அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, May 31, 2011

ஊட்டியில் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆளுமைத்திறன் மேம்படுத்தும் பயிற்சி முகாம்


கடந்த 2011 மே 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆளுமைத்திறன் மேம்படுத்தும் பயிற்சி முகாம் ஊட்டியில் உள்ள YWCA மஹாலில் சிறப்பாக நடந்து முடிந்தது.
நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் முன்கூடியே மாவட்ட நிர்வாகிகளுக்கு மட்டும் அனுப்பி வைக்கப்பட்டு, இந்த நிகழ்ச்சியில் முழுமையாக இரண்டு நாட்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுவேன் என்ற உறுதிமொழி அடங்கிய போஸ்ட் கார்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டு அதை மாவட்ட நிர்வாகிகள் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அனுப்பிவைக்க, அதனடிப்படையில் முன்கூட்டியே அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் பெயர் மற்றும் பொறுப்புகளுடன் பிரிண்ட் செய்யப்பட்ட நுழைவுச்சீடுக்கள் வழங்கப்பட்ட பிறகே மாவட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சி அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகளை காணும் போதே மாநில நிர்வாகத்தின் திட்டமிடுதலை அறியமுடிந்தது.

நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் தலைமையேற்று இந்த இரண்டு நாள் பயிற்சி முகாம் ஏன் என்பதையும் இந்த பயிற்சி முகாமின் அவசியத்தை விளக்கமாக எடுத்துரைத்தும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
முதலில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.ஐ.சுலைமான் அவர்கள் குர்ஆன் ஹதீஸை மட்டுமே ஏன் பின்பற்ற வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அடுத்ததாக மாநிலச் செயலாளர் யூசுஃப் அவர்கள் தகவல் தொடர்பு கொள்வதில் எத்தகைய வழிமுறைகளை நிர்வாகிகள் கையாள வேண்டும் என்ற செய்திகளைத் தொகுத்து வழங்கினார்.
அதைத் தொடர்ந்து மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுலைமான் அவர்கள் தமுமுக என்ற இயக்கம் தவ்ஹீத்வாதிகளின் ரத்தத்தால் தான் வளர்க்கப்பட்டது என்ற செய்திகளையும், எத்தகைய அடக்குமுறைகளையெல்லாம் தாண்டி தமுமுக என்ற இயக்கத்தை நாம் வளர்த்தோம் என்பதையும் உலக ஆசையின் காரணமாக அவர்கள் எந்த அளவிற்கு தற்போது தடம்புரண்டு சென்றுள்ளார்கள் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் பிரிண்ட் அவுட்களாக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் நிர்வாகம் செய்யும் முறையை நிர்வாகிகளுக்கு விளக்கினார்.
அத்துடன் முதல் நாள் உணவு மற்றும் தொழுகை இடைவேளைக்குப் பிறகு பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தொழுகை செய்முறைப் பயிற்சியை நடத்திக் காட்டினார்.
அதைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் நாம் ஏன் பிற மேடைகளில் ஏறுவதில்லை; பிற கொள்கையுடையவர்களை நம் மேடையில் நாம் ஏன் ஏற்றுவதில்லை என்பதை விளக்கி அதனால் ஏற்படும் விபரீதங்களையும் விவரித்தார்.
அதைத் தொடர்ந்து மாநில துணைப் பொதுச்செயலாளர் சையது இப்ராஹீம் அவர்கள் நம்முடைய ஜமாஅத்திலிருந்து பொருளாதார மோசடி மற்றும் பெண் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கையும் களவுமாக பிடிபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு தூக்கியெறியப்பட்டவரின் தற்போதைய வழிகெட்ட கொள்கைகளை விவரித்தார்.
