தமிழகத்தில் முஹரம் மாதத்திற்கான பிறை அறிவிப்பு.
தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு :
முஹர்ரம் மாதம் ஆரம்பம்
பிறை தேட வேண்டிய நாளான நவம்பர் 4 ஆம் தேதி திங்கட்கிழமை மஹரிபிற்கு பிறகு
தமிழகத்தில் எந்த பகுதியிலும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை.
எனவே மேகமூட்டமாக இருந்தால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்
என்ற நபி வழியின் அடிப்படையில் துல் ஹஜ் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து,
நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மஹரிபிலிருந்து முஹர்ரம் மாதம் முதல்
பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பு :
வரக்கூடிய முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய பிறைகளில் ( நவம்பர் 14
வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 15 வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் ) நோன்பு
நோற்பது நபி வழியாகும்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்
No comments:
Post a Comment