அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, May 25, 2012

ஜால்ரா தட்டுவதில் சரித்திர சாதனை! (வீடியோ இனைப்பு


அரசியல் என்று போய்விட்டாலே ,பதவி சுகம் கண்டுவிட்டாலே அந்த பதவிசுகத்திற்காக எப்படிப்பட்ட இழிச்செயளையும் செய்யலாம் என்ற நிலைக்கு ஒருவன் ஆளாகிவிடுவான் என்பதற்கு ம .ம .கட்சி சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றது .எங்களுக்கு சீட்டுகள் யார் கூடுதலாகத் தருகின்றார்களோ அவர்களுடன்தான் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று பச்சோந்தித்தனம் செய்வதில் ஆரம்பித்து ஓட்டுப் பொறுக்குவதற்காக மானமிழந்து .மரியாதை இழந்து ,கடைசியில் வாரியப்பதவி தரமாட்டார்களா?என்று ஒரு சிறு எலும்புத்துண்டுக்காக ஜெயலலிதாவை போற்றி புகழ்ந்து அவரை துதி பாட ஒரு எல்லையே இல்லை என்ற அளவிற்கு செய்துவிட்டனர் ம ம கட்சியினர் .

கூடிய விரைவில் ஜால்ரா தட்டுவதில் இவர்களை மிஞ்ச ஆளில்லை என்று தமிழக கட்சிகளே மூக்கின் மேல் விரல் வைக்கக்கூடிய அளவிற்கு ,சிறந்த ஜால்ரா தட்டி என்ற சிறப்புப் பட்டத்தை இவர்கள் தட்டிச் சென்று விடுவார் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம் .



காரணமென்ன வென்றால் ,இவர் தட்டும் ஜால்றாவைக் கேட்டு அ.திமுககாரர்கள் தற்போது வெறுப்பில் உள்ளதாகக்கேள்வி .நாம்தான் பதவி சுகத்திற்க்காக அம்மா !அம்மா !என்று அம்மாவின் புகழ்பாடி ஜால்ரா தட்டுகிறோம் என்றால் ,நன்மை தூக்கி சாப்பிடுவதற்கு வாத்தியார் என்று ஒருவர் தொப்பி அணிந்து முன்னாள் உட்கார்ந்துள்ளாரே! இவர்தான் நம் எதிரி என்று அதிமுகவினர் நினைக்கக்கூடிய அளவிற்கு வாத்தியாரின் ஜால்ரா எல்லை கடந்து சென்று கொண்டுள்ளது .

ஏற்கனவே அம்மாவை புகழ்கிறேன் என்ற போர்வையில் தானே புயல் வராதா?''என்று அனைத்து மக்களும் ஏங்குகின்றார்கள் என்று சொல்லி உலக மகா ஜால்ரா தட்டிய சில நாட்களிலேயே, அந்த ஜால்ராவை முறியடிக்கும் விதமாக தற்போது ஒரு மெகா ஜால்ராவை இந்த '''ஜிங்ச்சா'பேர் வழி அதுதாங்க ஜால்ரா பேர்வழி தட்டியுள்ளார்.அதுஎன்ன அப்படிப்பட்ட பெரிய ஜால்ரா என்று கேட்க்கிண்றீர்களா?

ஓராண்டு சாதனையைப் புகழ்ந்து பேச இவருக்குஒரு வாய்ப்பளிக்கப்பட்டது. விடுவாரா நம்மவர். ''ஜெயலலிதா அவர்கள் ஓய்வின்றி, உறக்கமின்றி சேவையாற்றுவதாக சொல்ல''ஜால்ரா பேர் வழிக்கு கைத்தட்டல்கள் நிறைய கிடைத்தது .முதல்வர் தூங்காமல் வேலை செய்கின்றார் என்பது இவருக்கு எப்படித் தெரிந்தது என்று நமக்குத் தெரியவில்லை .

அதுமட்டுமல்லாமல் ,முதல்வர் ஒரு இரும்பு மங்கை என்று அடுத்த ''ஜிங்ச்சா ''வேறு .அது எப்படி இவருக்குத் தெரிந்தது என்றும் நமக்குத் தெரியவில்லை .


அதையெல்லாம் விட அதற்கடுத்து அடித்தாரே ஒரு ஜால்ரா அதுதான் சட்டசபையில் இந்த ஆண்டின் ஹைலைட் ஜால்ரா இந்துக்களுக்கு மானியம் வழங்கி இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கின்றாராம் ஜெ.

ஜால்ரா தொடர்கின்றது முஸ்லிம்களுக்கு ஹஜ் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில் ஹஜ்ஜுக்கு நயா பைசா கூட மத்திய அரசு மானியம் தரவில்லை ; அப்படி சொல்வது பெரிய அயோக்கியத்தனம் என்பதை ஏற்கனவே நாம் தெளிவுபடுத்தியுள்ளோம் இந்துக்களுக்கு புனித யாத்திரை செல்ல சீனாவிலுள்ள மானசேர்வார் மற்றும் முஃ திநாத்துக்கும் மானியம் வழங்கிய ஜெயலலிதா அவர்கள் வருங்கால பிரதமர் ஆகப் போகின்றார்கள் . ஜெயலலிதா பிரதமரான உடனே மத்திய அரசு பறித்த ஹஜ் மானியத்தை முஸ்லிம்களுக்கு வழங்குவார் '' என்று சட்டசபையில் சொல்லி தான் ஒரு மானங்கெட்ட ஜென்மம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் வாத்தியார் .

இல்லாத மானியத்தை இருப்பதாகச் சொல்லி சமுதாயத்திற்கு துரோகம் செய்தது போதாதென்று ஜெயலலிதா பிரதமராகப் போகின்றார் என்ற பகல் கனவு வேறு.

நாம் வாத்தியாருக்கு சொல்லிக் கொள்கின்றோம் .இப்படி பிரதமர் என்று சொல்வதைக் காட்டிலும் அடுத்து வரக்கூடிய அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜெயலலிதாவைத்தான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் .அவர் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றதும் முஸ்லிம்களுக்கு நல்லது செய்வார் [?] என்று சொன்னால் ஜெயலலிதாவின் உள்ளம் இன்னும் குளிருமல்லவா ?

இந்த மானம் கெட்ட பிழைப்பு தேவைதானா ?ஒரு மனிதனை பதவி ஆசை எப்படியெல்லாம் எலும்புத்துண்டிர்க்காக வாலை ஆட்டவைக்கின்றது என்று பார்த்தீர்களா ?

கழகக் கண்மணிகள் இனியாவது சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர் .சிந்திப்பார்களா ?அல்லது அவர்களும் சேர்ந்து ஜிங்ச்சா 'கொட்டுவார்களா ?

உணர்வு இதழ்  



No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y