தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தம்மாம் மண்டலம் சார்பாக கடந்த 27-05-2011 வெள்ளிக்கிழமை அன்று தம்மாம் 1 மற்றும் 2 கிளைகள் சார்பில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாம் தம்மாம் ஜெனரல் ஹாஸ்பிட்டல் உடன் இனைந்து நடத்தப்பட்டது.
காலை சரியாக 8.00 மணிக்கு முகாம் தொடங்கியது . காலை முதலே கொள்கை சகோதரர்கள் குறுதி கொடை அளிக்க படையெடுத்தனர், ஜம்ஆ தொழுகை வரை சுமார் 50க்கும் மேற்ப்படடடோர் இரத்த தானம் செய்தனர்,
ஜூம்மா தொழுகை முடிந்தவுடன் ஏராளமான சகோதரர்கள் தம்மாம் ஜெனரல் ஹாஸ்பிட்டல் வளாகத்தில் குவிந்ததை கண்டு தம்மாம் ஜெனரல் ஹாஸ்பிட்டல் ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் திகைத்து நின்றனர்.. அவர்களின் சிரமத்தை குறைக்க நமது ஜமாஅத்தின் தன்னார்வ தொண்டர்கள் விண்ணப்படிவங்கள் பூர்தி செய்து உதவினர்.
இரத்த தானம் செய்ய மாலை 4 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது, ஆனால் மாலை 4 மணி ஆகியும் சகோரர்கள் இரத்த தானம் செய்ய வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் மருந்தமனையில் இரத்தம் பாதுகாக்க வசதியில்லாததால். சகோரர்களை அடுத்த முகாமில் இரத்தம் அளிக்க வலியுறுத்துமாறு நம்மை கேட்டு கொண்டனர்.
இந்த முகாமில் மட்டும் 170 நபர்கள் கலந்து கொண்டு 157 யூனிட் இரத்தம் கொடையாக வழங்கப்பட்டது.
இதில் பல தேசங்களை சேர்ந்த சகோதரர்கள் மற்றும் மாற்று மத சகோதரர்களும் கலந்து கொண்டு இரத்த கொடையளித்ததுடன், உயிர் காக்கும் பணியை மேற்கொள்ளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மனித நேய பணியை பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ!
இந்த முகாம் தம்மாம் மண்டலம் சார்பாக இந்த ஆண்டின் 4 வது இரத்த தான முகாமாகும். இந்த ஆண்டு மட்டும் தம்மாம் மண்டலம் சார்பாக 460 யூனிட் இரத்தம் தானம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment