அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, June 01, 2011

குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தீர்மானிப்பது யார்? திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை

மனித சமுதாயத்தில் பலரும்  தங்களுக்கு  ஆண்குழந்தைதான் வேண்டுமென்று விரும்புவதை பார்க்கின்றோம் மேலும் பெண்குழந்தை பிறந்துவிட்டால் அதனை வெறுப்பதையும் நடைமுறையில் காண்கிறோம்.

ஒரு  தம்பதியருக்கு தொடர்ச்சியாக ஆண்குழந்தை இல்லாமல் பெண்குழந்தையாகவே பிறந்து கொண்டிருந்தாள் அந்த கணவன் தன்னுடைய மனைவியை சடைந்து கொள்வதும், அந்த மணமகனுடைய உறவினர்கள் தங்கள் வீட்டு மருமகளைப் பார்த்து இவள் உனக்கு ஆண்பிள்ளையை பெற்றுத்தரமாட்டாள் நீ வேறு ஒரு திருமணம் செய்துகொள் என்று கூறும் நிகழ்வுகளும் ஆண்பிள்ளை பெற்றுத்தராதால் மனைவியை அடித்து துவைக்கும் கணவன்மார்களையும் நாம் காண்கிறோம்.

இத்தகையவர்களுக்கு ஒரு அடிப்படை அறிவியல் உண்மை விளங்காமல் இருப்பத்துதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமாகும் அந்த அறிவியல் உண்மையை அவர்கள் அறிந்து கொள்வார்களேயானால் அந்த கணவன்மார்களும் அவரின் உறவினர்களும் தங்களை தாங்களே தெரிந்து கொள்ள வேண்டியதுதான் காரணம் என்னவென்றால் ஒரு பெண் பெற்றெடுக்க கூடிய குழந்தை ஆனா பெண்ணா என்பதை தீர்மானிப்பதில் அந்த பெண்ணு எந்த பங்கும் இல்லை என்றுதான் அறிவியல் உலகம் கூறுகிறது அந்த பெண் ஆண்குழந்தையை பெற்றேடுப்பதர்க்கும் பெண் குழந்தையை பெற்றேடுப்பதர்க்கும் ஆணினுடைய விந்தனுவிலுள்ள குரோமசோம்கள் தான் காரணம் என்பதை இன்றைய அறிவியல் உலகம் தெளிவு படுத்துகின்றது. 

 ஒரு கரு உருவாவதற்கு ஆணின் உயிரனும் பெண்ணின் சினைமுட்டையும் இணைய வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் ஐந்து வைத்துள்ளோம் இவ்வாறு ஒரு கரு உருவாவதற்கு 46  குரோமொசொன்கல் தேவை.

அந்த 46  குரோமசோம்களில் 23 குரோமசோம்கள் ஆணுடயதாகும் 23 குரோமசோம்கள் பென்னுடயதாகும்.

இந்த 46  குரோமசோம்களில் ஆணுடைய 22 குரோமோசோம்களும் பெண்ணுடைய 22 குரோமோசோம்களும் ஆக மொத்தம் 44 குரோமோசோம்களும் ஒரே போன்று ஒத்ததாகத்தான் அமைந்துள்ளன கடைசி இரண்டு குரோமோசோம்கள் தான் ஆணா பெண்ணை என்பதை தீர்மானிக்கின்றது.

X  மற்றும் Y என்ற இரு பிரிவுகளாக உள்ள குரோமசோம்களில் பெண்ணிடத்தில் வெறும் குரோமோசோம்கள் மட்டும்தான் உள்ளது ஆணிடத்தில்தான் X  மற்றும் Y என்ற இரெண்டுவகையான குரோமோசோம்கள் உள்ளன.

இப்போது ஆண்குழந்தை பிறப்பதாக இருந்தால் ஆணின் உயிரனுவிலுள்ள Y குரோமோசோமும் பெண்ணிடத்தில் உள்ள X குரோமோசோமும் இணையுமானால் பிறக்கும் குழந்தை ஆண்குழந்தையாக பிறக்கின்றன.

 இப்போது பெண்குழந்தை பிறப்பதாக இருந்தால் ஆணின் உயிரனுவிலுள்ள X குரோமோசோமும் பெண்ணிடத்தில் உள்ள X குரோமோசோமும் இணையுமானால் குழந்தை பெண்குழந்தையாக பிறக்கிறது.

ஆக அறிவியலின் கூற்றுப்படி ஆணுடைய உயிரணுவிலிருந்து X குரோமோசோமும் செல்லுமேயானால் அது ஆண்குழந்தை 
இப்போது சொல்லுங்கள் குழந்தை ஆணாகவும் பெண்ணாகவும் பிறக்க யார் காரணமென்று

இந்த உண்மை தெரியாமல்தான் ஆண்குழந்தை பிறக்கவில்லை எனவே நான் வேறு ஒரு திருமணம் செய்யப்போகின்றேன் என்று நடக்கும் கூத்துகளும்.
.
ஆண்குழந்தை வேண்டுமென்றால் பெண்கள் அதிகமாக வாழைப்பழம் சாப்பிடவேண்டும் என்ற மூட நம்பிக்கைகளும் இந்த கணினி காலத்திலும் மலிந்து கிடக்கின்றன.

இந்த அளவுக்கு அறிவியல் அறிவு அதிகமாக உள்ள காலகட்டத்திலேயே நமக்குத் தெரியாத அறிவியல் உண்மையை இறைவனின் இறுதிவேதமாம் திருக்குர்ஆன் தெள்ளத் தெளிவாக கூறிக் காட்டுகிறது 

அல்லாஹ் கூறுகிறான் 
அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக இருக்கவில்லையா

பின்னர் கருவுற்ற சினை முட்டையானான், இறைவன் படைத்து சீராக்கினான்.

அவனிலிருந்து ஆண் பெண் என ஜோடியை ஏற்படுத்தினான் அல்குர்ஆன் 75:37 

மேற்கண்ட வசனத்தில் விந்தாக இருந்து கருமுட்டையாக மனிதன் உருவானதைப்பற்றி திருமறை அவனிலிருந்து அதாவது அந்த ஆணிலிருந் ஆண் அல்லது பெண் என்ற ஜோடியை ஏற்படுத்துவதாக சொல்லிக்காட்டுகின்றது.

இதிலிருந்து இப்போது மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆராய்ச்சிக்குப் பிறகு சொல்லும் இந்த அறிவியல் உண்மையை திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பதை நாம் அறிகின்றோம்.
 எல்லாப்புகழும் இறைவனுக்கே!
                                        
                                                                                                                                                                       நன்றி : உணர்வு 


No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y