண்டுகொள்ளப்படவில்லை இதை சுட்டிக்காட்டும் முதுகெலும்புள்ள எம்எல்ஏகளும் சட்டமன்றத்தில் இல்லை.

திருக்கோவில் பணிகளை செய்யவேண்டாம் நாம் சொல்ல வரவில்லை நன்றாக செய்யட்டும் அதுபோல் முஸ்லிம்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவேண்டும் என்றே கேட்க்கிறோம் புனிதப்பயணம் செல்லும் இந்துக்களுக்கு மானியம் வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை இதுபோல் ஹஜ் பயணிகளுக்கு உண்மையான மானியம் தர மத்திய அரசை ஜெயலலிதா வலியுறுத்தி இருக்கலாமே என்றுதான் கேட்கிறோம் மத்திய அரசு மறுத்த மானியத்தை மாநில அரசு சார்பில் நான் தருகிறேன் என்று கூறி மதசார்பற்ற நாட்டில் முஸ்லிகளுக்கு அநீதியும் மற்றவர்களுக்கு நீதியும் என்ற இரெட்டை அளவுகோலை இந்த அரசு கடைபிடிக்காது என்று காட்டியிருக்க வேண்டாமா இப்படி நடந்து இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டாமா 

மத்திய மாநில அரசுகள் எல்லா வகையிலும் முஸ்லிம்களைப் புறக்கணித்து வருகின்றன .இதை முஸ்லிம்கள் இப்போது உணரத் துவங்கியுள்ளனர் .இந்த விழிப்புணர்வு அதிகரிக்கும்போது  இவர்களின் பேச்சை அரசுகள் கேட்க வேண்டிய நிலை ஏற்படும்.அதற்க்கான காலம் கனிந்து கொண்டிருப்பது என்னவோ நிஜம். 

                                                                                                      நன்றி உணர்வு இதழ் 



No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y