கடந்த 15.07.12 அன்று ஞாயிற்றுக்கிழமை இராமநாதபுர மாவட்டத் திலுள்ள மண்டபம் திருப்புலாணி பாம்பன் இராமேஸ்வரம் வேதாளை தங்கச்சிமடம் ஆகிய தமுமுக மற்றும் மமகட்சி கிளைகள் கூண்டோடு கலைக்கப்பட்டு தமுமுக மற்றும் மமக மாநிலச்செயலாளர் சலீமுல்லாகான் (இவர் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் மமக சார்பில் போட்டியிட்டு மமக வேட்ப்பாளர்களிலேயே அதிக வாக்குப்பெற்றவர் சுமார் 23 ஆயிரம் வாக்குகள்) தலைமையில் மற்றும் மமகவின் மாவட்ட செயலாளர் தஸ்ஃபிக் அலி தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் அஜ்மல் மற்றும் எராளமான மமகவினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!
மமகட்சியின்தொடர் சமுதாய துரோகமும் அளவுக்கு மீறி ஆட்சியாளர்களை துதிபாடி ஜால்ரா தட்டி அவர்களுக்கு கூஜா தூக்கும் சங்க்பரிவார கும்பலோடு கைகோர்த்து சமுதாயதிற்கு செய்த துரோகமும்தான் தங்கள் மமகட்சியிளிருந்து கூண்டோடு வெளியேறக் காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அவரது உரைக்குப் பிறகு ஏராளமான் சகோதர்கள் டிஎன்டிஜெயில் இணைந்தனர் மேலும் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மமகட்சின் மாவட்ட துணைதலைவராக இருந்து விலகிய அஜ்மல் அவர்கள் மமகட்சியின் ஜவாஹிருல்ல பிஜேபி தலைவர் இல.கணேசனுடன் கை கோர்த்து போஸ் கொடுத்ததாக வந்த செய்தியை எந்த தமுமுக உறுப்பினரும் நம்பவில்லை இது அப்பட்டமான பொய்யாகத்தான் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம் அவரது புகைப் படத்தை உணர்வில் பார்த்த பிறகு அதிர்ச்சி அடைத்தோம் அதற்க்கு ஜவாஹிருல்லா கொடுத்த விளக்கம் காரித்துப்பும் அளவிற்கு இருந்தது இப்படி இஸ்லாமிய வரைமுறைகளை மீறி இஸ்லாத்தை ஒழிக்க நினைக்கும் இந்த அமைப்பிலிருந்து விலகி இஸ்லாத்தை சரியான வடிவில் எடுத்துவைக்கும் தவ்ஹீத் ஜாமத்தில் நாங்கள் இணைகின்றோம் என்று தெளிவு படுத்தினார்.
மமகட்சியின்தொடர் சமுதாய துரோகமும் அளவுக்கு மீறி ஆட்சியாளர்களை துதிபாடி ஜால்ரா தட்டி அவர்களுக்கு கூஜா தூக்கும் சங்க்பரிவார கும்பலோடு கைகோர்த்து சமுதாயதிற்கு செய்த துரோகமும்தான் தங்கள் மமகட்சியிளிருந்து கூண்டோடு வெளியேறக் காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இராமநாதபுர மாவட்டத்திலுள்ள தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் வைத்து 15.07.12 இஷா தொழுகைக்குப் பிறகு டிஎன்டிஜே மாநிலச்செயலாளர் முஹம்மது யூசுப் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் முன்னிலையில் தங்களை தவ்ஹீத் ஜாமத்தில் இனைதுக்கொண்டண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநிலச்செயலாளர் யூசுப் துவக்கமாக உரை நிகழ்த்தினார் அவர் தனது உரையில் தமுமுக என்ற அமைப்பிலிருந்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற வேறொரு அமைப்பில் தங்கள் இணைவதாக கருதவேண்டாம் தமுமுக என்ற அமைப்பு எந்த கொள்கைக்காக தொடங்கப்பட்டதோ அந்த கொள்கையிலிருந்து தடம் புரண்டு சென்றுவிட்டது அந்த காரணத்தால் தான் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பேரியக்கம் தொடங்கப்பட்டது தற்போது தமுமுக எந்த கொள்கைக்காக அந்தக் கொள்கையை அதைவிட இன்னும் வீரியமாக செயல்படுத்திக்கொண்டிருக்கிற தாய் அமைப்பில்தான் தங்கள் இணைத்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டார்.