அதைத் தொடர்ந்து மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் ஹாஜா நூஹ் அவர்கள் ஜாக் என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது முதல் அது வழிகெட்டு எந்த அளவிற்கு தற்போது ஷிர்க் மற்றும் பித்அத்களுக்கு ஆதரவாக நின்று தவ்ஹீத் என்ற பெயரில் மக்களை வழிகெடுத்து வருகின்றது என்பதை ஆதாரங்களுடன் பட்டியலிட்டார். அவர் பட்டியலிட்ட ஆதாரங்கள் அனைத்தும் பிரிண்ட் அவுட்களாக வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து மாநிலத்தலைவர் பீஜே அவர்கள் நாம் ஏன் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கின்றோம்என்ற தலைப்பில் நம் ஜமாஅத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரை இந்த ஜமாஅத்தின் பணிகளில் தங்களை இணைத்துக் கொள்வதின் மூலம் எந்த அளவிற்கு நன்மைகளை அடைந்து கொள்கின்றார்கள் என்பதனைப் பட்டியலிட்டார். இந்த ஜமாஅத்தின் நான்கு விதமான முக்கிய செயல்திட்டங்களை மிக அழகான முறையில் விவரித்தார்.
அத்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.
இரண்டாம் நாள் துவக்கத்தில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடுகள் குர்-ஆன் ஹதீஸில் அடிப்படையில் எடுக்கப்பட்டதன் விபரங்களை விவரித்ததுடன் வரதட்சணை திருமணங்களைப் புறக்கணித்ததன் விளைவாக ஏற்பட்ட கொள்கை உறுதியைத் தெளிவுபடுத்தினார். மேலும் தேர்தலில் போட்டியிட்டால் எந்த அளவிற்கு கொள்கைகெட்டுப் போகவேண்டிய நிலை ஏற்படும் என்பதனையும் விவரித்தார்.
அதைத் தொடர்ந்து காவல்துறையை அணுகும் முறையை மாநிலச் செயலாளர் சாதிக் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
பத்திரப்பதிவு மற்றும் இடம் வங்கும் போது அக்ரிமெண்ட் போடுவதற்குண்டான விதிமுறைகள் மற்றும் வங்கிக் கணக்கு துவங்குதல் போன்றவற்றிற்கான விதிமுறைகளை மாநிலச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் நிர்வாகிகளிடத்தில் விளக்கினார்.
அதைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் பீஜே அவர்கள் நம்முடைய ஜமாஅத்தை நோக்கி பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண பொதுமக்கள் நம்மை அணுகுகின்றார்கள். அந்தப் பிரச்சனைகளில் நிர்வாகிகள் எத்தகைய அணுகுமுறைகளைக் கையாள்வது என்பதனை விவரித்தார். அத்தோடு நிர்வாகிகளிடத்தில் இருக்க வேண்டிய முக்கிய பண்புகளைப் பட்டியலிட்டு இந்தப் பண்புகளை நிர்வாகிகள் வளர்த்துக் கொண்டால் தான் நாம் திறம்பட நிர்வாகம் செய்ய முடியும் என்பதனைத் தெளிவுபடுத்தினார்.
டிரஸ்ட் என்று பதிவு செய்வதால் ஏற்படும் கேடுகளையும், சங்கப்பதிவு மூலம் ஏற்படும் நன்மைகளையும் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பட்டியலிட்டார்.
நலத்திட்ட உதவிகள் குறித்தும் அதனைப் பெரும் வழிமுறைகளையும் ஹாஜா நூஹ் அவர்கள் எடுத்து வைத்தார்கள்.
இறுதியாக தவ்ஹீத் ஜமாஅத் இந்த தவ்ஹீத் எழுச்சிப் பயணத்தை ஆரம்பித்தது முதல் தற்போது எந்த அளவிற்கு எழுச்சி கண்டுள்ளது என்பதனை தணிக்கை குழு உறுப்பினர் அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் எடுத்துக் கூற இரண்டு நாள் தர்பியா நிகழ்ச்சி மிகுந்த மனநிறைவுடன் நிறைவு பெற்றது.
இரண்டு நாட்களுக்கான காலை மற்றும் இரவு சாப்பாடுகளுக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களும், இரண்டு நாட்களுக்கான மதிய உணவுகளுக்கான ஏற்பாடுகளை ஊட்டி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களும் சிறப்பாகச் செய்து கொடுத்திருந்தன.
மேலும், மாநிலத் தலைமையகம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவசியம் கருதி ஏற்பாடு செய்த இந்த மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆளுமைத்திறன் மேம்படுத்தும் பயிற்சி முகாமிற்கு ரியாத் மண்டலம் அறுபதாயிரம் ரூபாயும், தம்மாம் மண்டலம் இருபதாயிரம் ரூபாயும் பொறுப்பேற்றுக் கொண்டு மாநிலத் தலைமையகத்தின் பொருளாதார சுமையை குறைத்து தங்களது பங்களிப்பைச் செய்தனர்.
புதிய விஷயங்கள் பலவற்றைத் தெரிந்து கொண்டு புத்துணர்வு பெற்றவர்களாக மாவட்ட நிர்வாகிகள் திரும்பிச் சென்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y