பிரான்சில் கைதுசெய்யப்பட்டுள்ள தீவிரவாதி நியாஸ் அஹ்மதுவின் தாயார் மாயம் என்ற ஒரு பொய் செய்தியை இன்று மாலைமலர் சென்னை பதிப்பில் வெளியிட்டுள்ளது ஆனால் பாத்திமா என்ற அந்த பெண்மணி எங்கும் ஓடிப்போகவில்லை மேலுரிலேயே தான் இருக்கிறார்.
இன்று மே-25 காலை முதலே பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் அவரின் வேதனையான பேட்டியை தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டே இருந்தனர் உண்மை இவ்வாறு இருக்கு இன்று மே-25 மாலை வெளியான இந்த மாலைமலரின் அவதூறு செய்தி மிகவும் கண்டிக்கத்தக்கது நியாஸ் தீவிரவாதியா இல்லையா என்ற சர்ச்சைக்குள் நாம் போக விரும்பவில்லை ஆனால் அடாவடியாக அவரின் தாயாரையும் இதில் சம்பந்தப்படுத்தி தங்களின் சர்க்குலேஷனை அதிகப்படுத்திக் கொள்ள துடிக்கும் இதுபோன்ற பொறுப்பற்ற செய்தி வருத்தம் அளிக்கிறது.
No comments:
Post a Comment