2004 ஆண்டு முதல் 2012 ஆண்டுவரை கடந்த எட்டு ஆண்டுகளாக தமுமுகவின் செயல்பாடுகளை நீங்கள் ஆய்வு செய்தலே அவர்கள் எந்த அளவிற்கு நரக படுகுழியை நோக்கி மக்களை அழைத்துக்கொண்டு செல்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம் அதுமட்டுமல்லாமல் அல்லாஹ்வின் கோபத்தையும் சாபத்தையும் பெற்று தரக்கூடிய வேலையை பெற்றுத்தரக்கூடிய வேலைகளைச் செய்துவரும் மமகட்சியினர் இரண்டு சீட்டுக்காகதான் கட்சியை நடத்தும் கேவலமான நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதயும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
அதேநேரத்தில் தங்கள் அனைவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தில் இணைய வேண்டும் என்று வந்துள்ளீர்கள் இது அரசியல் தனமான அமைப்பு அல்ல மறுமையில் அல்லாஹ்விடத்தில் கூலியை பெறவேண்டும் என்ற உயர்ந்த அநோக்கதில் இதில் நாம் பணியாற்றுகின்றோம்
தவ்ஹீத் ஜாமத்தை பொறுத்தவரை கொள்கை ரீதியாக தங்களை எதிர்க்கக் கூடியவர்களை எதிரிகளாகதான் பாவிக்கும் அதே நேரத்தில் திருந்தி வரக்கூடியவர்களை அரவைத்து அவர்கள் மறுமை வெற்றிக்கு உண்டான வழியையும் இந்த ஜமாஅத் கண்பிக்க தவறாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அல்லாஹ்வின் வேதத்தையும் அவனின் தூதருடைய ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலையும் தவிர வேறு எதையும் நாங்கள் பின்பற்ற மாட்டோம் டிஎன்டிஜே தவிர வேறு இயக்கங்களின் உறுப்பினராகவோ ஆதரவாளர்களாகவோ நாங்கள் இருக்க மாட்டோம் என்று உறுதி மொழி அளிக்கக்கூடியவர்கள் இந்த இயக்கத்தில் உறுபினராக இணையலாம் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள் என்பதற்காக மட்டுமே நாங்கள் உங்களை இந்த இயக்கத்தில் இணையச் சொல்லி நிர்பந்திக்கமாட்டோம் என்று தெளிவு படுத்தினார்.
இல.கணேசனுடன் கைகோர்த்த வாத்தியார் |
இதுகுறித்து நம்மிடம் பேசிய சலிமுல்லாகான் அவர்கள் 2004 ம் ஆண்டு தமுமுகவிலிருந்து தவ்ஹீத்வாதிகள் பிரிந்து சென்ற போது நானும் அதிலிருந்து விலகியிருக்க வேண்டும் ஆனால் ஷைத்தான் என்னை வழிகெடுத்துவிட்டான் இஸ்லாத்தை விட்டு வெகு தூரத்திற்கு செல்லக்கூடிய அளவிற்கு இந்த இயக்கத்தின் மூலம் நான் தள்ளப்பட்டுவிட்டேன் இப்படியே சென்றால் என்னை இவர்கள் நரகப்படுகுழியை நோக்கி தள்ளி விடுவார்கள் என்ற அச்ச உணர்வில்தால் இனிமேலாவது திருந்தி இருக்க வேண்டும் என்று விரும்பிதான் மறுமை வெற்றியை குறிக்கோளாக கொண்டு செயல்படும் தவ்ஹீத் ஜாமத்தில் என்னை இணைத்துக் கொள்கிறேன் நான் எப்படி இதை விளங்கிக் கொண்டேனோ அதேபோல மற்ற மக்களுக்கும் இந்த விபரத்தை தெளிவுபடுத்தி எந்த அளவிற்கு மமக என்ற கட்சியில் மக்கள் நரகபடுகுழிக்குச் செல்கின்றார்கள் என்பதை விளக்கி அவர்களையும் நரகபடுகுழியிலிருந்து மீட்டெடுக்கும் எனது பணியை தொடருவேன் என்று நம்மிடம் தெரியப்படுத்தினார்.
நன்றி : உணர்வு
No comments:
Post a Comment